மலின அரசியல் வேண்டாம்!

இலங்கையில், புதிய அரசியலமைப்பினை உருவாக்குவது தொடர்பில் மக்களின் கருத்தறியும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழ் பிரதேசங்களில் குறிப்பாக, வடக்கில் ஐந்து மாவட்டங்களிலும் இந்த கருத்தறிதல் நடவடிக்கைகள் நிறைவு பெற்றுள்ளன. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த சமஷ்டி அடிப்படையிலான தீர்வு குறித்தே இக் கருத்தறியும் அமர்வுகளில் மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சற்று அப்பால் சென்று, தமிழீழம் வேண்டும்- மாவீரர்களை அவர்களின் நினைவிடங்களில் நினைவுகூர அனுமதிக்க வேண்டும் என்றும் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு கருத்துக்களை கூறுமாறு கருத்தறியும் அமர்வுகளுக்குச் சென்ற மக்களை சில அரசியல்வாதிகள் தூண்டியதாகவும் தெரியவருகின்றது.

(“மலின அரசியல் வேண்டாம்!” தொடர்ந்து வாசிக்க…)

அரசியல் யாப்பு சீர்திருத்த மக்கள் பிரதிநிதித்துவக் குழு யாழ் மாவட்ட மக்களின் கருத்து

திரு. லால் விஜேநாயக்கா தலைமையிலான அரசியல் யாப்பு சீர்திருத்த மக்கள் பிரதிநிதித்துவக் குழு யாழ் மாவட்ட மக்களின் கருத்துக்களை அறியும் அமர்வுகளை நேற்று (15.01.2016) யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தது. இன்றும் இந்த அமர்வுகள் தொடர்ந்து நடைபெறவுள்ளன. நேற்று தனிநபர்களும் அமைப்புக்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் அரசியல் யாப்பு உருவாக்கத்திற்கான முன்மொழிவுகளை நேரில் சமூகமளித்து வாய்மொழி மூலமாகவும், எழுத்து மூலமாகவும் சமர்ப்பித்தனர்.

(“அரசியல் யாப்பு சீர்திருத்த மக்கள் பிரதிநிதித்துவக் குழு யாழ் மாவட்ட மக்களின் கருத்து” தொடர்ந்து வாசிக்க…)

எங்களுடைய பார்வையில் தமிழர்களில் அதிகப் பெரும்பான்மையோரினது விருப்பும் வேட்கையும் ஒரு நிலையானதும் பாதுகாப்பானதுமான வாழ்வே -பத்மநாபா EPRLF

திரு. லால் விஜேநாயக்கா தலைமையிலான அரசியல் யாப்பு சீர்திருத்த மக்கள் பிரதிநிதித்துவக் குழு யாழ் மாவட்ட மக்களின் கருத்துக்களை அறியும் அமர்வுகளை நேற்று 15.01.2016. யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தது. பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் சுகு (தி. சிறீதரன்) தோழர் மோகன், தோழர் கிருபா ஆகியோர் மேற்படி அமர்;.வில் சமூகமளித்து பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி சார்பில் புதிய அரசியல்யாப்பு உருவாக்கத்திற்கான முன்மொழிவுகளை சமர்ப்பித்தனர். 40 பக்கங்கள் கொண்ட இவ்வறிக்கையில் வட கிழக்கு இணைப்பு அல்லது அதிகார பரவலாக்கத்திற்க்கான அலகு தொடர்பான கருத்துக்கள்.

(“எங்களுடைய பார்வையில் தமிழர்களில் அதிகப் பெரும்பான்மையோரினது விருப்பும் வேட்கையும் ஒரு நிலையானதும் பாதுகாப்பானதுமான வாழ்வே -பத்மநாபா EPRLF” தொடர்ந்து வாசிக்க…)

புதிய அரசியல் அமைப்பு சம்மந்தமான தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆலோசனைகள்

15.02.2016 ம் திகதி யாழ் கச்சேரியில் நடந்த புதிய அரசியல் அமைப்பு சம்மந்தமான கலந்துரையாடலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிர்வாகச் செயலாளர் இரா. சங்கையா மற்றும் கடசியின் யாழ் மாவட்ட கிளையின் செயலாளர் கு. சிவகுலசிங்கம் ஆகியேரால் பின்வரும் ஆலோசனைகள் அடங்கிய மகஜர் நேரடியான விளக்கங்களுடன் கையளிக்கப்பட்டது.

