(மாதவன் சஞ்சயன்)
வடக்கின் முதல்வர் அடுத்தடுத்து விடும் அறிக்கைகள் சில விடயங்களை கூறாமல் கூறுகிறது. மிகவும் எதிர் பார்க்கையுடன் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் சம்மந்தர் தன் ஆளுமை மூலம் கொண்டுவந்த விக்னேஸ்வரன் பதவி ஏற்பின் போதே ஒற்றுமைக்கு சவாலானார். முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல அவரது தொடர் நடவடிக்கைகள் விமர்சனத்துக்கு வழிவிட்டது. நாளுக்கு நாள் அவர் அன்னியப்பட தொடங்கினார். ஆரம்பத்தில் அவருக்கு அரணாக இருந்தவர்களை கூட விலக செய்யும் செயலை அவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் செய்தார். தான் சார்ந்த கூட்டமைப்பை அமோக வெற்றி பெற செய்ய வேண்டிய தார்மீக கடமையில் இருந்து அவர் தவறினார். தான் நடுநிலை வகிப்பதாக கூறியது மறைமுகமாக கஜேந்திரகுமாரின் வெற்றியை எதிர்பார்த்தே. கராணம் சுமந்திரன் தோற்க்க வேண்டும் அல்லது வென்றாலும் சும்ந்திரனுக்கு குடைச்சல் கொடுக்க ஒருவர் வேண்டும் என்பதே அவர் விருப்பு.
(“முதல்வர் விடயம் புகையா ? பனிப்புகாரா ?” தொடர்ந்து வாசிக்க…)