கனடாவின் பொருளாதாரம் நலிந்தது

கனடாவில் வேலைவாய்ப்புகள் நிறைந்த மகாணம் ஒன்ராறியோ. நலிந்த மாகாணங்களில் கடல் தொழிலை முதன்மைப்படுத்தும் நியூபவுண்லான்ட்; உம் ஒன்று. ஒன்ராறியோவின் தொழில் வாய்ப்பு அதிகமான வியாபர நகரமான ரொறன்ரோவில், நியூபவுண்லான்ட் வாகனங்களை இடைக்கிடை காண முடியும். இவ் வாகனங்கள் நலிவடைந்த நிலையில் இருக்கக் காணப்படும். இவர்கள் எல்லாம் வேலை தேடி ரொறன்ரோவிற்கு வருபவர்களாக இருப்பர். இது வழமையாகக் காணக்கூடிய ஒன்று. அண்மை காலங்களில் கனடாவின் எண்ணை வளம் நிறைந்த ‘வளமான” அல்பேட்டா மாகாணத்தின் வாகனங்களையும் ரொறன்ரோ வீதிகளில் அதிகம் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த வாகனங்கள் நலிந்த நிலையில் இல்லை. அப்படியாயின் இவர்கள் உல்லாசப் பிரயாணிகள் என்றால் அதுதான் இல்லை. உல்லாசப் பயணிகள் பொதுவாக நல்ல நிலையில் உள்ள வாகனத்தில் வருபவர்களாக காணப்படுவர். அல்பேட்டா அமெரிக்க கூட்டமைப்பினரால் ரஷ்யாவை பொருளாதாரத்தின் மூலம் வீழ்த்த எடுத்த எண்ணை விலைக் குறைப்பில் கல்லெறி வாங்கிய கனடாவின் மாகாணம். எண்ணை விலைக் குறைப்பு இந்த மாகாணத்தையும் கனடிய பொருளாதாரத்தையும் தாக்கியுள்ள நிலையில் அல்பேட்டா மாகாணத்தில் வேலை வாய்பின்மைனால் நலிவடைந்த தொழிலாளர்கள் தொழில் வாய்ப்பு கூடியதாக கருதப்படும் ரொறன்ரோவிற்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதன் விளைவே ரொறன்ரோ வீதிகளின் அல்பேட்டா மாகாணத்தவரின் வாகனங்களின் பிரசன்னம். மொழி, நிறம் ஒன்று… பாகுபாடுகள் அதிகம் இல்லாததனால் மாகாணம் விட்டு மாகாணம் மாறி வேலைக்கு அலைய முடிகின்றது இங்கு. நாம் நமது நாட்டில் இது போன்று தலைநகரம் கொழும்பிற்கு அலைய முடியவில்லை இந்த அளவு சுதந்திர உணர்வுடன். பாகுபடுத்திப் பார்க்கும் மனநிலையும், மொழித் தடையும், இனத் தடையும் எம்மைப் பிரித்தே வைத்திருத்தன, பிரித்தே வைத்திருந்தனர் பாராளுமன்றவாதிகள் தமது பாராளுமன்றக் கதிரைகளுக்காக.

(சாகரன்)

தமிழ், சிங்கள தீவிரவாதிகளை ஒற்றுமைப்படுத்திய பிரேரணை

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில், இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணையும் அதற்கு முன்னர் மனித உரிமை உயர் ஸ்தானிகர் ஷெய்த் ராத் அல் ஹ§ஸைனால், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையும் தமிழ் மற்றும் சிங்கள தீவிரவாதிகளை ஆத்திரமூட்டியுள்ளது. இரு சாராரும் அந்த அறிக்கையையும் பிரேரணையையும் எதிர்க்கிறார்கள்.

(“தமிழ், சிங்கள தீவிரவாதிகளை ஒற்றுமைப்படுத்திய பிரேரணை” தொடர்ந்து வாசிக்க…)

ISIS அமைப்பில்:இலங்கையர் 7 பேர் உள்ளனர்?

சிரியாவிருந்து இயங்கும் ISIS இஸ்லாம் தீவிரவாத அமைப்பில் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம்கள் 7 பேர் இணைந்து செயற்படுவதாக தகவல் வெளியிட்டுள்ளது. இவ்வாறு இணைந்து செயற்படுபவர்கள், கொழும்பு மற்றும் கண்டி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் சுமார் 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் அத்தகவல் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, இலங்கையைச் சேர்ந்த ஒருவர், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்து உயிரிழந்திருந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

4 இராணுவ சிப்பாய்களுக்கு 30 வருட சிறை

கிளிநொச்சி மாவட்டத்தின் விசுவமடு கூட்டுப் பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் எதிரிகளான 4 இராணுவத்தினருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 30 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு வன்னிப் பிரதேசத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போது இராணுவத்தினரால் விசுவமடு பகுதியில் இரண்டு குழந்தைகளின் தாயார் ஒருவர் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதுடன் 5 பிள்ளைகளின் தாயார் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந் தார்.

