உரிமைக்கான வேட்கையே தமிழர்களை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றது!

புதிய அரசியலமைப்புக்கு பொது மக்களின் அபிப்பிராயங்களை அறியும் குழுவினர் யாழ்ப்பாணத்தில் இம்மாதம் 15,16ஆம் திகதிகளில் தமது செயலமர்வுகளை நடத்தியிருந்தனர். ஏனைய மாவட்டங்களை விடவும் யாழ்ப்பாணத்தில் மிக அதிகமானவர்கள் கலந்து கொண்டு, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் அபிலாஷைகள் தொடர்பாக கருத்துக்களை பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு யாழ்ப்பாணத்தில் பெரும் எண்ணிக்கையானவர்கள் வருகை தரவில்லை. இந்த ஏமாற்றத்தை இந்தக் குழுவின் செயலமர்வுகளை கண்காணிக்கும் அமைப்பினர் வெளிப்படுத்தினர்.

(“உரிமைக்கான வேட்கையே தமிழர்களை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றது!” தொடர்ந்து வாசிக்க…)

கூகுள் பலூன் வீழ்ந்தது!

கூகுள் நிறுவனத்தினால் அதிவேக இணைய வசதியை ஏற்படுத்தும் நோக்கில் பரீட்சார்த்தமாக செலுத்தப்பட்ட வெப்பவாயு பலூன் புசல்லாவ – களுகல்லவத்தை பகுதியில் நேற்று புதன்கிழமை வீழ்ந்துள்ளது. குறித்த பலூன் மற்றும் இணைய கருவிகள் புப்புரெஸ்ஸ பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக அதிகாரியொருவர் தெரிவித்தார். சீரற்ற காலநிலை மற்றும் பலூனின் பயணப் பாதையில் ஏற்பட்ட தடங்கல்கள் காரணமாக இவ்வாறு இணைய கருவிகளுடன் பலூன் தரையில் வீழ்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது. ‘புரோஜெக்ட் லூன்’ எனப்படும் கூகுளின் அதிவேக இணைய சேவைக்கான பரிசோதனை கடந்த திங்கட்கிழமை இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது.

(“கூகுள் பலூன் வீழ்ந்தது!” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை பொருளாதாரத் தலையிடிக்கு சீன தைலம்!

பொருளாதாரத் தலையிடிக்கு சீன தைலத்தை நாடுகிறது இலங்கை! மார்ச் 6 இல் பீஜிங் பறக்கிறார் ரணில். சீனாவுடனான இருதரப்பு உறவுகளை பலப்படுத்திக் கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நான்கு நாட்கள் பயணம் மேற்கொண்டு அந்நாட்டுக்கு செல்லவுள்ளார். அமைச்சர் சரத் அமுனுகம இந்தத் தகவலை வெளியிட்டார். கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜேர்மனி விஜயத்தின் மூலம் இரு நாட்டு உறவு மேலும் வலுவடையும் என எதிர்பார்கின்றோம். ஐரோப்பாவில் மிகவும் முக்கிய நாடான ஜேர்மனி இலங்கையின் முக்கிய சந்தையாக உள்ளது. சில தரப்பினர் எமது வெளிநாட்டு கொள்கை தொடர்பில் விமர்சனம் செய்கின்றனர். ஆனால், அவர்களது காலத்தில் கடைபிடித்த கொள்கைகளினால் நாங்கள் சர்வதேசத்தில் தனிமைப்பட்டு பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டியிருந்தமை எமக்குத் தெரியும்.

(“இலங்கை பொருளாதாரத் தலையிடிக்கு சீன தைலம்!” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்(பகுதி1)

(1968 களில் யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் நடைபெற்ய தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் எமது சமூகத்தில் நடைபெற்ற போராட்டதில் மிக முக்கியமானது. இதன் பெரு வெடிப்புக்கள் அச்சுவேலிஇ சங்கானைஇ மாவிட்புரம்இ மந்துவில் போன்ற இடங்களில் ஏற்பட்டன. இதில் இரத்தினம். தவராசா என்ற இருவர் கொல்லப்பட்டனர். சீனக் கம்யூனிஸ்ட் தோழர்கள் இந்த போராட்டத்திற்கு பெரும் உறுதுணையாக இருந்தனர் தமிரசுக் கட்சியினர் ஆதிக்க சாதியினர் பக்கம் பக்க பலமாக நின்றனர். இவர்கள் தமக்கு பக்க பலமாக தமிழ் பொலிசாரையும் வைத்திருந்தனர். இவை பற்றி கேட்டவற்றை அறிந்து அனுமானித்ததை விஜய பாஸ்கரன் என்பவர் தனது மொழி நடையில் எழுதுகின்றார். அவரால் பாவிக்கப்படும் சில சொற் பிரயோகங்களில் சூத்திரத்திற்கு உடன்பாடு இல்லையாகினும் அவர் சொல்ல வந்த விடயத்தில் உடன்பாடுகள் நிறையவே உள்ளன. இதனை ஒரு அவசியான வரலாற்று ஆவணப் பதிவாக பார்பதினால் இதனை வெளியிடுகினறோம் – ஆர்)

