எம்மவர் பயணம் எவடம் எவடம் ? பு(லி)ளியடி பு(லி)ளியடி தானா ?

(மாதவன் சஞ்சயன்)

கல்லூரி நாட்களில் கல்விச் சுற்றுலா காதல் சுற்றுலாவாக மாறுவது போல, கடந்த சில வாரங்களாக அமைந்து விட்ட எனது தல சுற்றுலா, தகவல் சுற்றுலாவாக மாறிவிட்டது. பஞ்ச ஈஸ்வரங்கள் உட்பட கதிர்காமம் வரை புண்ணியம் தேடச் சென்ற எனக்கு தலைவரின் பாவச் செயல்களை அறியும் சந்தர்ப்பம் கிடைத்தது. வாழைக்கு குழி தோண்ட அதில் எச்சங்கள் கிடைத்தது போல அருள் வாங்க சென்ற எனக்கு முக்கியமானவரின் அசிங்கமான பின்னணி பற்றி அவர் பதவியில் இருக்கும் வரை கூறாதவர் அவரின் சரிவினால் கூற முன் வந்தனர். தன் இரகசிய குடும்பத்தை சிங்கப்பூரில் சந்திக்கும் அவரின் முன்னாள் நெருக்கமான மற்ற உறவுகளில் ஒன்று மகாதேவா என துறவு வாழ்வு வாழ்வது வரை கேள்விப்பட்ட செய்திகளை எழுதுவதற்கு முன் இன்றைய அரசியல் நிலையை பார்ப்போம்.

(“எம்மவர் பயணம் எவடம் எவடம் ? பு(லி)ளியடி பு(லி)ளியடி தானா ?” தொடர்ந்து வாசிக்க…)

சமூகத்தின் விடிவுக்காக அரசியல் செய்வோம், முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி வாழ்த்து!

முஸ்லிம் சமூகத்தின் விடிவுக்காக அரசியல் என்கிற படகில் பயணித்து அவரையே தியாகம் செய்தவர் தேசிய தலைவர் மர்ஹூம் ஏ. எச். எம் அஷ்ரஃப் அவர்கள், இவருடைய அர்ப்பணிப்பு, பற்றுறுதி, விசுவாசம், மனிதாபிமானம், சாணக்கியம் ஆகியவற்றுடன் முஸ்லிம்களின் அரசியல் தலைமை செயற்பட வேண்டும் என இன்றைய தியாகத் திருநாளில் வாழ்த்துகின்றார் என்று தெரிவித்து உள்ளார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும், சுகாதார துறை முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஹசன் அலி. உலகம் பூராவும் உள்ள முஸ்லிம்களின் வாழ்க்கைச் சட்டமாக இஸ்லாமிய சமய மார்க்கம் உள்ளது, ஈகை, தியாகம் ஆகிய உயரிய மனிதப் பண்புகள் இஸ்லாமிய மார்க்கத்தின் சிறப்பு அம்சங்களாக விளங்குகின்றன, நபிகள் நாயகம் ஸல் அவர்களின் வாழ்க்கை முறை இவற்றுக்கு முன்னுதாரணமாக உள்ளது, இதனால்தான் முஸ்லிம்கள் அனைவரும் ஈகைப் பெருநாளையும், தியாகத் திருநாளையும் தவறாமல் கொண்டாடுகின்றனர், ஸ்ரீலங்கா முஸ்லிம்களை பொறுத்த வரை ஈகை, தியாகம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த அடையாளமாக அரசியல் வழிகாட்டி அஷ்ரப் அவர்கள் விளங்குகின்றார் என்று ஹஜ்ச் திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்து உள்ள இவர் தேசிய தலைவர் அஷ்ரப் அவர்களின் ஈகை, தியாகம் ஆகியவற்றை அரசியல் தலைமை ஒருபோதும் மறக்கவோ, மரிக்கச் செய்யவோ கூடாது என்று குறிப்பிட்டு உள்ளார்.

மக்காவில் நெரிசலில் சிக்கி 717பேர் பலி 805 பேர் காயம்

புனித மக்காவுக்கு அருகிலுள்ள மினா நகரில் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்குண்டு 717ற்கும் அதிகமான ஹஜ் யாத்திரிகர்கள் உயிரிழந்துள்ளனர். 805ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சவூதி சிவில் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. புனித மக்காவிலிருந்து 2 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள மினா நகரிலேயே இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இதில் இலங்கையர் எவரும் பாதிக்க ப்பட்டமை தொடர்பில் இதுவரை எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லையென சவூதியிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

(“மக்காவில் நெரிசலில் சிக்கி 717பேர் பலி 805 பேர் காயம்” தொடர்ந்து வாசிக்க…)

யாழ் மாவட்டத்தில் இரு வேறு ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் தொழுகை