(“புதிய அரசியல் அமைப்பு சம்மந்தமான தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆலோசனைகள்” தொடர்ந்து வாசிக்க…)

வாசகர் கருத்து

அன்புள்ள சூத்திரம்,
மனநோயாளி மனேகணேசனின் அறிக்கையைப் போடுமளவுக்கு என்னய்யா உங்களுக்கு நடந்தது? முன்பு சூத்திரம் வாசிக்கக்கூடியதாக இருந்தது. இப்ப ஏன் இந்தப் போக்கு? புரியவில்லை. திரும்பவும் வாருங்கள் பட்டிக்கு.
– சந்திரன்
இது ஒரு வகை பத்திரிகா தந்திரோபாயம் மனோ கணேசனை அவரனின் அறிகை மூலமே அம்பலப்படுத்துவது. இது அவரின் கருத்தை ஏற்றுக் கொளவதாக அமையாது. சற்று ஆழமாகப் பார்த்ததால் புரியும் -ஆர்

மகிந்த நாலடி பாய்ந்தால், அரசு எட்டடி பாயும்! இலங்கை அரசியல் நிலவரம்!

இலங்கை அரசியல் வரலாற்றில் மறக்கப்பட முடியாதவர் மகிந்த ராஜபக்ச என்றால் அது மிகையாகாது. ‘யுத்த வன்முறையை தனது ஆட்சிக் காலத்திலேயே முடிவுக்கு கொண்டு வருவேன். அதை அடுத்த தலைமுறைக்கும், அடுத்த தலைமைகளுக்கும் விட்டுவைக்க மாட்டேன்’ என்று மகிந்த ராஜபக்ச 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார். 2009ஆண்டு மே 18ஆம் திகதி யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டதாக அவர் அறிவித்தபோது, இலங்கை இரண்டாவது முறையாக விடுதலை பெற்றுள்ளது என்று சிங்கள மக்கள் மகிந்தவைக் கொண்டாடினார்கள். அதன் பிறகு அபிவிருத்தியை முன்னெடுக்கப் போவதாகக் கூறினார். பெரும்பாலும் வீதிகளை அபிவிருத்தி செய்து நகரங்களையும், கிராமங்களையும் இலகுவாக இணைக்கும் முயற்சியில் குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் பெற்றார்.

(“மகிந்த நாலடி பாய்ந்தால், அரசு எட்டடி பாயும்! இலங்கை அரசியல் நிலவரம்!” தொடர்ந்து வாசிக்க…)

அரசு தரும் அழுத்தம் மின்சாரக் கதிரையைவிடக் கொடுமையானது! மகிந்த புலம்பல்!

மின்சார நாற்காலியில் இருந்து தப்பினாலும் தற்போது அதனை விட பன்மடங்கு அதிகமான அழுத்தங்களுக்கு தான் உள்ளாகி இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அளுத்கம மொரகல்ல கடற்கரையில் நேற்று(திங்கட்கிழமை) உடற்பயிற்சியில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “மின்சார நாற்காலிக்கு அனுப்புவதை விட மனரீதியாக கொடுக்கப்படும் அழுத்தங்கள் போதுமானது. மின்சார நாற்காலிக்கு கொண்டு சென்றது போல்தான் இதுவும். அது ஒருமுறைதான். இது வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும் தண்டனை. எனினும், ஒரு போதும் நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு துரோகம் செய்ய மாட்டேன். அவ்வாறு துரோகியானதும் இல்லை. 58 இலட்சம் வாக்காளர்களுக்கும் நான் துரோகியாகவில்லை. அதற்கு பிறகு வாக்களித்த 48 லட்சம் வாக்காளர்களுக்கும் நான் துரோகியாகவில்லை. ஆனால் துரோகியானது யார் என்பதே கேள்வி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது. அந்த கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியும் அரசாங்கத்துடன் இணைந்துள்ளது. மக்கள் தற்போது புதிய கட்சி ஒன்றை கோரியுள்ளதுடன் அதற்கான தலைவர் ஒருவரையும் தேடிக் கொண்டிருக்கின்றனர். ” எனத் தெரிவித்தார்..