(“தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்(பகுதி1)” தொடர்ந்து வாசிக்க…)

விமான நிலையமா? மீள்குடியேற்றமா? முன்னுரிமைக்குரியது?

பலாலி விமான நிலையத்தை தரம் உயர்த்துவதற்காக வடக்கில் உள்ள பிரதான ஆழ்கடல் மீன்பிடித்துறைமுகமான மயிலிட்டி பகுதியை சுவிகரிக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் மக்களின் கடும் எதிர்ப்பினைச் சந்தித்து நிற்கின்றது. இராணுவ நடவடிக்கைகள் மூலம் கடந்த 26 வருடங்களுக்கு முன்னதாக தமது வாழ்விடங்களை விட்டு வலிகாமம் வடக்கு மக்கள் முற்று முழுதாக வெளியேற்றப்பட்டனர். இவ்வாறாக வெளியேற்றப்பட்ட மக்கள் தம்மை தமது நிலங்களில் அனுமதிக்க வேண்டும் எனத் தொடர்ச்சியாகப் போராடிவருகின்றனர். இப் போராட்டங்களில் எல்லாம் ஏனைய பிரதேசங்களைப் போல மீள்குடியேற்றத்திற்கான அனுமதி மறுக்கப்படும் இரகசியம் “தமது பிரதேசங்கள் பொருளாதார வளமிக்க இடமாக இருப்பதுவே காரணம் என அவர்கள் குற்றச்சாட்டினை முன்வைத்து வருகின்றனர்.

(“விமான நிலையமா? மீள்குடியேற்றமா? முன்னுரிமைக்குரியது?” தொடர்ந்து வாசிக்க…)

கிழக்கு மக்களின் அங்கீகாரமின்றி வடக்குடன் கிழக்கை இணைக்கக் கூடாது!

வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பது அங்கீகரிக்கப்பட்ட ஒரு விடையமாக தமிழர் பேரவை பேசிக்கொண்டிருக்கிறது. கிழக்கு கிழக்காகவே இருக்க வேண்டும் கிழக்கு மாகாண மக்களின் அங்கீகாரமின்றி வடக்குக் கிழக்கு இணைக்கக் கூடாது என்பதை புதிய அரசியலமைப்புத் திருத்தத்திற்கு முன் மொழிய வேண்டும் என பேராசிரியர் டொக்டர் எம்.ஏ.எம்.சித்தீக் தெரிவித்தார். கல்முனை அபிவிருத்திக்கும் முகாமைத்துவத்துவத்துக்குமான சபை ஏற்பாடு செய்திருந்த இலங்கையின் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறியும் “உத்தேச அரசில் யாப்பும் முஸ்லிம்களும்” என்ற தலைப்பிலான கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிமை (14-02-2016) காலை தொடக்கம் மாலை வரை மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.

(“கிழக்கு மக்களின் அங்கீகாரமின்றி வடக்குடன் கிழக்கை இணைக்கக் கூடாது!” தொடர்ந்து வாசிக்க…)

அகில இலங்கை தமிழர் மகாசபை முன்வைத்த புதிய அரசியல் யாப்பு முன்மொழிவு!

