இனிமேல் ஓர் அகதி துருக்கி வந்த பின்னர், பிற ஐரோப்பிய நாடொன்றில் தஞ்சம் கோர முடியாது

ஜெர்மனி அகதிகளை ஏற்றுக் கொள்வதில் தாராள மனப்பான்மையுடன் நடந்து கொள்வதாக, ஜெர்மனியைப் புகழும் பல கட்டுரைகள் தமிழகப் பத்திரிகைகளில் வந்திருந்தன. பல நண்பர்கள் அவற்றை சுட்டிக் காட்டி, உண்மை நிலவரம் என்னவென்று கேட்டிருந்தார்கள். வழக்கம் போலவே, ஊடகங்கள் தெரிவிப்பதற்கும், உண்மை நிலவரத்திற்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது.

(“இனிமேல் ஓர் அகதி துருக்கி வந்த பின்னர், பிற ஐரோப்பிய நாடொன்றில் தஞ்சம் கோர முடியாது” தொடர்ந்து வாசிக்க…)

நியாயமான சம்பளத்திற்காகவும் நியாயமற்ற நிபந்தனைகளுக்கு எதிராகவும் தொழிலாளர்கள் அணித்திரண்டு போராட வேண்டும்

முதலாளிமார் சம்மேளனத்தினால் நாட் சம்பளமாக ரூபா. 1000/= பெறக்கூடிய ஒரு முறையை பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்டு அது தொழிற்சங்கங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வந்திருந்தன. எனினும் முதலாளிமார் சம்மேளனம் அந்த முறையை பகிரங்கப்படுத்த முடியாது என குறிப்பிட்டிருந்தது. அந்த முறை தொடர்பாக தொழிற்சங்கங்கள் தங்களது உறுப்பினர்களுடன் பேசிவிட்டு முடிவு தெரிவிக்க உடன்பட்டதாக முதலாளிமார் சம்மேளனம் குறிப்பிட்டிருந்தது. தொழிற்சங்கங்களும் அதனை பகிரங்கப்படுத்தாத நிலையில் முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்த சம்பள முறை என்ன என்பது மூடு மந்திரமாகவே உள்ளது.

(“நியாயமான சம்பளத்திற்காகவும் நியாயமற்ற நிபந்தனைகளுக்கு எதிராகவும் தொழிலாளர்கள் அணித்திரண்டு போராட வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)

என் சுயநலப் பயண அனுபவப் பகிர்வு! 6

(மாதவன் சஞ்சயன்)

இரவு உண்ட இலவச பழங்களின் அனுசரணையில் வயிறு காலை 5 மணிக்கே அலாரம் அடித்தது. கூடவே அப்பத்துடன் உண்ட வெங்காய/மிளகாய் சம்பல் தன் பங்களிப்பை செய்யத் தொடங்கியது. இணைந்த குளியல் மற்றும் வசதி கொண்ட தனி அறையில் தங்கியதால், அடுத்தவரை சிரமப் படுத்தாமல் காலை நடவடிக்கைகள் முடித்து கீழ் மாடியில் இருந்த உணவகம் சென்றேன். 6 மணிக்கே இட்லி வடை சாம்பார் என அசத்தினார், அதனை அண்மையில் குத்தகை எடுத்த கண்டி தமிழர். என்னதான் தமிழருடன் முரண்பாடு வந்தாலும் சிங்களவருக்கு, இட்லி வடை தோசை சாம்பாறு என்றால் அலாதிப் பிரியம் என்பதை அறிந்து கொண்ட அவரின் உணவகத்துக்கு, அயல் விடுதிகளில் தங்குபவர்கள் கூட உணவுக்காக, அதிகாலையே வருவதைக் கண்டேன்.

