கொத்து, ரைஸ் மற்றும் சிற்றுண்டிகளின் விலை குறைப்பு

எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், உணவு வகைகளின் விலைகளை குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

காசா நான்கு தசாப்தங்கள் பின்நோக்கி நகர்வு

இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம் காரணமாக கடந்த நாற்பது வருட காலமாக கல்வி, சுகாதாரம் அடங்கலாக சகல மனித அபிவிருத்தி பிரிவுகளிலும் காசா எல்லைப் பகுதியில் வசித்த மக்கள் பெற்றுக் கொண்ட முன்னேற்றம் இதுவரையில் அவர்களுக்கு இல்லாமல் போயுள்ளதுடன், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மீண்டும் 1980 ஆம் ஆண்டை நோக்கி பின்னடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் அரபு நாடுகளுக்கான வலய பணிப்பாளர் அப்துல்லா அல் தர்தாரி குறிப்பிட்டுள்ளார்.

“ரூ. 1,700 ஐ வழங்க முடியாது”

பெருந்தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபாய் வழங்குவது தொடர்பில் புதன்கிழமை (1) வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், தம்மால் நாளாந்த சம்பளமாக ரூ. 1700 ஐ வழங்க முடியாதென பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இலங்கையிற்கு விசா வழங்கும் இந்திய தனியார் நிறுவனத்தால் குழப்பம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசா வழங்கும் நடைமுறை மே.1 ஆம் திகதி முதல் இந்திய தனியார் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதால், அன்றையதினம் (மே.1)  மாலை 05.00 மணி முதல் அவர்களால் கணினிகளை சரியாக இயக்க முடியவில்லை, இதனால் விமான பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.