சரணடைய மேலும் கால அவகாசம் கோரிய எமில்காந்தன்!?

விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த முக்கியஸ்தர் எனக் கூறப்படும் அந்தோணி எமில்காந்தன் என்பவர் இலங்கைக்கு வந்து நீதிமன்றத்தில் சரணடைவதற்கு மேலும் காலஅவகாசம் தேவை என அவரது சட்டத்தரணி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தார். எமில்காந்தன் வெளிநாட்டில் வசித்து வருகிறார். அவருக்கு எதிராக வெளியிடப்பட்டுள்ள சிகப்பு அறிக்கையை இரத்துச் செய்யுமாறும் அவர் தனது சட்டத்தரணியின் ஊடாக இதற்கு முன்னர் கோரியிருந்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஐராங்கனி பெரேரா, சந்தேக நபரை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸார் ஊடாக வெளியிடப்பட்டிருந்த சிகப்பு அறிக்கை இரத்துச் செய்தார்.

(“சரணடைய மேலும் கால அவகாசம் கோரிய எமில்காந்தன்!?” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 7)

நவரத்தினம் கொலை செய்யப்பட்டதை அடுத்து வெள்ளாளரும் கொஞ்சம் சாதிவெறியர்களுக்கு ஆதரவளிக்க தொடங்கினர்.ஆனாலும் அயலில் உள்ளவர்கள் உண்மை நிலை தெரிந்ததால் அவர்களை சமாதானம் செய்ய முயன்றனர்.ஒவ்வொரு விசயத்திலும் நமது பகுதி கையே முந்துவதால் இரத்தினத்தை எப்படியாவது கொலை செய்ய தீர்மானித்தனர்.இதற்கு இப்போது வெள்ளாளர் ஒத்துழைப்பும் கிடைத்தது.

(“தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 7)” தொடர்ந்து வாசிக்க…)

பிரான்ஸில் புலிகள் அமைப்பினர்களிற்கிடையே நடந்த துப்பாக்கி சண்டை!: ஒருவர் படுகாயம்!!

 

பிரான்சிஸில் இயங்கும் இரு புலிகள் இயக்க அமைப்புக்கள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரான்ஸ் கிளைப் பொறுப்பாளர் பரமலிங்கம் படுகாயமடைந்துள்ளார். இன்று இரவு பிரான்ஸ் தலைநகர் பாரிசின் புறநகர்ப் பகுதியில் இப் படுகொலை முயற்சி இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. சொத்துப் பங்கீடு, மாவீரர் தினவிழவை யார் நடத்துவது, யார் மக்களிடமிருந்து பணத்தை வாங்குவது போன்ற பல்வேறு பிரச்சனைகளால் பிரான்சில் இயங்கும் இரு புலிளாதரவு இயக்கப்பிரிவினரிடையே உள்ள பகை முரண்பாடே இத்தாக்குதல்களுக்கு காரணம் என பிரான்ஸ் வாழ் தமிழர்கள் பேசிக்கொள்கிறார்கள். கடந்த 18.05.2015 அன்று ஆயுததாரிகளின் கத்திக் குத்திற்கு இலக்காகிப் பரமலிங்கம் அவர்கள் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய அரசியல் யாப்பிற்கான இலங்கை தலித் சமூகமேம்பாட்டு முன்னணியினரின் பரிந்துரைகள்.

இலங்கையில் 2015 இற்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றம் காரணமாக உருவாகிய புதியஐனாதிபதி மீதும், தேசிய அரசாங்கத்தின் மீதும் சிறுபான்மை இன மக்களின் எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் அதிகரித்திருக்கின்றன. இந்நிலையில் விரைவில் உருவாக்கப்பட இருக்கும் புதிய அரசியல் யாப்புக்கான ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டிருப்பதனை இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி வரவேற்கின்றது.

(“புதிய அரசியல் யாப்பிற்கான இலங்கை தலித் சமூகமேம்பாட்டு முன்னணியினரின் பரிந்துரைகள்.” தொடர்ந்து வாசிக்க…)

ஜேர்மனியின் சமஷ்டி முறைமையை பரிசீலிக்கத் தயார்!

இனப்பிரச்சினைக்கு, ஜேர்மனியில் உள்ள சமஷ்டி ஆட்சிமுறை போன்ற தீர்வை ஏற்றுக்கொள்ள சிறிலங்கா அரசாங்கம் இணங்கினால், அதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலிக்கத் தயார் என்று தெரிவித்துள்ளார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். சண்டே ரைம்ஸ் வாரஇதழுக்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அளித்திருந்த செவ்வி ஒன்றில், “தற்போதைய அரசியலமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தசட்டத்தின் ஏற்பாடுகளும் மாகாணசபை முறைமையின் ஏற்பாடுகளும் அவ்வாறே இருக்கும். இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசியலமைப்பில் என்ன இருக்கிறதோ, அது தொடர்ந்தும் இருக்கும். எனினும் தீர்வு முறை என்று வரும்போது நாங்கள் ஜேர்மனியில் உள்ள முறைமை தொடர்பாக ஆராய்வதற்கு தயாராக இருக்கிறோம். அத்துடன் வேறுபல முறைமைகள் குறித்தும் ஆராய்வோம்” என்று கூறியிருந்தார்.

(“ஜேர்மனியின் சமஷ்டி முறைமையை பரிசீலிக்கத் தயார்!” தொடர்ந்து வாசிக்க…)

சர்ச்சையைத் தோற்றுவித்துள்ள இனக்கலப்பு திருமணம்?

