சுரங்கத்துக்குள் வெள்ளம்:15 தொழிலாளர்கள் சிக்குண்டுள்ளனர்

அசாமில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் வெள்ளம் சூழ்ந்ததில், 15 தொழிலாளர்கள் சிக்கி கொண்டுள்ளனர். அசாமின் மலைப்பிரதேச மாவட்டங்களில் ஒன்றான திமா ஹசாவோவில் உள்ளடங்கிய பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயற்பட்டு வருகிறது.  இதில், வேலை செய்து வந்த தொழிலாளர்களில் 15 பேர் வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டனர்.

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நேபாள எல்லைக்கு அருகில் உள்ள திபெத்தில் இன்று (07) காலை 7.1 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அந்த நாட்டு நேரப்படி இன்று காலை 06.50 மணியளவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக காத்மாண்டுவில் உள்ள தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது. இந்த நில அதிர்வின் தாக்கம்  பீகார் மற்றும் அசாம் உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. 

04 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன

கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (07)  தரையிறங்க வந்த 04 விமானங்கள், அடர்ந்த கடும் பனிமூட்டம் காரணமாக  கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதையை சரியாக பார்க்க முடியாததால் மத்தள மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. 

காத்தான்குடியில் 97 பேர் கைது

குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட 97  பேர் காத்தான்குடி பொலிஸார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்

21/4 தாக்குதல்: 747 பேர் கைது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு மேலதிகமாக சனல் 4 ஊடகத்தில் வெளியான தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

விருந்துபசார செலவு: பாராளுமன்றம் விளக்கம்

“பாராளுமன்றத்தின் முதலாவது நாள் அமர்வின் பின்னர் நடத்தப்பட்ட தேநீர் விருந்தின் உண்மையான செலவு” என்ற தலைப்பில் வெளியான ஊடகச் செய்தி பற்றியது என்ற தலைப்பில், பாராளுமன்ற தொ​டர்பாடல் திணைக்களம் விளக்க அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. 

சர்ச்சைக்குரிய வழக்குகள்: சட்டமா அதிபருக்கு ஜனாதிபதி ஆலோசனை

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சட்டமா அதிபர்  உள்ளிட்ட சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு  திங்கட்கிழமை (06) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

”இலங்கை மக்களின் பொது பாதுகாப்பு பெரும் ஆபத்தில் உள்ளது”

இலங்கை பிரஜைகளுக்கான டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்குவதை இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கும் அரசாங்கத்தின் முடிவு குறித்து மக்கள் போராட்ட முன்னணி கவலை வெளியிட்டுள்ளது.

நுண்நிதிக் கடன் வலையில் சிக்கி 200 பெண்கள் மரணம்

இலங்கையில் கடந்த சில வருடங்களில் நுண்நிதிக் கடன் வலையில் சிக்கிய சுமார் 200  பெண்கள்  தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளதாகத் தேசிய மகளிர் ஒன்றியத்தின் தலைவி ஹாஷினி சில்வா தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் இலக்கை வெற்றி கொள்வதில் இலங்கை நம்பிக்கை கொண்டுள்ளது

ஏற்கனவே IMF கணிப்புகளுக்குக் கீழே கடன்-ஜிடிபி விகிதம்
பொருளாதார வளர்ச்சி, கரன்சி உயர்வு கடன் சுமையை குறைக்கலாம்
2032 ஆம் ஆண்டளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் செலாவணி செயல்திறன் ஆகியவற்றுடன் கடனுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை 95% க்கும் குறைவாக செலுத்த முடியும் என்று இலங்கை நம்புகிறது, ஏனெனில் கடன் ஏற்கனவே தேவையான அளவை விட குறைந்துவிட்டது.