காட்டு யானைக் கூட்டம் அட்டகாசம்

பொத்துவில், ஆத்திமுனை சர்வோதய புர கிராமத்துக்குள் நேற்றிரவு (19) உட்புகுந்த காட்டு யானைக் கூட்டம், அங்கிருந்த வீடு ஒன்றை முற்றாக சேதமாக்கியுள்ளது.  இதன்போது, வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிந்தவர்கள் பெரும் போராட்டத்துக்கு மத்தியில் உயிர்தப்பியுள்ளனர்.