(“4 இராணுவ சிப்பாய்களுக்கு 30 வருட சிறை” தொடர்ந்து வாசிக்க…)

முன்னாள் அமைச்சர் ஜனகவுக்கு விளக்கமறியல்

1999ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனக பண்டார தென்னகோனை, எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர், குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (06) கைது செய்யப்பட்டிருந்தார். கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த போதே, இவர் கைது செய்யப்பட்டார் என ஜனக பண்டார தென்னகோனின் மகன் பிரமித பண்டார தெரிவித்துள்ளார்.

இத்தனை அழிவிற்கு பின்பும் 13ல் தானா தீர்வு ? (3)

(மாதவன் சஞ்சயன்)

ஆரம்பத்தில் 25 நாடுகள் ஆதரவளித்த நிலையில் தற்போது 38 நாடுகளும் நாளடைவில் அனைத்து நாடுகளும் தீர்மானத்துக்கு ஆதரவளிக்கும் என்ற செய்தியில் நாம் சர்வதேசத்தின் கரிசனையில் வந்துள்ளமை தெரிகிறது. நாடுகளின் நலன்களுள் எம் நலன்களும் அடங்கும் விடயத்தை நாம் கவனத்தில் கொண்டு எமக்கு சாதகமானதை பெறுவதே புத்திசாலித்தனம். இந்த நிலையில் நடைமுறை சாத்தியமான விடயத்தை நாம் முன்னெடுத்தால் அது நிச்சயம் சாத்தியமாகும். பிரிவினை திட்டத்தை இந்தியா ஆரம்பத்திலேயே ஆதரிக்கவில்லை என்பதை சம்மந்தர் தொடக்கம் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் காலம் கடந்தாவது பகிரங்கமாக இன்று ஒத்துக்கொள்கின்றனர். இந்திய அனுசரணை இன்றி எதுவும் அரங்கேறாது.

(“இத்தனை அழிவிற்கு பின்பும் 13ல் தானா தீர்வு ? (3)” தொடர்ந்து வாசிக்க…)

சூத்திரதாரி பிரபாகரன் தான்

யுத்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பிரதனா சூத்திரதாரி தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனேயாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை யுத்தக் குற்றவாளியாக பார்க்கக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியே இந்த நாட்டுக்கு யுத்த வெற்றியை ஈட்டிக் கொடுத்தார் எனவும் அதனை எவரும் மறந்து விடக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வதேச சமூத்தை வெற்றி கண்டுள்ளதுடன் உள்ளக விசாரணைகளுக்கு சர்வதேச சமூகத்தை இணங்கச் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். யார் நல்ல காரியங்களைச் செய்திருந்தாலும் அவர்களை பாராட்ட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தில் உள்ளடக்கப்படவில்லை – வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர்

சமஸ்டி பெற்றுத் தருவோம் என்று மக்களிடம் ஆணை பெற்றவர்கள் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவையினால் வெளியிடப்பட்ட பிரேரணையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற வாசகத்துடன் திருப்தியடைந்து மௌனமாக இருப்பது ஏன் என வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

(“தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தில் உள்ளடக்கப்படவில்லை – வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர்” தொடர்ந்து வாசிக்க…)

காட்டுப் பயணம்… கைகளில் விதை… மரபுப் பள்ளி குழந்தைகளின் சுற்றுலா அனுபவங்கள்…

இயற்கை சார்ந்த இடத்திற்கு குழந்தைகளைச் சுற்றுலா அழைத்துச் செல்வது செம்மை மரபுப் பள்ளியின் கல்வி முறையில் ஓர் அங்கம். அதன்படி, மரபுப் பள்ளி குழந்தைகள் தங்களது பெற்றோருடன் கடந்த 3ம் தேதி சனிக்கிழமை அதிகாலை சென்னையில் இருந்து இரண்டு பேருந்துகளில் கிளம்பினர். இந்தச் சுற்றுலாவிற்கு மரபுப் பள்ளியின் தலைவர் திரு.ம.செந்தமிழன் தலைமை தாங்கினார். அதற்கு முதல் நாள் இரவு சென்னை மற்றும் அருகமை மாவட்டங்களில் பெய்த கனமழை, மனதையும், சூழலையும் சில்லிட வைத்திருந்தது. குழந்தைகள், பெற்றோர், மரபுப் பள்ளி ஆசிரியர்கள், செம்மை குடும்பத்தினர் என சுமார் நூறு பேர் கொண்ட குழுவினர், முதலில் இறங்கிய இடம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி நீர்த்தேக்கம்.

(“காட்டுப் பயணம்… கைகளில் விதை… மரபுப் பள்ளி குழந்தைகளின் சுற்றுலா அனுபவங்கள்…” தொடர்ந்து வாசிக்க…)