பெற்றோரிடமிருந்து பணம் வசூலிக்கக் கூடாது

உலக சிறுவர் தினம் மற்றும் உலக ஆசிரியர் தினம் போன்ற நிகழ்வுகளை கொண்டாடுவதற்கு பெற்றோரிடமிருந்து பணம் வசூலிக்கக் கூடாது என கல்வி அமைச்சு வலியுறுத்துகிறது. இது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர, அனைத்து அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு அறிவித்து கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.