ஷானி அபேசேகர குற்றப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டமை அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல் என ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று தெரிவித்துள்ளார்.
Month: October 2024
”வரிப் பணத்தை மீட்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்”
ரூ. 3.5 பில்லியன் வரி செலுத்தத் தவறியதற்காக ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள டபிள்யூ.எம்.மென்டிஸ் அன்ட் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் செலுத்த வேண்டிய வரிப் பணத்தை மீட்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் இன்று தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சி நிர்வாகத்துக்கு தடை கோரி வழக்கு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர், பதில் பொதுச்செயலாளர், நிர்வாகச் செயலாளர் ஆகியோர் அந்த பதவியை வகிக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும், 2024 ஜனவரி மாதத்தின் பின்னர் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானங்களை சட்டவலுவற்றதாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினரான மார்க்கண்டு நடராசா வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
அதில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பதில் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம், நிர்வாகச் செயலாளர் சேவியர் குலநாயகம் ஆகியோர் எதிராளிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு – கோட்டைக் கல்லாறைச் சேர்ந்த முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா என்பவரால் கடந்த 10 ஆம் திகதி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது
சட்டவிரோதமாக தங்கியிருந்த சீனப் பிரஜைகள் கைது
எத்துல் கோட்டே வீட்டுத் தொகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த நான்கு பெண்கள் உட்பட 15 சீன பிரஜைகள் நேற்று (13) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமையுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.