மகிந்தவின் வயிற்­றி­லுள்ள குழந்தை வெளிச்­சத்தை பார்க்காது!

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ முடி­யு­மானால் புதிய கட்­சி­யொன்றை ஆரம்­பித்துக் காட்­டட்டும். வயிற்­றி­லுள்ள குழந்தை வெளிச்­சத்தை காணாது என்­பது போலவே மஹிந்­தவின் புதிய கட்சி மந்­திரம் அமைந்­துள்­ளது. எனினும், அடுத்த தேர்­தலில் அன்னம் சின்­னத்தில் அல்ல. அதற்கு மாறாக யானையின் வாலில் கோட்­டாலும் ஐக்­கிய தேசியக் கட்­சியே வெற்­றிப்­பெறும் என்று அக் கட்சியின் குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நளின் பண்­டார தெரி­வித்தார். புதிய கட்சி என்ற பீதியை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் ஏற்­ப­டுத்தி ஊழல் மோச­டிக்­கா­ரர்­களை பாது­காப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. எனினும் இவ்­வா­றான அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு ஜனா­தி­பதி அஞ்­ச­மாட்டார்.

(“மகிந்தவின் வயிற்­றி­லுள்ள குழந்தை வெளிச்­சத்தை பார்க்காது!” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்(பகுதி 6)

நவரத்தினம் என்பவர் கொலை செய்யப்பட்டதை சாக்காக வைத்து பொலிஸ் நமது ஊருக்குள் புகுந்தது.இக் கொலையில் மாணிக்கம் இராசன்,சின்னத்தம்பி செல்லத்துரை ,நல்லையா ஆறுமுகம்,சோலையன் செல்லப்பா ஆகியோரை குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்தனர். அன்று பல சட்டத்தரணிகள் யாழ்ப்பாணத்தில் இருந்தனர்.யாரும் உதவ முன்வரவில்லை .தமிழரசுக்கட்சி,தமிழ் காங்கிரஸ் கட்சி ஆகியவை இதில் ஒன்றாக நின்றன.முன்னாள் பனம் பொருள் அபிவிருத்திச் சபை தலைவர் நடராசா சாவகச்சேரி பா.உ. வி.என.நவரத்தினத்தின் பரம விசுவாசி.அவரும் நவரத்தினம் மூலமாக ஒழுங்கு செய்வதாக கூறுனார்.எதுவும் நடக்கவில்லை.

(“தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்(பகுதி 6)” தொடர்ந்து வாசிக்க…)

ஹரிஸ்ணவிக்கு பட்டப்பகலில் வீடு புகுந்து நடந்த கொடூரம்! அதிபர் மௌனம்?

‘ஹரிஸ்ணவி, ஹரிஸ்ணவி என்று அழைத்தவாறு கேற்றை திறந்து உள்ளே சென்று கதவை திறந்தபோது அந்த தாய் ஒரு நிமிடம் ஆடிப்போய் அம்மா ஏன் இப்படி செய்தாய், என்ன நடந்தது என அலறினாள். அந்த தாயின் வலியின் குரல்கள் கேட்டு அக்கம் பக்கம் எல்லாம் ஓடிவந்தது. கட்டிலில் தனது மகளை படுக்க வைத்து தாய் கண்ணீர் மழை பொழிந்து கொண்டிருந்தாள். அன்று அந்த தாய்… இன்று வவுனியாவே சோகத்தில் இருக்கிறது. இதற்கு காரணம் என்ன? யார் இந்த ஹரிஸ்ணவி? அவருக்கு என்ன நடந்தது? கடந்த 16 ஆம் திகதி செவ்வாய்கிழமையும் வழமை போலவே விடிந்தது. பாடசாலைக்கு சென்ற மாணவர்கள ஒருபுறம். வேலைக்கு சென்ற உத்தியோகத்தர்கள் மறுபுறம் என வழமை போலவே அந்த காலை சுறுசுறுப்பக இயங்கியது.

(“ஹரிஸ்ணவிக்கு பட்டப்பகலில் வீடு புகுந்து நடந்த கொடூரம்! அதிபர் மௌனம்?” தொடர்ந்து வாசிக்க…)

எமது பிள்ளைக்கு நடக்காது, என்பதற்கு என்ன உத்தரவாதம்? அனைவரும் அணி திரள்வோம்!

