யோசித ஆதரவு கடற்படையினர் இடைநிறுத்தம்!

யோசித ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து, கையில் பட்டி அணிந்து கொண்டு போட்டியில் பங்கேற்ற சிறிலங்கா கடற்படையின் ரக்பி அணி வீரர்கள் நால்வரை சிறிலங்கா கடற்படை இடைநிறுத்தியுள்ளது. டியகமவில் நேற்று நடந்த ரக்பி போட்டியில் விளையாடிய சிறிலங்கா கடற்படை அணியின் வீரர்கள் நால்வர், தமது அணியின் முன்னாள் அணித் தலைவரும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவருமான, யோசித ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து, கையில் பட்டிகளை அணிந்திருந்தனர். யோசித ராஜபக்சவின் இலக்கமான 07 என்பதை, YO07 என அவர்கள் தமது கைப்பட்டிகளில் எழுதியிருந்தனர். இதையடுத்து, சிறிலங்கா கடற்படை அணியின் நான்கு வீரர்களும் விசாரணை முடியும் வரை சிறிலங்கா கடற்படைத் தளபதியால் இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என்று கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் கோமாளிக்கொள்கை! – மனோ கணேசன்!

தமிழ்மொழி வேண்டாம் என்று கூறும் மகிந்த ராஜபக்சவுக்கு தேங்காய் உடைக்க தமிழ் கடவுள் மாத்திரம் தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன் இது மகிந்தவின் கோமாளிக் கொள்கை என்றும் தெரிவித்துள்ளார். கொழும்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அரச கரும மொழி ஆணைக்குழுவின் கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மொழி உரிமை கொள்கையை அமுல்படுத்தி தமிழ் மக்களின் இதயங்களை முதலில் வென்றுவிட்டே அடுத்த கட்டம் குறித்து சிந்திக்க வேண்டும் என தெரிவித்த அவர் மொழி உரிமை கொள்ளை நடைமுறைப்படுத்தாதவிடத்து இனப்பிரச்ிசனையை தீர்க்க வாய்பில்லை என்றும் கூறினார். கடந்த காலங்களில் தமிழ் பிரதேசங்களில் மேடைகளில் ஏறி தமிழ் பேசியவர்கள், இன்று தமிழ் மொழியை எதிர்க்கிறார்கள் என்று கூறிய மனோ, இந்துக் கடவுளான விஸ்ணுவையும் காளியையும் தேடிச் சென்று தேங்காய் உடைக்கிறார்கள் என்றும் இது என்ன கோமாளிக் கொள்கையோ? என்றும் மேலும் குறிப்பிட்டார்.

ராவனபலய, சிஹல ராவய தேரர்களுக்கு விளக்கமறியலில்!

ராவனா பலய அமைப்பின் அழைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் மற்றும் சிஹல ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரட்ன தேரர் ஆகியோர் ஹோமாகம காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு, ஹோமாகம நீதிமன்றில் போராட்டம் நடத்தியதாக இந்த இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ராவனா பலய இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர், சிஹல ராவய அக்மீமன தயாரட்ன தேரர் ஆகியோரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இவர்களுடன் மேலும் இரண்டு பௌத்த பிக்குகளையும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹோமாகம நீதவானினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஹிட்லரை உருவாக்கியவர்களே தேசிய இனப்பிரச்சனையையும் உருவாக்கிய ஆதாரம்!

ஜேர்மனியில் ஹிட்லரும் இத்தாலியின் முசோலீனியும் இந்த உலகின் இரக்கமற்ற சர்வாதிகாரிகளாகக் கருதப்படுகிறார்கள். இந்த இரண்டு சர்வாதிகாரிகள் தோன்றியதன் அரசியல் பின்னணி மட்டும் ஆராயப்படுவதில்லை. பெரும்பாலான சாமானியர்களிடமிருந்து இவையெல்லாம் மறைக்கப்படுகின்றன. இலங்கையில் தேசிய இன ஒடுக்குமுறையும் அதற்கு எதிரான போராட்டங்களும் தோன்றிய வரலாற்றை ஓரளவு அறிந்து வைத்திருக்கிறோம் ஆனால் அது தோன்றியதற்கான ஆழமான அரசியல் பின்னணி இருளுக்குள் புதைக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கும் மக்கள் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தகவல்களையும் அதன் பின்புலத்தையும் அறியும் உரிமை மறுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

