மற்றுமொரு படியெடுப்பாக தமிழ்த் தேசியப் பேரவை

 (லக்ஸ்மன்)

ஜனாதிபதி தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்துக்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் சிவில் அமைப்புகளினால் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்காகச் செயற்படுவதற்கான அமைப்பினை ஏற்படுத்திக்கொள்வதில் கடந்த மாதத்தில் மக்கள் அமைப்பாக அறிவிக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் பொதுச் சபை மீண்டும் ஒரு பெயர் மாற்றத்திற்கு உட்பட்டு தமிழ்த் தேசியப் பேரவையாக இறுதிப் படியாக அறிவிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் மாற்றம் ஏற்படாமலிருக்கும் என்று சொல்ல முடியாது.