‘யாருக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை. எனக்கென்ன?’ என்று சிந்திக்கும் சுயநலப்போக்கும், தனது வீட்டு முற்றம் வரைக்கும் பிரச்சினை தேடிவரும் வரைக்கும் காத்திருக்கும் மனோநிலையுமே கூட்டு வன்புணர்வு படுகொலைகளுக்கு மூலகாரணிகள் என்று ‘வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவும்’, ‘கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் வடக்கு கிழக்கு மாகாண சங்கங்களின் குடும்பங்களும்’ தமிழ் சமுகத்தை கடுமையாக சாடியுள்ளன. சரண்யா, வித்தியா, சேயா, கரிஸ்ணவிகளுக்கு நிகழ்த்தப்பட்ட வன்கொடுமை ‘நாளை எனது வீட்டு பெண் பிள்ளைக்கு நடக்காது, என்பதற்கு என்ன பாதுகாப்பு உத்தரவாதம் உண்டு?’ என்பதை சிந்தித்து ஒவ்வொரு குடும்பமும் (பிரஜையும்) கலக்கத்தோடும் – விழிப்புணர்வோடும் சமுக அநீகளுக்கு எதிராக, பெரும் மக்கள் கூட்டமாக – கூட்டுக்குடும்பமாக வீதியில் இறங்கிப்போராட வரவேண்டும் என்றும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். மாணவி கரிஸ்ணவியின் படுகொலைக்கு நீதிகேட்டு வவுனியா மாவட்டத்தில் 23.02.2016 அன்று நடைபெறவுள்ள கவனவீர்ப்பு அழுத்த போராட்டத்துக்கும், மறுநாள் 24.02.2016 அன்று இடம்பெறவுள்ள இயல்புநிலையை முடக்கும் முழுஅடைப்பு கர்த்தாலுக்கும் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்து அவர்கள் விடுத்துள்ள கூட்டு ஊடக அறிக்கையிலேயே மேலேகுறித்தவாறு தெரிவித்துள்ளனர்.

(“எமது பிள்ளைக்கு நடக்காது, என்பதற்கு என்ன உத்தரவாதம்? அனைவரும் அணி திரள்வோம்!” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரத போராட்டம்!

கொழும்பு – மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 15 தமிழ் அரசியல் கைதிகள் செவ்வாய்க்கிழமை (23-02-2016) முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர். அநுராதபுரம் சிறைச்சாலையில் எந்தவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாமல் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியிலிருந்து தாம் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றோம் எனவும், உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோரி இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் திங்கள் (22-02-2016) தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், கொழும்பு – மகஸின் சிறைச்சாலையின் ‘ஜே’ பிரிவில் உள்ள 14 ஆண் தமிழ் அரசியல் கைதிகளும், பெண்கள் பிரிவில் உள்ள ஒரு பெண் தமிழ் அரசியல் கைதியுமாக 15 பேர் 23-02-2016 செவ்வாய்க்கிழமை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர் என்று அறிவித்துள்ளனர்.

 

இது தொடர்பான அறிவித்தல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல், அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் – காணாமல்போனோர் விவகாரம் தொடர்பில் நாளை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்புப் பிரேரணை ஒன்றை, எதிர்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கொண்டுவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கூட்டமைப்புடன் இணையத் தயார் ஈரோஸ்!

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து, எதிர்காலத்தில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக, ஈழவர் ஜனநாயக முன்னணி எனப்படும் ஈரோஸ் கட்சியின் தலைவர் ஆர்.பிரபாகரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும் போதே, அவர் இதனை குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், இன்றைய சூழலில் விரும்பியோ விரும்பாமலோ தமிழ் தேசிய கூட்டமைப்புதான் தமிழ் மக்களின் உண்மையான அடையாளாம். அதன் மூலமாகத்தான் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுபெற முடியும். அதனால்தான் ஈரோஸ் மறுசீரமைப்பு மாநாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து அரசியில் பயணத்தை மேற்கொளவதென முடிவு காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழ் மக்கள் பேரவை அல்ல எந்தப் பேரவையாலும் அழிக்க முடியாது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஈ.பி.டி.பி. கட்சிக்கு மானம் இருக்கின்றதா? சட்டத்தரணி கேள்வி!

முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. கட்சிக்கு என்ன மானம் இருக்கின்றது? இவ்வாறு சட்டத்தரணியும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார். முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த அரசால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் அதன் ஆணையாளர்கள், ஈ.பி.டி.பி. கட்சி ஒரு சட்டவிரோத ஆயுதக் குழு என்று இந்த நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது அந்தக் கட்சிக்கு என்ன மானம் இருக்கின்றது? இவ்வாறு நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார் சட்டத்தரணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

(“ஈ.பி.டி.பி. கட்சிக்கு மானம் இருக்கின்றதா? சட்டத்தரணி கேள்வி!” தொடர்ந்து வாசிக்க…)

தகர்ந்து போகும் வாக்குறுதிகளின்’ வழியில் நல்லாட்சி அரசாங்கமும் பயணிக்கின்றது!

தேசிய நல்லாட்சி அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் வைத்திருந்த நம்பிக்கைஇ எதிர்பார்ப்பு அனைத்தும் தகர்ந்து போய்க் கொண்டிருப்பதாக தமிழ் மக்கள் தற்பொழுது உணரத் தொடங்கி விட்டனர். நல்லாட்சி அரசாங்கம் ‘தகர்ந்து போகும் வாக்குறுதிகளுடன்’ வரவில்லை என்று ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் பிரகடனப்படுத்தியது மாத்திரமல்ல மனித உரிமை குறித்த விவகாரத்திற்கு ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கு அனுசரணையும் வழங்கியது. தமது வாக்குறுதிகள் ‘தகர்ந்து போகும் வாக்குறுதிகள்’ அல்ல என பிரகடனப்படுத்திய சொற் பிரயோகங்களின் சத்தம் அடங்குவதற்குள்ளேயே இலங்கைத் தரப்பிலிருந்து தனது பிரகடனத்தையே தகர்த்தெறியும் வார்த்தைப் பிரயோகங்களை உதிர்க்கத் தொடங்கி விட்டது. மனித உரிமை மீறல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்றிக் கொள்வதை இலக்காகக் கொண்டு நல்லாட்சி அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைப் போன்று காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளை மென்மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணியினரின் செயற்பாடுகளும் உள்ளன.

(“தகர்ந்து போகும் வாக்குறுதிகளின்’ வழியில் நல்லாட்சி அரசாங்கமும் பயணிக்கின்றது!” தொடர்ந்து வாசிக்க…)

வேலையற்ற பட்டதாரிகள்! அரசின் தீர்வு?

வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காணக்கோரி அண்மைய நாட்களாக நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இப் போராட்டங்களின் தொடர்சியாக கடந்த வாரம் கொழும்பில் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். தமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக் கோரி அரசாங்கத்திடம் முன்வைத்த காலக்கெடு முடிவடைந்த நிலையிலேயே இவ் ஆர்ப்பட்டத்தினை நடத்தினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தினை நோக்கி முன்னேற முற்பட்ட வேளையில் அங்கு பெரும் களோபரமும் இடம்பெற்றது. இவ்வாறாக வேலையற்ற பட்டதாரிகளின் கோரிக்கைகளும் போராட்டங்களும் நாட்டில் தொடர்ச்சியாக அதாவது ஆண்டுதோறும் நடைபெறுகின்றன. குறைந்தது 3 ஆண்டுகளுக்கு ஓர் முறையேனும் பல்கலைக் கழகங்களில் இருந்து வெளியேறிய பட்டதாரிகள் வீதிக்கு இறங்கி வேலை வாய்ப்புக்களுக்காக போராட வேண்டியுள்ளது.

(“வேலையற்ற பட்டதாரிகள்! அரசின் தீர்வு?” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 5)

இரத்தினம் கொலை முயற்சிகள் யாவும் தோல்வி கண்டதை அடுத்து ஊரையே பழிவாங்க திட்டம் போட்டார்கள்.இவரகளுக்கு முன் எச்சரிக்கையாக எமது ஊரவர்கள் இரவு வேளைகளில் தெருக்கள்,பற்றைகள் எல்லாம் இரவுகளில் வலம் வந்தனர்.இதனால் இலகுவாக திட்டம் தீட்ட முடியவில்லை.இதை அறிந்த அவர்கள் பொலிசார் உதவியை நாடி நமது ஊரவர்களை சோதனைகள் போட வைத்தனர்.எமது ஊரில் எல்லைகளில் தமிழ் பொலிசார் நடமாடி அவர்களைக் பாதுகாக்க உதவினர்.

(“தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 5)” தொடர்ந்து வாசிக்க…)