சஜித்துக்கே ஆதரவு – உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க மேற்கொண்ட தீர்மானத்தில் மாற்றங்கள் இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் அறிக்கையொன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளார். 

98 சதவீத தபால் மூல வாக்குகள் பதிவு

ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்களிப்பு தொடர்பான தபால் திணைக்களத்தின் பணிகள் இறுதிக் கட்டடத்தை அடைந்துள்ளன என பிரதி தபால் மா அதிபர் ராஜித் கே. ரணசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

IMF நிபந்தனைகளை மீறினால் என்ன நடக்கும்: எச்சரிக்கின்றார் ரணில்

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மீறுவது நாட்டில் மீண்டும் பணவீக்கத்தை அதிகரிக்கும் என ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர்கள் குறித்து வெளியிடப்பட்ட புதிய செய்தி

ஜனாதிபதி தேர்தலுக்காக 19 ஜனாதிபதி வேட்பாளர்கள் எந்தவொரு பிரச்சார நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

நல்லூர் ​தேருக்கு சென்றவர்களின் கவனத்துக்கு

நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழாவின்போது பக்தர்களால் தவறவிடப்பட்ட, இன்னமும் உரிமை கோரப்படாத பொருட்கள் யாழ். மாநகர சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அனுரவிடம் 2 கேள்விகளை கேட்கிறார் ரணில்

திசைகாட்டியின் பொருளாதாரக் கொள்கை, ஏற்றுமதிப் பொருளாதாரமா அல்லது இறக்குமதிப் பொருளாதாரமா என்ற தனது கேள்விக்குப் பதிலளிக்காத அனுரகுமார திஸாநாயக்க, தன்னை விவாதத்திற்கு அழைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

தகுதி தராதரம் பாராது தண்டனை:சஜித்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்குமிடையிலான. விசேட சந்திப்பொன்று கொழும்பு பேராயர் உத்தியோகபூர்வ இல்லத்தில் புதன்கிழமை (11) இடம்பெற்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு வாக்குறுதியளித்தார். எமது ஆட்சியில், தகுதி தராதரம் பாராது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிக்கு உரிய தண்டனையைப் பெற்றுக் கொடுப்போம் என்றார்.

எந்த வரிசையில் நிற்பது

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு எதிர்வரும் 21ஆம் திகதியன்று காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரையிலும் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைக்கும் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் (பகுதி 2)

(தோழர் ஜேம்ஸ்)

பொதுவாக உலகெங்கும் நடைபெறும் தேர்தல்கள் இரு முனைப் போட்டியாக அமைவதே வழக்கம்.

அதுவும் இலங்கையில் இதுவரை அவ்வாறுதான் அதிகம் ஆதிகம் செலுத்தி வந்திருக்கின்றது.

சிறப்பாக ஐக்கிய தேசியக் கட்சி சிறீலங்கா சுதந்திரக்கட்சி அது பின்பு மொட்டாகி மலர்ந்தது வேறு விடயம்.

13 குறித்து ஐ.நா வில் இந்தியப் பிரதிநிதி வலியுறுத்தல்

அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாகவும், மாகாணசபைத்தேர்தல்களை விரைவாக நடத்தி மாகாணசபைகளை இயங்கச்செய்வதன் ஊடாகவும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பமுடியும் என ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.