தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் கிடைத்தது

1,700 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் இன்று (10) முதல் முறையாக மாத்தளை எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானை வென்ற இந்தியா

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அமெரிக்காவின் நியூ யோர்க்கில் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற பாகிஸ்தானுடனான குழு ஏ போட்டியில் இந்தியா வென்றது.

நியூயோர்க் ஆடுகளத்தில் என்னதான் பிரச்சினை?

அமெரிக்காவில் கிரிக்கெட்டைப் பிரபலப்படுத்தினால் நிதியளவில் ஐசிசி பலமடையும் என்ற கணக்கில் டி20 உலகக் கோப்பையின் முக்கியமான போட்டிகள் சிலவற்றை அமெரிக்காவில் நடத்த ஐசிசி எடுத்த முடிவினால் டி20 கிரிக்கெட்டுக்கு சற்றும் தொடர்பற்ற ஆடுகளத்தில் போய் முடிந்துள்ளது.

டொறன்டோவில் புதுவகை உயிர்கொல்லி ஆபத்து

கனடாவின் டொறன்டோவில் உயிராபத்தான பக்றீரியா தொற்று குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  டொறன்ரோவின் பொதுச் சுகாதார அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமித் ஷா, நிர்மலாவுக்கு மீண்டும் அமைச்சுக்கள்

நரேந்தி மோடி நேற்று மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவரது தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.

“IMF நிபந்தனைகளில் 25 சதவீதம் நிறைவேற்றப்படவில்லை”

இலங்கையில் நல்லாட்சி முறையினை மேம்படுத்துவதன் மூலம் சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தினை வெற்றிகரமானதாக மாற்ற முடியும் என்று திட்டமிடப்பட்டிருந்தது நடக்குமா? ஜூன் 12ம் திகதி சர்வதேச நாணயநிதியம் (IMF)  நடைமுறைத்திட்டத்தின் மூன்றாவது பணக் கொடுப்பனவிற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளது.

ஓகஸ்டில் மோடி வருகிறார்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள் இங்கு செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது

போக்குவரத்து அமைச்சருடனான கலந்துரையாடலின் பின்னர், வேலை நிறுத்தத்தை கைவிட ரயில்வே தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. போக்குவரத்து அமைச்சர்  பந்துல குணவர்தன மற்றும் ரயில் சாரதிகள் தொழிற்சங்கங்களுக்கு இடையிலான இந்த கலந்துரையாடல் போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்றுள்ளது. இரண்டாம் வகுப்பு பதவி உயர்வு தாமதம், ஆட்சேர்ப்பு தாமதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, குறித்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

விரைவில் பயன்பாட்டுக்கு வரும் கன்னியாகுமரி கடல் பாலம்

கன்னியாகுமரியில், கடலில் உள்ள திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் நினைவு பாறையையும் இணைப்பதற்கான கடல்சார் பாதசாரிகள் பாலம், விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நாளை முதல் மீண்டும் காலநிலையில் மாற்றம்

நாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் தற்போது நிலவும் மழை நிலைமை நாளையிலிருந்து (08 ஆம் திகதி) அடுத்த சில நாட்களுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.