இலவச விசா குறித்து ஆராய குழு நியமனம்

இலவச சுற்றுலா விசாக்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்காக இலங்கை அரசாங்கம் ஒரு நிபுணர் குழுவை உருவாக்கியுள்ளது.

ஏப்ரலில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி

இந்த ஆண்டு முதல் தடவையாக சர்வதேச சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 200,000க்கு கீழ் வீழ்ச்சியடைந்ததன் மூலம் இலங்கை சுற்றுலாத்துறை ஏப்ரல் மாதத்தில் வேகமான வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மொத்தம் 148, 867 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) தற்காலிகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது முந்தைய ஆண்டின் இதே மாதத்தை விட 41 சதவீதம் அதிகமாக இருந்தாலும், கடந்த மாதத்தில் (மார்ச்) பதிவு செய்யப்பட்ட 209,181 சுற்றுலாப் பயணிகளின் வருகையை விட இது குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகும்.

மின் கட்டணத்தை 20% குறைக்க பரிந்துரை

மின்சார சபையில் கடந்த மூன்று மாதங்களில் ரூ. 8,200 கோடி இலாபம் ஈட்டியதால், பொருளாதார நெருக்கடியைக் குறைப்பதற்காக துறைசார் மேற்பார்வைக்கான பாராளுமன்றக் குழுவானது மின் கட்டணத்தை மேலும் 20 சதவீதம் குறைக்க பரிந்துரைத்துள்ளது.

தோழரின் மறைவு

யாழ்ப்பாணம் இளவாலை பிரதேசத்தில் 1983,84,85,86ம் ஆண்டுகளில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அரசியல் வேலைத் திட்டங்களில் பிரதான பாத்திரத்தை வகித்த தோழர் ரணிஸ், பின்னர் பிரான்ஸில் புலம் பெயர்ந்து வாழ்ந்த கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக எம்மோடு இணைபிரியா தோழனாக செயலாற்றி வந்தார். தெளிவான அரசியல் சமூக சிந்தனையாளனாகவும் தீர்க்கமான செயற்பாட்டாளனாகவும் எம்முடன் எல்லா நெருக்கடியான காலகட்டத்திலும் நம்பிக்கையோடு பங்களித்த தோழன் ரணிஸின் இழப்பு நெஞ்சத்தால் ஏற்க முடியாததாக உள்ளது. இறுதி நித்திரையில் ஆழ்ந்து விட்ட தோழனுக்கு சிரம் தாழ்த்தி அஞ்சலி செலுத்திடுவோம்.

இலங்கை அரசியல் கட்சிகளுக்கு பாஜக அழைப்பு

இந்தியாவில் லோக்சபா தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) பிரதிநிதிகளை அங்கு தேர்தல் நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வை பெற அழைப்பு விடுத்துள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மோடி ஆதரிக்கும்: பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா தேடப்படும் குற்றவாளியாக பிரகடனம்

இந்தியாவையே உலுக்கிய பாலியல் புகாரில் சிக்கிய, பிரஜ்வல் ரேவண்ணாவை, தேடப்படும் குற்றவாளியாக எஸ்ஐடி பிரகடனப்படுத்தியுள்ளது.

கன மழை: துபாய் விமானங்கள் இரத்து

ஐக்கிய அரபு எமிரேட்டில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததால் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. பாலைவன நகரமான துபாயில் கடந்த மாதம் 14ஆம் திகதி கன மழை கொட்டி தீர்த்தது. 75 ஆண்டுகளில் இல்லாத வகையில் பலத்த மழை பெய்தது. ஒரு ஆண்டில் பெய்யக்கூடிய மழை ஒரே நாளில் பெய்ததால் துபாயில் உள்ள விமான நிலையம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

உரிமைக்குரல்கள் ஒலிக்காது மௌனிக்கும் உழைப்பாளர் தினம்

வருடம் முழுதும், ‘மாடாய் உழைத்து ஓடாய்த் தேயும்’ தொழிலாளர்கள், தங்களுடைய உரிமைகளை வென்றெடுப்பதற்காக, உரத்துக் குரல்கொடுக்கும் தினமான உழைப்பாளர் தினம் (மே 1),  பல கோரிக்கைகளுடன் இன்று(01) உலகளவில் கொண்டாடப்படுகின்றது.

உமாஓயா திட்டத்தினால் 80 மில்லியன் ரூபா சேமிப்பு

 உமாஓயா அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மின்சார சபைக்கு நாளொன்றுக்கு 80 மில்லியன் ரூபா சேமிக்கப்படும் என அதன் திட்டப் பணிப்பாளர் சுதர்ம எலகந்த தெரிவித்துள்ளார்.