கூகுள் இன்டர்நெட் வலையமைப்பு இலங்கையில் ஆரம்பம்!

இலங்கை இன்று முதல் பலூன் வழி கூகுள் இன்டர்நெட் வசதியை பயன்படுத்தும் நாடாக மாற்றம் பெற்றுள்ளது. பலூன் மூலமான இன்டர்நெட் சேவையொன்றை அறிமுகப்படுத்தும் கூகுள் நிறுவனத்தின் பரீட்சார்த்த முயற்சி நேற்று முதல் இலங்கையில் ஆரம்பமாகியுள்ளது. இதற்காக தென் அமெரிக்காவில் இருந்து பறக்கவிடப்பட்ட ஆளில்லா கூகுள் பலூன் நேற்று இலங்கையின் தென் பகுதி ஊடாக இலங்கை வான்பரப்பிற்குள் பிரவேசித்து நிலை கொண்டுள்ளது. இதனையடுத்து இன்று முதல் பலூன் வழி இன்டர்நெட் சேவையின் பரீட்சார்த்த முயற்சிகள் இலங்கையில் மேற்கொள்ளப் படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தொலைதொடர்புக் கோபுர உதவியின்றி இன்டர்நெட் வசதியைப் பெறும் உலகின் முதல் நாடாக இலங்கை மாற்றம் பெற்றுள்ளது. பலூன் வழி இன்டர்நெட் சேவை தொடர்பாக கூகுள் நிறுவனத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையில் கடந்த வருடம் ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈ.பி.டி.பி. கட்சிக்கு மானம் இருக்கின்றதா? சட்டத்தரணி கேள்வி!

முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. கட்சிக்கு என்ன மானம் இருக்கின்றது? இவ்வாறு சட்டத்தரணியும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார். முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த அரசால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் அதன் ஆணையாளர்கள், ஈ.பி.டி.பி. கட்சி ஒரு சட்டவிரோத ஆயுதக் குழு என்று இந்த நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது அந்தக் கட்சிக்கு என்ன மானம் இருக்கின்றது? இவ்வாறு நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார் சட்டத்தரணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

(“ஈ.பி.டி.பி. கட்சிக்கு மானம் இருக்கின்றதா? சட்டத்தரணி கேள்வி!” தொடர்ந்து வாசிக்க…)

எனது காணியில் ஈ பி டி பி முகாம்! முறையிட்டும் பயனில்லை!

சிறீலங்கா அரசுடன் சேர்ந்து இயங்கிய ஈ.பி.டி.பி தனது சொந்த வீட்டை அடாத்தாக பிடித்து வைத்து முகாம் அமைத்துள்ளதாக தந்தை ஒருவர் பரிதாபத்துடன் அரசியல் அமைப்பு தொடர்பாக கருத்துகேட்கும் அமர்வில் கூறியுள்ளார். இதன் போது மேற்படி குழுவில் ஈ.பி.டி.பி உறுப்பினரும் வட மாகாணசபை எதிர்கட்சி தலைவருமான சி.தவராசா இருந்தமை குறிப்பிடத்தக்கது. மேற்படி யாழ் மாவட்டத்துக்கான அமர்வு யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் போதே தனது ஆதங்கத்தை வயோதிப தந்தை ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார். எனினும் இந்த அமர்வு அரசியல் அமைப்பு தொடர்பானது எனவும் இதில் இவ்வாறான விடயங்கள் கதைக்க முடியாது எனவும் குழுவின் மேற்பார்வையாளர்களால் அவருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

(சங்கதி 24.கொம்)