முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கிங்ஸ்லி ராஜநாயகம் படுகொலை தொடர்பில் அவருக்கு பிரதியீடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகிய பா.அரியநேத்திரனிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட காலகட்டத்தில் கிங்ஸ்லி ராஜநாயகம் உள்ளிட்ட பலர் படுகொலை செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுறை சந்திரகாந்தனுக்கும் தனக்கும் தற்போது எவ்வித தொடர்பும் இல்லை எனவும், புலிகள் அமைப்பில் இணைந்த செயற்பட்ட காலத்தில் தொடர்பினை பேணியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(“கிங்ஸ்லி படுகொலை தொடர்பில் அரியநேத்திரனிடம் விசாரிக்க வேண்டும்…! கருணா” தொடர்ந்து வாசிக்க…)