5,000 ரூபாய் தாள்களுடன் சிக்கிய நபர்

62 போலி 5,000 ரூபாய் நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 44 வயதுடைய ஹெனேகம, அக்குரஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்தவராவார். தெமட்டகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேலுவன வீதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகநபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து, தெமட்டகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply