வடக்கின் புதிய ஆளுநருக்கு வரவேற்பு!

வடமாகாண புதிய ஆளுநராக வந்திருக்கும் ரெஜினோல்ட் குரே தமிழ் பேசக்கூடியவராக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் தனது கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (19) ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது, இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறகையில், ஆசிரியராக இருந்தவர் கொடுத்துத்தான் பழக்கம் யாரையும் கெடுத்துப் பழக்கமிருக்காது. பல தகைமைகள் உள்ள ஒருவராக இவர் இருக்கின்றார்.

(“வடக்கின் புதிய ஆளுநருக்கு வரவேற்பு!” தொடர்ந்து வாசிக்க…)

திக்கம் வடிசாலையை பார்வையிட்டார் டக்ளஸ்?

இயங்கா நிலையிலுள்ள திக்கம் வடிசாலையின் தொழிற்சாலையையும் புதர் மண்டிக் காணப்படும் வளாகத்தையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பார்வையிட்டார்வடமராட்சிக்கு நேற்றைய தினம் (18) விஜயம் மேற்கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அதன் ஒருகட்டமாக திக்கம் வடிசாலைக்குச் சென்று அதன் தற்போதைய நிலவரம் தொடர்பில் நேரில் ஆராய்ந்தறிந்து கொண்டார். டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் திக்கம் வடிசாலை மிகச் சிற்நத முறையில் இயங்கியிருந்த அதேவேளை அங்கு நூற்றுக்கணக்கான பணியாளர்களும் வேலைவாய்ப்பினைப் பெற்றிருந்தனர். இந்நிலையில் தற்போது திக்கம் வடிசாலை கடந்த பல மாதங்களாக இயங்காத நிலையில் அங்கிருக்கும் தொழிற்துறை சார்ந்த உபகரணங்களும் ஏனைய உபகரணங்களும் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றன.

(“திக்கம் வடிசாலையை பார்வையிட்டார் டக்ளஸ்?” தொடர்ந்து வாசிக்க…)

கோத்தாவிற்கு கிறுக்கு? – டக்ளஸ்!

வடமாகாண சபை தேர்தல் காலத்தில் ஈ.பி.டி.பியிடம் இருந்து ஆயுதங்களை களைய வேண்டாம் என நான் கூறியதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருக்கும் கருத்தின் ஊடாக அவர் தன்னை ஒரு ஜனநாயக வாதியாக காட்டிக் கொள்ள நினைக்கின்றார். அவருடைய இந்தக் கருத்து கிறுக்குத்தனமானது. மேற்கண்டவாறு முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். சமகால அரசியல் விவகாரங்கள் குறித்து யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அண்மையில் வழங்கிய செவ்வி ஒன்றில் குறிப்பிட்டிருக்கின்றார்.

(“கோத்தாவிற்கு கிறுக்கு? – டக்ளஸ்!” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்( பகுதி 2)

இந்தப் போராட்டத்தை அச்சுவேலியிலும் தொடங்க சிலர் முன் வந்தனர்.அங்கே பெரிய சமூகமாக பொருளாதார பலத்துடன் இருந்தாலும் போராட யாரும் முன் வரவில்லை .அங்கேயும் கோவியர் சமூகத்தைச் சேர்ந்த தவராசன் என்பவன் தலைமையில் சாதி வெறியர்கள் அணி திரண்டனர்.

(“தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்( பகுதி 2)” தொடர்ந்து வாசிக்க…)

அரசியலமைப்பை மாற்றிப் பயனில்லை புதிய யாப்பை உருவாக்குவதே அவசியம்

அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பாக ஊடகவியலாளர்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில் வெகுஜன ஊடகத்துறை அமைச்சு கொழும்பு விசும்பாயவில் செயலமர்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில் அரசியலமைப்பு சட்டத்தரணியும், 2000ஆம் ஆண்டு அரசியலமைப்பு திருத்த தயாரிப்பில் முன்னிலை வகித்தவரும், தற்போதைய அரசியலமைப்பு மறுசீரமைப்புப் பணியில் முக்கிய நபராகவும் விளங்கும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன விசேட விரிவுரையொன்றை நடத்தியிருந்தார். அதன் முழுவிபரம் வருமாறு:

(“அரசியலமைப்பை மாற்றிப் பயனில்லை புதிய யாப்பை உருவாக்குவதே அவசியம்” தொடர்ந்து வாசிக்க…)

கூட்டமைப்பு குழுவாக இணைந்து செயற்படும்? சம்பந்தன் உறுதி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அடுத்து வரும் காலங்களில் ஒரு குழுவாக இணைந்தே அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும் என்று அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் 6 ஆம் திகதி இடம்பெறும் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் பின்னர், பங்காளிக் கட்சியின் தலைவர்களிடத்தில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான விசேட சந்திப்பொன்றும் நடைபெறவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றுப் புதன்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணி வரையில் கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளான – இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, தமிழரசுக் கட்சி மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், ரெலோ அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் க.சர்வவேஸ்வரன் (ஈ.பி.ஆர்.எல்.எப்.), கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

(“கூட்டமைப்பு குழுவாக இணைந்து செயற்படும்? சம்பந்தன் உறுதி!” தொடர்ந்து வாசிக்க…)

உள்ளக விசாரணையின் போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவரும்!

சிறிலங்கா அரசாங்கத்தினால் நடத்தப்படவுள்ள உள்ளக விசாரணையில், முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அதிர்ச்சியூட்டும் பல தகவல்களை வெளியிடுவார் என்று, சிறிலங்கா அமைச்சர், சரத் அமுனுகம தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர், “உள்ளக விசாரணையில் சிறிலங்கா இராணுவத்தினர் பற்றிய விவாதம் ஆரம்பிக்கும் போது, பல திடுக்கிடும் தகவல்களை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முன்வைக்கவுள்ளார். இதன்போது, இராணுவத்தினரைச் சுடுவதற்காக துப்பாக்கிதாரிகளுக்கு பணம் கொடுத்தது யார், விடுதலைப் புலிகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் என்ன, விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியது யார், அதில் புலிகள் கொள்வனவு செய்த துப்பாக்கிகளின் வகைகள் என்ன என்பன உள்ளிட்ட பல தகவல்கள் வெளிவரும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்டார். நாடாளுமன்றத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

(“உள்ளக விசாரணையின் போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவரும்!” தொடர்ந்து வாசிக்க…)

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கியூபாவுக்கு வரலாற்று விஜயம்

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அடுத்த மாதம் கியூபாவுக்கு வரலாற்று முக்கியம் வாய்ந்த விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக அமெரிக்க அரச வட்டாரம் உறுதி செய்துள்ளது. வரும் மார்ச் மாதம் நடுப்பகுதியில் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் ஒரு பரந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் ஒபாமா அதன் ஓர் அங்கமாக கியூபாவுக்கு செல்லவுள்ளார். வெள்ளை மாளிகை நேற்று ஒபாமாவின் விஜயம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதன்மூலம் பதவியில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் கியூபாவுக்கு பயணம் செய்யும் இரண்டாவது சந்தர்ப்பமாக இது அமையவுள்ளது. 1928 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த கல்வின் கூலிட்ஜ் கியூபாவுக்கு விஜயம் செய்திருந்தார்.

(“அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கியூபாவுக்கு வரலாற்று விஜயம்” தொடர்ந்து வாசிக்க…)

கழுதை சுதந்திரம் என்ன என்று தீர்மானிப்பதற்கு கழுதைக்கு சந்தர்ப்பம் வழங்கினால்?

கழுதை சுதந்திரம் என்றால் என்ன என்று தீர்மானிப்பதற்கு கழுதைக்கு சந்தர்ப்பம் வழங்கினால் என்னவாகும் என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கேள்வி எழுப்பினார். கழுதை சுதந்திரம் சம்பந்தமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு பதில் வழங்கும் விதமாகவே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் உரையாற்றும்போது, முதலில் இந்த கழுதை சுதந்திரம் எனும் கதையே ஒரு கழுதைக் கதை என்பதை கூறிக்கொள்ளவேண்டும் என்றார்.

(“கழுதை சுதந்திரம் என்ன என்று தீர்மானிப்பதற்கு கழுதைக்கு சந்தர்ப்பம் வழங்கினால்?” தொடர்ந்து வாசிக்க…)

நீர் மாசு விவகாரம்: நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்த்த ஐங்கரநேசன்!

சுன்னாகம் கழிவு ஒயில் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அழைப்பாணை விடுக்கப்பட்டபோதிலும் நீதிமன்றுக்கு சமூகமளிக்கவில்லையென தெரிவிக்கப்படுகிறது. கழிவொயில் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் சீராக மேற்கொள்வதில்லையென அப்பிரதேசங்களைச் சேர்ந்த இருசுகாதார வைத்திய அதிகாரிகள் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்த நிலையில், குறித்த வழக்கு மல்லாகம் நீதிமன்றத்தில் இன்று நீதிபதி ஏ. யூட்சன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

(“நீர் மாசு விவகாரம்: நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்த்த ஐங்கரநேசன்!” தொடர்ந்து வாசிக்க…)