(“என் சுயநலப் பயண அனுபவப் பகிர்வு! 6” தொடர்ந்து வாசிக்க…)

விசித்திரக் கைதுகளும் மரண தண்டனையும்

இலங்கையில் மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்த வேண்டும் என்றதோர் அபிப்பிராயம் தலைதூக்கி, சிறிது சிறிதாக மறைந்து போகும் நிலையைக் காணக்கூடியதாக இருக்கிறது. கொட்டதெனியாவ என்ற இடத்தில், ஐந்து வயது சிறுமியான சேயா சந்தவமி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உற்படுத்திக் கொல்லப்பட்டதை அடுத்தே இந்த அபிப்பிராயம் இம்முறை தலைதூக்கியது. இதற்கு முன்னரும் இதுபோன்ற படுபாதகச் செயல்கள் இடம்பெற்ற போதும், இதேபோல் குற்றவாளிகள் தூக்கு மேடைக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற அபிப்பிராயம் தலைதூக்கியது. பின்னர் சில நாட்களில் அது மாயமாய் மறைந்துவிட்டது.

(“விசித்திரக் கைதுகளும் மரண தண்டனையும்” தொடர்ந்து வாசிக்க…)

வருட இறுதிக்குள் சாதகமான தீர்வு: உண்ணாவிரதத்தை கைவிடுங்கள்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சிறைக் கைதிகளுக்கு இவ்வருட இறுதிக்குள் அரசாங்க மட்டத்தில் நிச்சயம் சாதகமான தீர்மானம் பெற்றுத்தரப்படுமென்பதால் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சிறைக்கைதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். “போலியான வாக்குறுதிகளை வழங்கி சிறைக் கைதிகளை ஏமாற்ற நான் விரும்பவில்லை. இவ்வருடம் முடிவதற்கு இன்னும் இரண்டரை மாதங்களேயுள்ளன. சட்டமா அதிபர் திணைக்களத்துடன் இணைந்து கைதிகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை தயார்செய்ய எனக்கு இக்காலப் பகுதியை அவகாசமாக தாருங்கள்” எனவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சிறைக் கைதிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

(“வருட இறுதிக்குள் சாதகமான தீர்வு: உண்ணாவிரதத்தை கைவிடுங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளின் திலீபனைப்பற்றி அறிந்து கொள்ளுங்கள்

84ம் ஆண்டு எனது ஊரில் பிரச்சாரக் கூட்டம் ஒன்றுக்காக புலி உறுப்பினரன முரளி வந்திருந்தார். அப்போது புலிகள் தலைமறைவாக இருந்த காலம். ஊருக்குள் ஆட்சேர்க்கும் நடவைக்கையில் முரளி ஈடுபட்டிருந்தார். கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் முரளியைத் தாறுமாறாகக் கேள்விகள் கேட்டனர் அங்கு ஒருவர் கேட்ட .கேள்விக்கு முரளியால் பதில் சொல்ல முடியவில்லை.. கேள்வி கேட்டவர் வேறு யாருமல்ல. ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தைச் சேர்ந்த நக்கீரன்.

(“புலிகளின் திலீபனைப்பற்றி அறிந்து கொள்ளுங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

புலி திலீபனின் உண்மை முகம்

 

மாற்று இயக்கங்களை தடை செய்து அழித்தொழித்ததில் முக்கியமானவர் திலீபன்… தலைமறைவாக இருக்கும் புலி உறுப்பினர்கள் திடீரென்று ஊருக்குள் வருவார்கள். இன்றைக்கு இந்த இடத்தில் கூட்டம் ஒன்று வைக்க வேணும் என்பார்கள். திலீபனின் ஊர் ஊரெழு. ஆவரங்காலைச் சேர்ந்த முரளி (கிங்கோ) முன்னர் ஐரோப்பாவில் இருந்தவர். பின்னர் புலிகள் இயக்கத்தில் இணைந்துகொண்டார். முரளி உரும்பிராய்க்கு வரும்போது திலீபனையும் அழைத்துக்கொண்டு பிரச்சாரக்கூட்டங்களுக்கு வருவார். முரளி எனது வீட்டுக்கும் வருவதுண்டு. காரணம் எனது ஊருக்குள் இளைஞர்களை இயக்கத்தில் இணைக்கும் முயற்சியில் முரளி ஈடுபட்டிருந்தார். என்னையும் இயக்கத்தில் இணையும்படி கேட்டுக்கொள்வார்.

