இறக்குமதி செய்யப்படும் அரிசி கையிருப்பு, எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுவதாக, விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். மேலும், பண்டிகைக் காலங்களில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார். நெல் அறுவடை அடுத்த மாத இறுதியில் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார்
Month: December 2024
முட்டை – கோழி இறைச்சியின் விலையில் மாற்றம்?
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை மற்றும் இறைச்சியைத் தட்டுப்பாடின்றி மக்களுக்கு வழங்க முடியும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம் வரை முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையில் மாற்றம் இருக்காது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
தேங்காய் விலை மேலும் உயரும்?
தமிழ் பேசும் மக்களின் சகோதரத்துவத்தை தாங்கிச் சென்ற பெருமகனார் சேகு இஸ்ஸதீன்
சட்டவிரோத வாகன இறக்குமதி குறித்து சுங்கத் திணைக்களத்திடம் விசாரணை
’’இன முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சி’’
வடக்கு , கிழக்கில் இடம்பெற்ற மாவீரர் தின அனுஸ்டிப்புக்களை திட்டமிட்ட வகையில் திரிபுபடுத்தி வடக்கு – தெற்குக்கிடையில் இனவாத முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் புகைப்படம் மற்றும் காணொளிகளை பதிவேற்றம் செய்தவர்களில் இருவர் புதிய ஜனநாயக முன்னணியின் செயற்பாட்டாளர்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
தென்கொரியாவில் அவசரநிலை பிரகடனம்: ஒரே நாளில் வாபஸ்
மூன்று சட்டமூலங்களை சமர்ப்பிக்க திட்டம்;நீதியமைச்சர்
திருடப்பட்ட சொத்துக்களை மீளப்பெறுதல், பணமோசடி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் மூன்று சட்டமூலங்களை அடுத்த வருடத்தின் முதல் காலாண்டுக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று தெரிவித்தார்.
பெண் பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவி சரோஜா சாவித்திரி போல்ராஜ்
பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் முதல் தடவையாகப் பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) கூடியது. இதில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஹேமாலி வீரசேகர, பாராளுமன்ற செயலாளர் நாயகமும், ஒன்றியத்தின் செயலாளருமான குஷானி ரோஹனதீர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அரசாங்க கொள்கை அறிக்கை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நவம்பர் 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்க கொள்கை அறிக்கை மீதான தீர்மானம் இன்று பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அரசாங்க கொள்கை அறிக்கை மீதான விவாதம் நேற்று காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் இன்று காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும் இரண்டு நாள் விவாதமாக நடைபெற்றது.