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வாழும் முஸ்லீம்கள் இன்று இரு வேறு ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் தொழுகையில் காலை ஈடுபட்டனர். இஸ்லாமிய தகவல் வழிகாட்டல் மையம் ஏற்பாடு செய்த தௌஹீத் ஜமாத் அமைப்பினரின் பெருநாள் தொழுகை திறந்த வெளியரங்கு உள்ளக மைதானத்தில் நடைபெற்றது.இதன் போது மார்க்க சொற்பொழிவு மற்றும் தொழுகை மௌலவி பைசர் மதனி தலைமையில் மேற்கொண்டதுடன் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அடுத்து யாழ் கிளிநொச்சி உலமா சபை தலைவர் மௌலவி அஸீஸ் காசிமி தலைமையில் மற்றுமொரு பெருநாள் தொழுகைகாலை7மணியளவில்ஆரம்பமானது.இத்தொழுகைஒஸ்மானியாஜின்னாமைதானத்தில்நடைபெற்றபோது மார்க்க சொற்பொழிவினை மௌலவி எம்.ஐ மஹ்மூத் பலாஹி மேற்கொண்டார்.இதன்போது நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அத்துடன் ஹஜ் பெருநாள் தொழுகையின் போது நாட்டில் அமைதி நிலவ வேண்டியும் மக்கள் சுபீட்சமடைய வேண்டீயம் பிரார்த்திக் கொண்டனா்.ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் இன்று காலை சிறப்பு பெருநாள் தொழுகை மற்றும் பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

அகதி வாழ்வு

(சாகரன்)
அகதி……… இன்றைய நவீன உலகத்தின் புதிய பிரச்சனை. ஆதி மனிதன் வறுமை, வறட்சி, வளம் இன்மை காரணமாக இடம் விட்டு இடம் பெயர்ந்து தமது வாழ்வை உறுதிப்படுத்தினான். அன்றெல்லாம் நாடுகள் என்ற எல்லைகள் இருக்கவில்லை. எனவே வாழ்வைத் தேடி தடையின்றி? நகரக் கூடியதாக இருந்தது. இன்று நாடுகள், தேசங்கள் என்று எல்லை வகுத்திருப்பதினால் இலகுவில் இடம் பெயர முடியவில்லை. அகதி வாழ்விற்கு பல காரணங்கள் இருந்தாலும் போர்… யுத்தம் என்பனவே முதன்மைக் காரணிகளாக அமைகின்றன. மக்கள் பாதுகாப்பைத் தேடி இடம் பெயர்ந்து அகதியாகும் போது பாதுகாப்பிற்கு சம அளவில் தமது பொருளாதார நிலைப்படுத்தலைக் கவனித்தில் கொள்கின்றனர். நாடுகளும் தமக்கு குறைந்த கூலியில் ‘பிரச்சனைகள் அற்ற” மனித வளம் தேவைப்படுவதைக் கருத்தில்; கொண்டே அகதிகளை எற்கின்றனர். ஆனால் நாடுகள் மனிதாபிமானம், உதவுதல் போன்ற கோஷங்களையே முன்னிலையில் வைக்கின்றனர் இலங்கைத் தமிழரான நாங்களும் எமது மொழி, காலச்சாரம், பழக்க வழக்கம் போன்றவற்றுடன் ஒத்திசையும் தமிழ் நாட்டிற்கு அகதிகளாக இடம் பெயருவதை விட மேற்கத்திய நாடுகளுக்கு பொருளாதார உறுதிப்பாட்டை சீர்தூக்கிப் பார்த்து அகதிகளாக இடம்பெயர விரும்புகின்றனர். இல்லாவிடின் நாம் இந்தியாவின் தமிழ் நாட்டிற்கே அதிகம் இடம்பெயர்ந்து இருந்திருப்போம். இதுவே இன்று சிரியா போன்ற நாட்டிலும் நடைபெறுகின்றது. போர்கள் நிறுத்தப்படாத வரைக்கும் அகதிகள் உருவாதல் நிறுதப்பட முடியாது. குறைந்த கூலியில் மனித வளம் தேவைப்படும் வரை யுத்தங்களும், அகதிகள் பிரச்சனைகளையும் முதலாளித்துவ நாடுகள் தக்க வைத்துக்கொண்டே இருக்கும்

ஈழப்போரின் இறுதியில் இனப்படுகொலை நடக்கவில்லை – ஐ.நா. அறிக்கை

ஐ.நா. அறிக்கையில் எழுதப் பட்டுள்ள, ஈழப்போரின் இறுதியில் இனப்படுகொலை நடக்கவில்லை” என்ற வாக்கியம் பலரின் விமர்சனத்திற்குள்ளாகியது. ஐ.நா.வை குறை கூற முடியாத கையறு நிலையில், பலர் சுமந்திரனுக்கு எதிராக திரும்பி, ஆத்திரத்தை கொட்டித் தீர்த்தார்கள்.  இனப்படுகொலை பற்றி விளக்கம் கொடுத்த பலர், சட்ட ஆதாரங்களை கணக்கில் எடுக்காமல், வெறும் உணர்வு பூர்வமான கதைகளை பேசினார்கள். படித்தவர்கள் கூட, சிறுபிள்ளைத் தனமாக உரையாடுகின்றனர். இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்பதை நிரூபிக்க முடியுமா? ஆம், முடியும். அதுவும் ஐ.நா. கூறும் அதே சட்ட ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும். ஆனால், அதற்கு நாங்கள் ஈழப்போரின் முடிவை எடுத்துக் காட்டியது தான் நாம் விட்ட தவறு. ஐ.நா. எமது தவறுகளை, தனது நலன்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி அறிக்கை எழுதியுள்ளது. எம் தலையில் நாங்களே மண் அள்ளிப் போட்டுள்ளோம்.

