முன்னாள் எம்.பி சேகு இஸ்ஸதீன் காலமானார்

இலங்கை முஸ்லிங்களின் மூத்த அரசியல் தலைமையும் முஸ்லிம் தேசியக்குரலுமான,எழுத்தாளர்,கவிஞர், வேதாந்தி சேகு இஸ்ஸதீன் காலமானார். சிறிது காலம் நோய் வாய்ப்பட்டிருந்த அவர் அக்கரைப்பற்றில்  காலமனார்.

வெள்ளத்திலிருந்து தப்பிக்க வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை

முல்லைத்தீவு இளங்கோவபுரத்தில் வெள்ளத்தில் இருந்து தப்பிக்க வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு விடப்பட்டது.

அதானி விவகாரத்தால் பாராளுமன்றத்தில் அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு

கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு அதானி விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. தொடர் அமளி காரணமாக பாராளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

கிழக்கு பல்கலைக்கழக விடுதிகள் மூடப்பட்டன

சீரற்ற காலநிலை காரணமாக கிழக்குப் பல்கலைக் கழகத்தின் விடுதிகள் புதன்கிழமை (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டு மாணவர்கள் தமது வீடுகளுக்கு அனுப்பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக் கழக பதிவாளர் அமரசிங்கம் பகிரதன் தெரிவித்தார்.

இரண்டு அஞ்சல் ரயில்களும் இரத்து

மலையக ரயில் தண்டவாளங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், புதன்கிழமை  (27) இயக்கப்படவிருந்த கொழும்பு – கோட்டை – பதுளை மற்றும் பதுளை – கொழும்பு ஆகிய இரண்டு இரவு நேர அஞ்சல் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த இரண்டு அஞ்சல் ரயில்களும் நேற்றும் (26)  ரத்து செய்யப்பட்டன.

6 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன

கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (26) இரவு பெய்த கடும் மழை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த 06 விமானங்கள் மத்தள மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘களத்துக்குச் செல்லுங்கள்”

தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாக கொண்டுச் செயற்படமால் அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ள பிரதேசங்களுக்குச்  சென்று தகவல்களை பெற்றுக்கொண்டு, மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்தார்.

இம்ரான்கானை விடுவிக்க கோரி பேரணி: வெடித்தது கலவரம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை (வயது 72) விடுதலை செய்யுமாறு, இம்ரான்கானின் ஆதரவாளர்கள்  வலியுறுத்தி வருகின்றனர்.  அதன் ஒருபகுதியாக, தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பேரணி நடத்த இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

உருகுவே ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி அமோக வெற்றி

உருகுவே ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. உருகுவேயின் ஜனாதிபதி லூயிஸ் லக்கால் போவின் (வயது 51) பதவிக்காலம் விரைவில் முடியவுள்ள நிலையில், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க அங்கு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.