கலப்புத் திருமணத்தின் மூலம், உண்மையான சமாதானத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்று, வட மாகாண ஆளுனராகப் பொறுப்பேற்ற ரெஜினோல்ட் குரே தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதலில் தமிழ் மக்களின் உரிமைகளைக் கொடுங்கள் பின்னர், கலப்புத் திருமணம் பற்றி பார்த்துக் கொள்ளலாம் என்று பதிலடி கொடுத்துள்ளார் வடமாகாண முதலமைச்சர். கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் உரையாற்றிய வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே, சாதி, சமயம், இனம் என்ற தனித்துவம் பாராமல், கலப்பு வாழ்க்கை மூலமாக நாட்டில் உண்மையான சமாதானத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்த முடியும் என்று கூறியிருந்தார்.

(“சர்ச்சையைத் தோற்றுவித்துள்ள இனக்கலப்பு திருமணம்?” தொடர்ந்து வாசிக்க…)

தமிழர்கள் தொடர்ந்தும் பகடைக்காய்களா?

போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்காக நாட்டு மக்களுடன் கலந்தாலோசனை செய்து நல்லிணக்க பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துவதற்கு அரசு மேற்கொண்டுள்ள செயற்றிட்டம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு நீதி வழங்குவது என்றும் அவற்றை அடையும் வழிகள் குறித்தும் நாட்டு மக்களிடம் பரந்துபட்ட கருத்துக்களை கேட்டறிவதும்தான் இந்த செயற்றிட்டத்தின் நோக்கம் என்று அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான இணையமொன்றை ஆரம்பித்துப் பேசிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இந்த நடவடிக்கையானது சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்தும் செயலென்றோ வெறுமனே ஒரு கண்துடைப்பு நடவடிக்கை என்றோ எண்ணவேண்டாம் என்றும் தமது அரசு இதயசுத்தியுடன் இந்த செயற்பட்டில் இறங்கியிருப்பதாக கூறியிருக்கிறார்.

(“தமிழர்கள் தொடர்ந்தும் பகடைக்காய்களா?” தொடர்ந்து வாசிக்க…)

யாழ்ப்பாணத்தில் நேற்று 4 பாகை செல்சியசால் எகிறிய வெப்பநிலை!

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வழமைக்கு மாறாக வெப்பநிலை அதிகரித்துக் காணப்பட்டதாக மக்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். வழக்கத்தை விடவும் 4பாகை செல்சியஸ் அதிகமாக வெப்பநிலை காணப்பட்டதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் வழமையை விடவும் அதிகமான வெப்பநிலை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அனுராதபுரம், மட்டக்களப்பு, குருநாகல், மகாஇலுப்பல்லம, புத்தளம், இரத்மலான, வவுனியா ஆகிய பகுதிகளில் வழமையை விட 2 பாகை செல்சியஸ் அதிகமான வெப்பநிலை பதிவானது. நாட்டின் ஏனைய பகுதிகளிலும், வழக்கத்தை விட சற்று அதிகமான வெப்பநிலை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அம்பாந்தோட்டை, கட்டுகஸ்தோட்டை, மன்னார், மற்றும் திருகோணமலையில் வழக்கத்தை விடவும், 3 பாகை செல்சியஸ் அதிகமான வெப்ப நிலை காணப்பட்டது. இதனைவிட இரவு நேர வெப்பநிலையும் வழக்கத்தை விட சுமார் 2, 3 பாகை செல்சியஸ் அதிகமாகவே காணப்பட்டதாக சுட்டிக்கட்டப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் நேற்றைய தினம் வெளியில் நடமாட முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க PTIயை கையில் எடுங்கள்!

இந்திய – இலங்கை ஒப்பந்தத்துக்கு அமைய தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் வேறு கைதிகளுக்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொது மன்னிப்பளித்து அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அவ்வாறு நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில், நாட்டில் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைமை மேலும் மோசமடையும் எனவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கோரியுள்ளார். இது தொடர்பாக நேற்று திங்கட்கிழமை (22) ஊடகங்களுக்குக்கு அவர் அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ‘சில தமிழ் அரசியல்வாதிகள் வழங்கிய உறுதிமொழிகளுக்கு அமைய, தமக்கு விடுதலை கிடைக்குமென நம்பி, முன்பு இரு தடவைகள் தங்களது உண்ணாவிரதத்தைக் கைவிட்ட தமிழ் அரசியல் கைதிகள், மீண்டும் தமது உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர்.

(“தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க PTIயை கையில் எடுங்கள்!” தொடர்ந்து வாசிக்க…)

மலையக தமிழர்களை அரசுக்கு எதிராக திருப்பிய ‘ரோ’ [RAW] ?!

மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராக, மலையகத் தமிழர்களின் வாக்குகளை திசைதிருப்பி விட்டது இந்தியப் புலனாய்வுப் பிரிவான ‘ரோ’ தான் என்று, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ”அதிபர் தேர்தலில் நாங்கள் தோல்வியை எதிர்பார்க்கவில்லை. இந்தியாவுடன் சில பிரச்சினைகள் இருந்தது எமக்குத் தெரியும். ஆனால் அது மிகவும் கடினமாக இருந்தது.காலி கலந்துரையாடலில், முக்கிய உரையாற்றுவதற்காக, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலை அழைத்திருந்தோம். இந்தியாவின் புலனாய்வுப் பிரிவான ‘ரோ’, ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக பணியாற்றுகிறது என்று அவரிடம் நான் கூறியிருந்தேன். எப்படி இது நடக்கிறது என்று அவரிடம் கேட்டேன். அதிபர் ராஜபக்ச தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று அவர் கூறினார்.

(“மலையக தமிழர்களை அரசுக்கு எதிராக திருப்பிய ‘ரோ’ [RAW] ?!” தொடர்ந்து வாசிக்க…)