சுவிஸ் நாட்டில் உருவாகும் புதிய சட்டம் தமிழர்களையும் பாதிக்குமா….?

சுவிட்சர்லாந்தில் நீண்ட காலமாக வாழும், வதிவிட அனுமதி பெற்ற தமிழர்களையும், பிற வெளிநாட்டவர்களையும், இலகுவாக நாடுகடத்துவதற்கான சட்டத் திருத்தம் வாக்கெடுப்பிற்கு விடப்படவுள்ளது. பெப் 28 நடக்கவிருக்கும் வாக்கெடுப்பில், சட்டத்திற்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் கிடைத்தால், அது அங்கு வாழும் தமிழர்களையும் பாதிக்கும். இது தொடர்பாக சுவிட்சர்லாந்தில் வாழும் தவராஜா சண்முகம் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியை கீழே தருகிறேன்:

(“சுவிஸ் நாட்டில் உருவாகும் புதிய சட்டம் தமிழர்களையும் பாதிக்குமா….?” தொடர்ந்து வாசிக்க…)

வட மாகாண சபையின் ஏமாற்றும், கைக்கூலித் தன்மையும்!

வலிகாம கிணறுகளில் கழிவு எண்ணெய்! வட மாகாண சபையின் ஏமாற்றும், கைக்கூலித் தன்மையும்!

 

வலிகாமப் பகுதியின் கிணறுகளில் ”கழிவு எண்ணெய்கள்” கலந்து, இரண்டு லட்சம் பேர்வரையானவர்கள் பல்வேறுபட்ட பாதிப்புக்களை நீண்ட காலமாக எதிர்நோக்கி வருகின்றனர். இந்த விடயம் தொடர்பாக வட மாகாண முதலமைச்சரும், அமைச்சர் ஐங்கரநேசனும், காலத்திற்குக் காலம் பல்வேறு அறிக்கைகளையும் வெளியிட்டு வந்துள்ளதுடன், ஒரு ”நிபுணர் குழு” இனையும் அமைத்து, அந்த நிபுணர் குழுவானது ஒரு அறிக்கையையும் அண்மைக் காலத்தில் வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், கிணற்று நீரில் ஆபத்தான BTEX இல்லை எனவும், மலக் கழிவுகள், நைற்றேற்றும் தான் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது!

(“வட மாகாண சபையின் ஏமாற்றும், கைக்கூலித் தன்மையும்!” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு மாகாணசபைக்கு அழுத்தம்!

மத்திய அரசாங்கத்துடன் வடக்கு மாகாணசபை, ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று இந்தியாவும் மேற்குலகமும், அழுத்தங்களைக் கொடுத்திருப்பதாக கொழும்பு வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாணசபை தனித்துச் செயற்படுவதை விரும்பத்தக்க விடயமல்ல என்று, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு, இந்திய, அமெரிக்க மற்றும் மேற்குலக இராஜதந்திரிகள் எடுத்துக் கூறியுள்ளனர். அண்மைக்காலங்களில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகள், நிலைமைகளை ஆராய்ந்த பின்னரே, வடக்கு மாகாண முதலமைச்சரிடம் தமது நிலைப்பாட்டை எடுத்துக் கூறியுள்ளனர்.

(“வடக்கு மாகாணசபைக்கு அழுத்தம்!” தொடர்ந்து வாசிக்க…)

நான் கம்யூனிஸ்ட் என்பதில் பெருமைபடுகின்றேன்

“இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டு 90 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. நீங்கள் ஏறத்தாழ 72 ஆண்டுகள் இந்த இயக்கத்தில் செயல்பட்டு வருகிறீர்கள். இந்தத் தருணத்தை எப்படி உணர்கிறீர்கள்?’’

(“நான் கம்யூனிஸ்ட் என்பதில் பெருமைபடுகின்றேன்” தொடர்ந்து வாசிக்க…)

மஹிந்த தலையை மைத்திரியிடம் வழங்கியதற்கு சமால் சாட்சி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்கியதற்கு முன்னாள் சபாநாயகர் சமால் ராஜபக்ஸவே சாட்சி என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். பதுளையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர்இதனைக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்தவை யாரும் அச்சுறுத்தவில்லை எனவும் மிகவும் சுமூகமான முறையில் கட்சித் தலைமப் பதவி ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

(“மஹிந்த தலையை மைத்திரியிடம் வழங்கியதற்கு சமால் சாட்சி!” தொடர்ந்து வாசிக்க…)

சமஷ்டியால் பிரிந்துபோகமாட்டோம் – உரிமையைத் தந்தால் சேர்ந்து வாழ்வோம்!

