மயோட்டே தீவில் புயல்:11 பேர் பலி; 200 பேர் படுகாயம்

இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள  மயோட்டே தீவை, ஞாயிற்றுக்கிழமை (15),  “சிண்டோ” என்ற புயல் தாக்கியது. கனமழையுடன் வீசிய இந்தப் புயலால், பல வீடுகள் சேதமடைந்தன. மின்கம்பங்கள், சாலைகள், கட்டிடங்கள் உள்பட பல்வேறு உள்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.  இந்தப் புயலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர் என்றும், 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்றும் முதல் கட்ட தகவல் வெளியானது.

அனுராவின் இந்திய விஜயம்

இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி தங்கியிருக்கும் புதுடில்லி ITC MAURYA ஹோட்டலுக்கு வருகைத் தந்த இந்திய நிதி மற்றும் நிறுவன அலுவல்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் (Dr.S. Jaishankar), மற்றும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினர்.

“ மலையகம் 200க்கு அப்பால்… ”

பெருந்தோட்டங்களில் பதிவு செய்யாத (கைக்காசு)தொழிலாளர்களை வைத்து   தோட்ட கம்பனிகள் எப்படி சூட்சுமமாக லாபம் உழைத்து வருகிறார்கள், வேலைக்கு தொழிலாளர்கள்  இல்லை என்பது பொய் கதை -பெருந்தோட்டங்கள்  தொடர்ந்தும் இயங்கும்” பேராசிரியர்  சந்திரபோஸ்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை “நிறுத்த உதவுங்கள்”

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி, ஏற்றுக்கொண்ட சீடோ சமவாயத்தின் அடிப்படையில் புதிய சட்டமூலத்தை கொண்டுவருவதன் ஊடாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் பாரபட்சங்களையும் நிறுத்த உடனடியாக உதவுங்கள் என கிழக்கு மாகாண பெண் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அமைப்பு ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.

இந்தியாவுக்கு புறப்பட்டார் ஜனாதிபதி

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க,  இந்தியாவுக்கு இராஜதந்திர விஜயத்தை மேற்கொண்டு சற்றுமுன் புறப்பட்டுச் சென்றார் . ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவரான ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, மேற்கொள்ளும் முதலாவது இராஜதந்திர விஜயமாகும்.

ஐந்து பிரதி அமைச்சர்கள் நியமனம்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போது முக்கிய அமைச்சுக்களை மேற்பார்வையிட ஐந்து பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

மொழிப் பிறந்த கதை – தமிழும் மலையாளமும்

மலையாளம் என்ற சொல், தொடக்கத்தில் நாட்டின் பெயராக மட்டுமே வழங்கியது. மொழிக்கு முதலில் மலையாண்ம’ அல்லது மலையாய்மா’ என்ற பெயர் வழங்கி வந்தது.

இந்திய உயர்ஸ்தானிகர் பிரதமருடன் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று வெள்ளிக்கிழமை   பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.  இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் மூலோபாய கூட்டாண்மையை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது. தற்போது பல்வேறு அபிவிருத்தி நிலைகளில் உள்ள பல இருதரப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இந்த கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையில் மாற்றம்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை 60ஆக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயரடுக்கு பாதுகாப்பு குழு கூடி அவ்வப்போது பாதுகாப்பு அதிகாரிகளை திருத்த நடவடிக்கை எடுப்பதாகவும், பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எலிக் காச்சலால் 58 பேர் பாதிப்பு: 7 பேர் பலி

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இதுவரை எலிக் காச்சல் நோயினால் 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.