ஜனாதிபதி ரணில், மாலைதீவு பயணமானார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று நேரத்திற்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறி மாலைதீவுக்கு பயணித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தீர்ப்பை ஏற்கப் போவதில்லை: மஹிந்த

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தவறாக கையாண்டமைக்கு தானும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பலருமே பொறுப்பு என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யாழ். வந்த விமானம் சென்னைக்கே திரும்பியது

யாழ்ப்பாணம் வந்த விமானம், மோசமான காலநிலையால் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்குத் திரும்பியது. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நோக்கி திங்கட்கிழமை ( 13)  புறப்பட்ட பயணிகள் விமானம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நிலவிய மோசமான காலநிலையால் தரையிறங்க முடியாமல்  சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் தரையிறக்கப்பட்டது.

மயிலத்தமடு மாதவனை பகுதியில் அத்துமீறி குடியேறியோரை வெளியேறுமாறு உத்தரவு

மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை பகுதியில் அரச காணியில் அத்துமீறிய குடியேறியவர்களை வெளியேறுமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி அன்வர் சதாத், திங்கட்கிழமை (13) உத்தரவிட்டுள்ளார்.

கந்தளாயில் நில அதிர்வு

திருகோணமலை மாவட்டம் கந்தளாய் பிரதேசத்தில் இன்று (12) மதியம்  சிறிய அளவிலான நில அதிர்வு உணரப்பட்டதாக கந்தளாய் பிரதேசவாசிகள் தெரிவித்தனர். கந்தளாய் குளத்திற்கு அருகேயுள்ள கோயில் கிராமம்,முள்ளிப்பொத்தானை  அண்டிய பிரதேசங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக   பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

ஐஸ்லாந்தில் 1400 நிலநடுக்கம்: அவசர நிலை பிரகடனம்

ஐஸ்லாந்தின் தென் மேற்கு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் தொடர்ந்து சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன 24 மணி நேரத்தில் சுமார் 1400 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் மிகப்பெரிய நிலநடுக்கமானது 5.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

“DJ night” நிகழ்வு: நடந்தது என்ன?

எமது ஹோட்டலில் “DJ night” நிகழ்வு முடியும் வரை எந்தவிதமான அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை என்றும் நிகழ்வு முடிந்த பின் வந்திருந்தவர்கள் அமைதியாக வெளியேறிச் சென்றனர் என ரில்கோ ஹோட்டல் முகாமைத்துவம் விளக்கமளித்துள்ளது.

காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

எதிர்வரும் தினங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று (12) பிற்பகல் 1.00 மணி முதல் நாளை (13) பிற்பகல் 1.00 மணி வரை அமுலில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

“பழிவாங்கவே நாடு திரும்பினேன்”

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் கடந்த மாதம் 29-ந்திகதி நடந்த குண்டுவெடிப்பில் 3 பெண்கள், 12 வயது சிறுமி என 4 பேர் பலியாகினர்.

காசாவில் 50 ஆயிரம் பேருக்கு 4 கழிவறைகள்: செவிலியர் தகவல்

காசா நிவாரண முகாம்களில் பணிபுரிந்துவிட்டு கடந்த வாரம் அமெரிக்காவுக்குத் திரும்பிய செவிலியர் ஒருவர், தனது சக ஊழியர்கள் குறித்தும், தன்னுடைய பணி அனுபவம் குறித்தும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.