(“புலி திலீபனின் உண்மை முகம்” தொடர்ந்து வாசிக்க…)

எம்மவர் உண்ணா விரதம் தொடர் கதை தானா?

(மாதவன் சஞ்சயன் )

நல்லாட்சியில் கூட மாறாது தொடரும் மோசமான நிலை இதனை எழுதத் தூண்டுகிறது. சிறைகளில் வாடும் எம் உறவுகள் தம் விடுதலை வேண்டி தொடங்கிய உண்ணா விரதம் சிலருக்கு அரசியல், பலருக்கு வேதனை. இவர்கள் ஒன்றும் கொலையாளிகளோ, பாலியல் வன்புணர்வில், மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களோ அல்ல. இனத்துக்கு நடந்த அநியாயத்துக்கு நியாயம் கேட்டு போராடியவர்கள் அல்லது, போராளிகள் என்று அவர்கள் நம்பியவர்ளுக்கு உதவி செய்தவர்கள். அவர்களை பிடித்த படையினர் எந்த ஆதாரங்களின் அடிப்படையில் பிடித்தோம் என்ற சாட்சியங்களை அன்றே கொடுத்திருந்தால் நீதி மன்றில் அவர்கள் குற்றவாளிகளா இல்லையா என்பது எப்போதோ வெளிவந்திருக்கும். மாறாக அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே ஒரு காரண அடிப்படையில், கொட்டியா (புலி) என்று சந்தேகித்து, விசாரணை கூண்டில் அடைக்கப்பட்டு ஆண்டுகள் பல கடந்து விட்டன.

(“எம்மவர் உண்ணா விரதம் தொடர் கதை தானா?” தொடர்ந்து வாசிக்க…)

டேவிட் ஐயாவின் இறுதி நிகழ்வு கிளிநொச்சியில்

 

டேவிட் ஐயாவின் இறுதி நிகழ்வு கிளிநொச்சியில் நடந்தது. மிகக்குறைந்தளவானவர்களே கலந்து கொண்டனர். ஊடகங்கள் எதுவும் அவரின் இறுதி நிகழ்வு பற்றிய செய்திகளையோ அவரைப்பற்றிய விவரங்களையோ வெளியிடவில்லை. அவர் ஒரு காலங்கடந்த மனிதராகவே ஊடகங்களால் கைவிடப்பட்டிருந்தார். குறைந்த பட்சம் இணையத்தளங்களையும் முகப்புத்தகத்தையும் பார்த்துக்கூட அவரைப்பற்றிய தகவல்களை அறியும் நிலையில் இலங்கைத்தமிழ் ஊடகங்கள் இருக்கவில்லை. அல்லது அவர் புளட்டுடன் அடையாளம் காணப்பட்டவர் என்பதால், தற்போது அவர் எந்தப் பட்டியலில் (துரோகியா தியாகியா ) உள்ளார் என்ற குழப்பத்தில் அவரைப்பற்றி எழுதவும் வெளிப்படுத்தவும் தயங்கியிருக்கலாம். இறுதி நிகழ்வில் பலர் உரையாற்றினார்கள். ஆனால் டேவிட் ஐயா எந்த இடம் பெயர்ந்து வந்த மலையக மக்களின் ஈடேற்றத்துக்காக முன்னின்று உழைத்தாரோ, யாருடைய வாழ்க்கை முன்னேற்றம் காண வேண்டும் என்று விளைந்தாரோ அவர்களில் இருந்து ஒருவர் கூட உரையாற்றவில்லை. அப்படி ஒருவருக்கான இடமும் கிடைக்கவில்லை. அவரைச் சிலர் தமக்கான நிகழ்கால – எதிர்கால அரசியலுக்குத் தத்தெடுக்க முனைந்ததுதான் ஆகப் பெரிய அவலமாக இருந்தது.

(Sivarasa Karunagaran)