நேபாளத்தில் மழையில் பலியானோர் எண்ணிக்கை 170ஐ தாண்டியது

நேபாளத்தில் கனமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 170ஐ தாண்டியுள்ளது. நேபாளத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் மட்டும் நேபாளத்தின் பல பகுதிகளில் 20 முதல் 30 செ.மீ மழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன. மேலும் பல இடங்களில் வெள்ள நீர் காரணமாக நிலச்சரிவுகளும் ஏற்படுகின்றன.