உள்ளுர் ஆட்சித் தேர்தலும்… உற்பத்தியும்

(தோழர் ஜேம்ஸ்)

உள்ளுர் ஆட்சித் தேர்தல் பரப்புரைப் பரபரப்பு இலங்கை எங்கும் சூடு பிடித்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியிடம் தமது வாக்குகளை பறிகொடுத்த அனைவரும் இந்த தேர்தலில் சிறிதளவையேனும் திருப்பி பெறுதல் என்பதாகவே வியூகம் அமைத்து தேர்தலில் அதிகம் ஈடுபடுகின்றனர்.

பெண் வேட்பாளர்களுக்கு சிறப்புத் திட்டம்

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க சிறப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இணையம் மற்றும் சமூக ஊடக தளங்களில் நிகழும் வன்முறைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் சரோஜா சாவித்திரி பால்ராஜ் தெரிவித்தார்.

முதியோர், பயனாளர்களின் கொடுப்பனவை அதிகரிக்க திட்டம்

முதியோருக்கான கொடுப்பனவு மற்றும் பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

முதன்முதலாக இலங்கை டின் மீன் ஏற்றுமதி

முதன்முதலாக , இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் டின் மீன் ஏற்றுமதி தொகுதி நேற்று மதுரங்குளியவில் உள்ள ஓஷன் ஃபுட் தொழிற்சாலை வளாகத்தில் அதிகாரப்பூர்வமாக கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள் வேகமாக முன்னேறி வருகின்றன, இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னர் பல பொறுப்பான நபர்கள் அம்பலப்படுத்தப்படுவார்கள் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இன்று மாத்தறையில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி, நீதி நிலைநாட்டப்படும் என்று உறுதியளித்தார், மேலும் தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள முழு உண்மையையும் வெளிக்கொணர தனது அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார்.

ஆனையிறவு உப்பு தொழிற்சாலை திறப்பு

ஆனையிறவு உப்பு தொழிற்சாலை இன்று (29) திறக்கப்படவுள்ளது. தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர் கயான் வெல்லால கூறுகையில், இந்த தொழிற்சாலை ஒரு மணி நேரத்திற்கு 5 மெட்ரிக் தொன் உப்பை உற்பத்தி செய்கிறது என்றார்.

ஏப்ரல் 6 இல் பாம்பன் பாலத்தை திறக்கிறார் மோடி

பாம்பன் புதிய ரயில் பாலத்தை ஏப்ரல் 6 ஆம் திகதி ராமநவமியன்று திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இராமேஸ்வரத்தில் நடக்கும் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்பு உள்ளது என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.

தூதரகங்களுக்கு கைமாறும் சொகுசு வீடுகள்

தூதரகங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அமைச்சர்களின் சொகுசு வீடுகளை வழங்குவதில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. முப்பதுக்கும் மேற்பட்ட வெவ்வேறு நிறுவனங்கள், அமைச்சர்களின் சொகுசு வீடுகளை வாடகைக்கு விடுமாறு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் இடமில்லை

கொழும்பு விளக்கறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அங்கு நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட சிறைச்சாலையில் 650 கைதிகளை அடைக்க முடியும் என்றால், தற்போது சுமார் 2,100 பேர் அங்கு அடைக்கப்பட்டுள்ளனர் என்று, சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் கூச்சலிடுபவர்கள்தான் அதிகம் பயப்படுகிறார்கள் : ஜனாதிபதி

அரசாங்கத்திற்கு எதிராக இப்போது அதிகம் கூச்சலிடுபவர்கள்தான் அதிகம் பயப்படுகிறார்கள் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கூறினார். இதேவேளை, மே மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான சர்ச்சைக்குரிய வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார். வழக்குப் பதிவு செய்து வழக்கை விசாரித்த பிறகு குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.