வாக்குரிமையை சரியாக பயன்படுத்தி கொள்வதே புத்திசாலித்தனம்

தற்போதையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக்காலம், இன்னுமோர் ஆண்டுக்கு நீடிக்குமா? இல்லையா? என்ற சந்தேகத்துக்கு உயர்நீதிமன்றம், திங்கட்கிழமை (08) தீர்ப்பளித்திருக்கும் நிலையில், இன்னும் 10 நாட்களில் ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்பு தினம் குறித்த அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.