(“ஈழப்போரின் இறுதியில் இனப்படுகொலை நடக்கவில்லை – ஐ.நா. அறிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

மதம்பினித்த யானையும் மனிதனும் ஒன்றுதான்.

“எனது வாழ்நாளிலேயே மதம் என்பது முற்றிலுமாக அழிந்து போக வேண்டும் என்று நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்”
மதத்தினால் தூண்டுதல் பெற்றோம் என்று கூறிக் கொள்பவர்களுக்கு அளவுக்கு அதிகமாக அனுதாபம் காட்டப்படுகிறது. வெறும் வெறுப்பின் அடிப்படை யிலேயே செயல்படும் மக்களுக்கு இத்தகைய அனு தாபம் காட்டப்படக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். மிகவும் ஆழமாகச் சிந்திக்கப்பட்டு வெளியிடப்பட்ட கருத்தாகவே இதனைக் கருத வேண்டும். மதம் மனிதனுக்குப் பிடித்தாலும் சரி, மிருகங் களுக்குப் பிடித்தாலும் ஆபத்தானதுதான். இதில் உள்ள கெட்ட வாய்ப்பு என்னவென்றால் மதத்தைப் பற்றி விமர்சிக்கவே கூடாது என்று செய்து வைத்திருக்கும் மோசமான ஏற்பாடாகும்.

(“மதம்பினித்த யானையும் மனிதனும் ஒன்றுதான்.” தொடர்ந்து வாசிக்க…)

எது இனஅழிப்பு??????

முஸ்லிம் மக்களை யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறியது??????
அனுராதா புறத்திலும் மற்றைய கிராமங்களிலும் குழந்தைகள் வயோதிபர்களை மற்றும் பெண்கள் கற்பிணிகள் என்று கொன்றதா????
மட்டக்கிளப்பில் முஸ்லிம்களை குழந்தைகளை கொன்றதா????
சரண்னடைந்த பொலிசாரை கொன்றதா????
உயிர்ருடன் ராயர் கொளுத்தி போட்டு மற்றைய போராட்ட குழுக்களை கொன்றதா????
இன்று மனித உரிமை பற்றி பேசும் முஸ்லிம்கள்……
மட்டக்கிளப்பில் தமிழ் மக்களை கிராமம் கிராமமாக கொல்லவில்லையா????
கற்பழிக்கவில்லையா????
குழந்தைகள் பெண்களை முஸ்லிம் ஆயுததாரிகள் கொல்லவில்லையா????

(“எது இனஅழிப்பு??????” தொடர்ந்து வாசிக்க…)

தமிழக மீனவர்களைக் கண்டித்து யாழ் நகரில் ஆர்ப்பாட்டம்

எல்லை தாண்டும் மீனவர்களை தாக்குவதில்லையெனவும் உரிய நாடுகளின் கடல் எல்லைகளில் கைது செய்யப்படும் மீனவர்களுக்கு அந்தந்த நாடுகளின் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதென்றும் இந்திய – இலங்கை அரச தரப்பு அதிகாரிகளிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டது. புதுடில்லியில் இடம்பெற்ற பாதுகாப்பு உயர் மாநாட்டிலே இவ் முடிவுகள் எடுக்கப்பட்டன.

(“தமிழக மீனவர்களைக் கண்டித்து யாழ் நகரில் ஆர்ப்பாட்டம்” தொடர்ந்து வாசிக்க…)

மகிந்தரின் வழியில் சீ.வி.கே அதிரடியில்….!

தமிழரசுக்கட்சியனை விமர்சித்து கேள்வி எழுப்பும் புலம்பெயர் தமிழ் ஊடகங்களை தடை செய்யவேண்டுமென வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கோரியுள்ளார்.
இலங்கையினில் வெளியிடப்படும் அனைத்து இணையங்களும் முறைப்படி பதிவு செய்யப்படுவதற்கும் அவை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்ததுவதற்கு கூடிய சட்ட ஏற்பாடுகளை துரிதமாக மேற்கொள்ளுமாறும் பதிவு செய்யப்படாத மற்றும் விதிகளை மீறும் புலம்யெபர் இணைய தளங்களை தொழில்நுடப ரீதியாக தடைசெய்யும் அதிகாரத்தை ஏற்படுத்தும் சட்ட ஏற்பாடுகளைநடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இலங்கை அரசின் புனரமைப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரை கோரியுள்ளார்.
இது தொடர்பினில் வடமாகாணசபை அமர்வினில் பிரேரணையொன்றினையும் சீ.வி.கே.சிவஞானம் கொண்டுவந்திருந்தார்.

(“மகிந்தரின் வழியில் சீ.வி.கே அதிரடியில்….!” தொடர்ந்து வாசிக்க…)