நவம்பர் 19

தோழமை என்றொரு சொல்

தோழமை என்பது குறிப்பாக சமூக லட்சியம் சார்ந்த உறவு முறை
மறைந்த தோழர் ஜெயகாந்தன் அவர்கள் தமது அனுபவங்களை பகிர்ந்த ஒரு எழுத்தில் நான் தேநீர் எடுத்துச் செல்லும் சிறுவனாக கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு சென்ற போது பொதுவுடைமை இயக்க முன்னோடி தலைவர்கள் எல்லாம் என்னை பக்கத்தில் அமர வைத்து தோழரே என்றார்கள். நெகிழ்ச்சியுடன் இவ்வாறு நினைவுகூருவார்.

இந்த மாதத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை

இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 74 ஆயிரத்து 664 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகைத்தந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1,200,119 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்தும் இந்தியாவில் இருந்து வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழில் தொடர்ந்து அரங்கேறும் முச்சக்கர வண்டி சாரதிகளின் அட்டகாசம்

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் செயலி மூலம் ஓடும் சாரதி ஒருவர் மீது தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி அச்சுறுத்தல் விடுத்ததுடன் தாக்குதலும் நடத்தியுள்ளனர்.

வெற்றி பெறாதவர்ளையும் பாராட்டுவோம்

(சாகரன்)

கிரிக்கட் விளையாட்டுப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் கால் பந்தாட்டம் போல் உலகெங்கும் கொண்டாடப்படும் ஆட்டமாக கிரக்கட் இன்னும் வாழ்ந்து கொணடிருக்கின்றது என்பதே உண்மை.

சங்கரய்யா ஒரு நூற்றாண்டின் சகாப்தம்

(சாகரன்)

இந்திய கம்யூனிஸ்ட் உலகத்தின் சகாப்தம் சங்கரய்யா என்றால் மிகையாகாது. இந்தியாவில் இன்னமும் சமூக நீதியும் இட ஒதுக்கீடும் சமத்துவமும் பேசப்படுகின்றது… அவை உயிர்வாழ்கின்றன…. இவை அடுத்த கட்டங்களுக்கு முன்னோக்கி நகர்ந்து செல்கின்றன என்றால் இதற்கான முக்கிய காரணங்களாக இந்த கம்யூனிஸ்ட்கள் திகழ்கின்றனர்.

“தலைவர்கள் ஒற்றுமையாக உள்ளனர்”

ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25-ந்திகதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

பணய கைதிகளை விடுவிக்க நிபந்தனை

ஒக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் அமைப்பினர், ஆயிரத்திற்க்கு மேற்பட்டோரை கொன்று, பலரை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர். இதனை தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக இஸ்ரேல் உறுதி எடுத்து, அவர்கள் ஒளிந்திருக்கும் காசா பகுதி மீது வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல்கள் நடத்தி வருகிறது.

பணய கைதிகளுக்கு ஆதரவாக 2.9 லட்சம் பேர் பேரணி

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வரும்நிலையில் இந்த போரில் இரு தரப்பிலும் பல ஆயிரம் உயிரிழந்து உள்ளனர். மேலும் இஸ்ரேலில் இருந்து காசாவுக்கு 240 பேர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டு உள்ளனர்.

ட்ரூடோவை சுற்றிவளைத்த போராட்டக்காரர்கள்

பலஸ்தீனத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் போர் நிறுத்த கோரி பல நாடுகளில் பலர்  போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்  கனேடிய  பிரதமர்  ஜஸ்டின்  ட்ரூடோ  உணவருந்திக் கொண்டிருந்த  வான்கூவர்  என்ற உணவகத்தை திடீர் என 250 பலஸ்தீனிய  ஆதரவு  போராட்டக்காரர்கள்  சுற்றி  வளைத்து  இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரில்  போர் நிறுத்தம் செய்ய கோரி கோஷம் எழுப்பியுள்ளனர்.

மருத்துவமனைக்குள் இஸ்ரேல் இராணுவம் நுழைந்தது

காசா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், தற்போது ஹமாஸ் அமைப்பினர் எங்கு மறைந்துள்ளனர் எனத் தேடிவருகின்றனர். தொடக்கத்தில் இருந்தே அல் ஷிபா மருத்துவமனையில் ஹமாஸ் அமைப்பினர் மறைந்து இருந்து செயல்பட்டு வருவதாக இஸ்ரேல் இராணுவம் குற்றம்சாட்டியிருந்தது. ஆனால், மருத்துவ நிர்வாகம் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வருகிறது.