சமஷ்டி முறையில் சிறுபான்மையினரின் உரிமைகளைக் கொடுத்தால் அவர்கள் உங்களுடன் சேர்ந்திருப்பார்கள் என்று வட மகாணா முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிடுகின்றார். சர்வதேசத்தில் சமஷ்டி ஆட்சி முறை அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில் வாழும் மக்கள் பிரிந்து போகவில்லை என்றும், அரசியல்வாதிகள் சிங்கள மக்களின் மனதில் சமஷ்டி என்றால் பிரிவினை என்ற கருத்தினை விதைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

(“சமஷ்டியால் பிரிந்துபோகமாட்டோம் – உரிமையைத் தந்தால் சேர்ந்து வாழ்வோம்!” தொடர்ந்து வாசிக்க…)

மேடையிலிருந்த சுமந்திரனுக்கு அறிவுரை சொன்னார் வடக்கு முதலமைச்சர்!

வடக்கு மாகாண புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் பதவியேற்பு வைபவத்தில், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசிக் கொண்டனர். இருவரும் மாறிமாறி அறிக்கைகள் விட்டு முரண்பட்டிருந்தனர். இவ்வாறானதொரு நிலையிலேயே நேற்று முன்தினம் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசியுள்ளனர்.

(“மேடையிலிருந்த சுமந்திரனுக்கு அறிவுரை சொன்னார் வடக்கு முதலமைச்சர்!” தொடர்ந்து வாசிக்க…)

வேலணையில் பல கோடி திருடிய ஈபிடிபி!

ஈபிடிபி குழுவினர் செய்துள்ள மாபெரும் ஊழல் / கடந்த ஜுலை 31 ம் திகதி வரைக்கும் ஈபிடிபி யீனரின் ஆளுகைக்குள் செயற்பட்ட வேலணை பிரதேச சபையினால்புங்குடுதீவு மு ற்றவெளி பகுதியில் இப்படத்தில் காணப்படும் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது . கடந்த இரண்டரை வருடங்களுக்கு மேலாக இவ்வாறான நிலையிலே காணப்படுகிறது பல கோடி பெறுமதியான மக்களின் வரிப்பணம் இக்கட்டடத்தினுள் முடக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு முதலாம் வட்டாரத்திலே வழமையான சந்தை காணப்படுகின்றது. அச்சுற்றுப்புற சூழலினை சந்தையடி என்றே காலாகாலமாக அழைப்பர் . இந்நிலையில் ஈபிடிபி தலைமையிலான வேலணை பிரதேச சபையினர் சிறிய மழைக்கே பல மாதங்கள் வெள்ளம் தங்ககூடிய முற்றவெளி பகுதியில் புதிய சந்தையொன்றினை அமைக்க முனைந்துள்ளனர்.

(“வேலணையில் பல கோடி திருடிய ஈபிடிபி!” தொடர்ந்து வாசிக்க…)

கையை உடைத்த பாவம் வேண்டாம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்திய பாவத்துக்கு உள்ளாகாமல், அரசியலிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கௌரவமாக விடைபெற வேண்டும் என மத்திய மாகாண பெருந்தெருக்கள், மின்சக்தி, வீடமைப்பு மற்றும் போக்குவரத்து அமைச்சர் எதிரிவீர வீரவர்தன கோரிக்கை விடுத்தார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்த வீரவர்தன, ‘ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஒருபோதும் பிளவுபடாது. அதற்கு, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் இடமளிக்க மாட்டார்.

(“கையை உடைத்த பாவம் வேண்டாம்” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்(பகுதி 4)

இந்தப் போராட்டமானது பொது இடங்களில் சம உரிமைகோரி நடத்தப்பட்டது.தனிப்பட்ட ரீதியில் யாருடனும் பகை தீர்க்க இல்லை.சாதிவெறியர்கள் பகை தீர்பதிலேயே குறியாக நின்றனர்.எமது கிராமங்களைச் சுற்றி பல கிராமங்களில் தாழ்த்தப்பட்ட சாதியினர் இருந்தனர்.ஆனாலும் பங்குபெற முன்வரவில்லை.தார்மீக ரீதியாக பல பொருளாதார ஒத்துழைப்புகளை மானாவளை பகுதியினர் வழங்கினர்,.கொடிகாம்ம்,மிருசுவில்,வரணி, அல்லாரை, வேம்பிராய் போன்ற இடங்களில் அதிகமாக சிறுபான்மை தமிழர்கள் இருந்தும் ஆதரவளிக்க தயங்கினர்.இதேபோலவே சங்கானையிலும் நடந்தது.அங்கேயும் சங்கானை ஒரு பகுதியினர்,சண்டிலிப்பாய் போன்ற இடங்களின் ஒத்துழைப்பு குறைவாக இருந்தது.நிச்சாம்ம் மட்டும் தனியே களமாடியது.

(“தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்(பகுதி 4)” தொடர்ந்து வாசிக்க…)