சீதாராம் யெச்சூரி: இந்தியாவின் பன்முகத் தன்மை ஒருமைப்பாடு மதச்சார்பின்மை ஜனநாயகப் பண்பு போன்ற அடையாளதின் கூறு

(தோழர் ஜேம்ஸ்)

இந்திய தேசத்தின் ஜனநாயகத்தில் கம்யூனிஸ்ட் களின் பங்கு மகத்தானது.
அது இன்று வரை தொடர்கின்றது.


தேர்தல் அசியலில் பாராளுமன்றதில் மாநிலங்கள் அவை என்றாக பிரதிநிதித்துவங்கள் அதிகம் அவர்கள் தற்போதைய காலத்தில் அதிகம் பெறாவிட்டாலும் அவர்களின் பலம் இன்னும் இந்த ஜனநாயகத்தில் அரசியலில் அதிகம் இருந்து கொண்டுதான் இருக்கின்றது.

“இரட்டை கோபுரத் தாக்குதல்” விண்வெளி புகைப்படத்தை வெளியிட்ட நாசா

அமெரிக்காவில் நிகழ்ந்த இரட்டை கோபுரத் தாக்குதல் தொடர்பாக விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக்குறைவு காரணமாக இன்று (12) வியாழக்கிழமை காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 72.

நாமலின் அரசாங்கத்தில் மஹிந்தவுக்கு பிரதமர் பதவி

ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றி பெற்றால், பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதேநேரம் தாம் வெற்றி பெற்றால் எதிர்வரும் 22ஆம் திகதியே பாராளுமன்றம் கலைக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். தமது தரப்பினரின் ஒத்துழைப்புடன் இடைக்கால அமைச்சரவை ஒன்று உருவாக்கப்படும் என நாமல் மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு இணைக்கப்படாது – நாமல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) அரசாங்கத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு இணைக்கப்படாது, அதேவேளை பொலிஸ் அல்லது காணி அதிகாரங்கள் இந்தப் பகுதிகளுக்கு வழங்கப்படாது என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதிபர் அடித்ததில் ஏழு மாணவர்களுக்கு காயம்

பாடசாலையின் அதிபரினால்  கடந்த சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்வி கருத்தரங்குக்கு செல்லாத ஏழு  மாணவர்களை பிரம்பால்  தாக்கியதாகவும் இதனால் அவர்கள் நடக்க கூட முடியாது உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது. 

வடக்கு புகையிரத பாதையை திறக்க வேண்டாம் என முறைப்பாடு

வடக்கு புகையிரத மார்க்கத்தின் அனுராதபுரம் முதல் மஹவ வரையிலான புகையிரத பாதையைத் திருத்தும் பணிகளை உரிய முறையில் பூர்த்தி செய்யாமல், அதை திறப்பதை இடைநிறுத்துமாறு கோரி லொகோமோட்டிவ் இயக்குநர்கள் பொறியியலாளர்கள் சங்கம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. 

PAYE வரியை குறைக்க அரசாங்கம் தீர்மானம்

PAYE வரியை  (உழைக்கும் போது செலுத்தும் வரி) குறைக்கும் பிரேரணை எதிர்வரும் வரவு செலவு திட்ட பிரேரணையில் உள்ளடக்கப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதுதொடர்பான பிரேரணையை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பித்து அதற்கான இணக்கத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வாகன இறக்குமதி முழுமையாக நீக்கப்படும்

2025 பெப்ரவரி மாதத்திற்குள்ள வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படும் என வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி தமது X தளத்தில் தெரிவித்துள்ளார். அந்நிய செலாவணி கையிருப்பு முன்னேற்றம் மற்றும் ரூபாவின் பெறுமதி ஆகியவற்றை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த தீர்மானத்திற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டார்.