யாழ். கலாசார நிலையம் அங்குரார்ப்பணம்

இந்தியாவின் நிதி உதவியில் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கலாசார நிலையம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், இன்று (11) திறந்து வைக்கப்பட்டது. 1.6 பில்லியன் ரூபாய் செலவில் 600 பேர் வரை அமரக்கூடிய  வகையில் 13 தளங்களுடன் யாழ். கலாசார நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.  குறித்த நிலையத்தில், மாநாட்டு மண்டபம், நவீன திரையரங்கு வசதிகள், டிஜிட்டல் நூலகம் ஆகியனவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.