நீண்டகால அரச/அரசியல் நிர்வாக அனுபவம் கொண்ட, கலாநிதி விக்னேஸ்வரன் [Dr Wikneswaran] அவர்களின் தலைமையில் அகில இலங்கை தமிழர் மகாசபை நாட்டின் அரசியல் அமைப்புக்கு தேவையான திருத்தங்களை, கடந்த 10-02-2016ல் முன்மொழிந்துள்ளது. மாவட்டரீதியாக தங்கள் ஆலோசனைகளை முன் வைக்க முடிவு செய்துள்ள அகில இலங்கை தமிழர் மகாசபை 16-02-16 இடம்பெற்ற யாழ் அமர்வின்போது மதசார்பற்ற அரசு என்ற விடயத்தில் மிக தெளிவான விளக்கத்தை முன்வைத்துள்ளது. கண்டிய ஒப்பந்தத்தில் புத்தமதம் பாதுகாக்கப்படும் என ஆங்கிலேயர் உறுதிமொழி வழங்கினர். ஆனால் அதற்கு முன்பு இலங்கையில் இருந்த மூன்று இராச்சியங்களில் யாழ்ப்பாண இராச்சியம் போத்துகீசர் வசமான போது, அது இந்து இராச்சியமாகவே இருந்தது. அதனால் ஆங்கிலேயரின் கண்டிய ஒப்பந்தம் முழு இலங்கைக்குமானதல்ல. எனவே இலங்கை [சிறீலங்கா] ஒரு மத சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என கலாநிதி விக்னேஸ்வரன் தெளிவுபடுத்தினார்.

(“அகில இலங்கை தமிழர் மகாசபை முன்வைத்த புதிய அரசியல் யாப்பு முன்மொழிவு!” தொடர்ந்து வாசிக்க…)

முதலமைச்சர் மீண்டும் நீதிபதியாக வேண்டும்!

உயர்திரு நீதியரசர் அவர்கட்கு! முதலமைச்சருக்கு என்று விளிக்காமல், பழைய ஞாபகத்தில் நீதியரசருக்கு என, நான் விளித்திருப்பதாய் நினைப்பீர்கள். அப்படியில்லாமல் தெரிந்தேதான் உங்களை, நீதியரசராய் விளித்தேன். காரணம், என்றும் நீங்கள் நீதியரசராகவே இருக்கவேண்டும் எனும், என் உள விருப்பே! அவ்விருப்புடனேயே இக்கடிதத்தை வரையத்தொடங்குகிறேன். அண்மைக்காலமாக உங்களை விமர்சித்து நான் எழுதியவற்றை வைத்து, என்னை உங்களின் பகைவனாய் பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் நீங்கள் என் பகைவர் அல்லர். என் மனதில் உயர்ந்த ஒரு இடத்திலேயே, உங்களை இன்றும் நான் வைத்திருக்கிறேன். தாங்கள் உச்சநீதிமன்ற நீதியரசராய்ப் பதவி வகித்த காலத்தில், எந்தச் சமுதாய அமைப்பிலும் உறுப்பினராய் ஆக மறுத்து வந்தபோதும், என் கோரிக்கையை ஏற்று,எங்கள் கம்பன்கழகத்தின் பெருந்தலைவராய் செயலாற்ற முன்வந்தீர்கள். எங்கள் கழகத்தின் பெருந்தலைவர் பதவியில், தாங்கள் அமர்ந்ததால் நாங்கள் பெருமையுற்றோம்.

(“முதலமைச்சர் மீண்டும் நீதிபதியாக வேண்டும்!” தொடர்ந்து வாசிக்க…)

இவ்வருடம் தேர்தல் இல்லை

தேர்தலை இவ்வருடத்துக்குள் நடத்த முடியும் என்பதை உறுதியாகக் கூற முடியாது என்று, இராஜாங்க நிதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய மீள்திருத்தப் பணிகள், இதுவரை முற்றுப்பெறாதிருப்பதால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இவ்வருடத்துக்குள் நடத்துவதென்பது சந்தேகத்துக்குரியதாகியுள்ளது என, கொழும்பில் நேற்று புதன்கிழமை (17) நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றின் போது, இராஜாங்க அமைச்சர் கூறினார்.

(“இவ்வருடம் தேர்தல் இல்லை” தொடர்ந்து வாசிக்க…)

மகனுக்காக கறுப்பு அங்கி அணிந்தார் மஹிந்த

கால்டன் ஸ்போட்ஸ் நெட்வேர்க் நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதிமோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகனான யோஷித, புதன்கிழமை ஆஜராகியிருந்தார். தேசிய ஆடையை அணிந்திருந்த அவர், அவ்வாடைக்கு மேலாக, சட்டதரணிகள் அணியும் கறுப்பு நிறத்திலான அங்கியையும் அணிந்திருந்தார். சட்டத்தரணியான மஹிந்த ராஜபக்ஷ, சட்டத்தரணிகள் அணியும் மேலங்கியை பல வருடங்களுக்குப் பின்னர், நேற்றே அணிந்திருந்தார்.

(“மகனுக்காக கறுப்பு அங்கி அணிந்தார் மஹிந்த” தொடர்ந்து வாசிக்க…)