மட்டு. மாவட்டத்தில் அடை மழை

மட்டக்களப்பு மாவட்டத்தில் அடை மழை பெய்து வருகின்றது. இன்று  காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 48 மணிநேரத்தில் 96.9 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ரமேஸ் தெரிவித்தார்.