(“ஹிட்லரை உருவாக்கியவர்களே தேசிய இனப்பிரச்சனையையும் உருவாக்கிய ஆதாரம்!” தொடர்ந்து வாசிக்க…)

படகில் பயணம் செய்து விமானத்தில் திரும்பினர்

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற இலங்கை பிரஜைகள் ஐவர், நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள், அவுஸ்திரேலியா எஸ்.எக்டி 01 என்ற விசேட விமானத்தின் மூலமாக, நேற்று திங்கட்கிழமை நாடு திரும்பினர். இந்த குழுவினர், பேருவளை பிரதேசத்திலிருந்து வியங்க என்ற படகிலேறி ஜனவரி மாதம் 8ஆம் திகதியன்று அவுஸ்திரேலியா நோக்கி பயணமாகினர். அதன்பின்னர், அவுஸ்திரேலிய கடல் எல்லையில் வைத்து அவர்கள், அந்நாட்டு கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

(“படகில் பயணம் செய்து விமானத்தில் திரும்பினர்” தொடர்ந்து வாசிக்க…)

புதிய அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான ஆலோசனைகள், கருத்துக்களைப் பெற்றுக் கொள்ளும் குழு இன்றும், நாளையும் யாழ் மாவட்டத்தில்

எனது நண்பர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் கிடைத்திருக்கும் இச் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி இன்றும், நாளையும் யாழ் மாவட்ட செயலகத்தில், இலங்கையின் புதிய அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக, தங்கள் அபிப்பிரயாங்களை சமர்ப்பித்துக் கொள்ளலாம் என்று வடமாகாண எதிர்கட்சித்தலைவர் தவராசா தெரிவித்துள்ளார்.
அரசியல் மறுசீரமைப்புக்காக மக்கள் கருத்தறியும் அமர்வு யாழ்.மாவட்ட செயலகத்தில் ஆரம்பம். இன்று நடைபெற்ற அமர்வில் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் இன் பொதுச் செயலாளர் சுகு சிறீதரன்மற்றும் யாழ்மாவட்டப் பொறுப்பாளர் மோகன் கலந்து கொண்டு தமது ஆலோசனைகளை வழங்கினர்

மக்களோடு மக்களாக

 

பத்மநாபா ஈபிஆர்எல்எவ் இனர் தமது கட்சியை தமிழ் பிரதேசம் எங்கும் கட்டியமைத்துவருவதை அவதானிக்க முடிகின்றது. இதன் ஒரு அங்கமாக அம்பாறையில் உள்ள தமது கட்சியின் சகாக்களுடன் கட்சியின் மூத்த உறுப்பினர் தோழர் வரதராஜப்பெருமாள்

சீகா வைரஸ்: விஞ்ஞான விபரீதம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

விபரீதங்கள் நிகழ்வதற்கும் நிகழ்த்தப்படுவதற்கும் இடையிலான வேறுபாடு பெரிது. விபரீதங்கள் பெரும்பாலும் எதிர்பாராமால் திடீரென நிகழ்பவை. ஆனால், நிகழ்த்தப்படுகின்ற விபரீதங்கள் அவ்வாறல்ல. அவை மனிதர்களால் தெரிந்து திட்டமிட்டு அரங்கேற்றப்படுபவை. ஆனால், அதற்கும் அறிந்தும் அறியாமல் நிகழ்ந்தது போன்றதொரு தோற்றமயக்கம் உருவாக்கப்பட்டு நிகழ்த்தப்பட்ட விபரீதங்களும் நிகழ்ந்த விபரீதங்களாக அறிவிக்கப்படுகின்றன. இப்போது உலகின் கவனம் சீகா வைரஸை நோக்கியதாகத் திரும்பியிருக்கிறது. வடகிழக்கு பிரேசிலில் கடந்தாண்டு ஓகஸ்ட் முதல் குழந்தைகள் சிறிய தலைகளுடன் பிறக்கத் தொடங்கியதன் பின்னணியிலேயே சீகா வைரஸ் அறியப்பட்டது. இக்காலப்பகுதியில் அப்பகுதியில் பிறந்த 4,180 குழந்தைகள் சிறிய தலைகளுடனும் பிற குறைபாடுகளுடன் பிறந்தன. பின்னர் இவ்வைரஸ் பிறக்கும் குழந்தைகளை மட்டுமன்றிப் அனைவரையும் தாக்கக் கூடியது என அறியப்பட்டது. இப்போது உலகளாவிய ரீதியில் 17 இலட்சம் மக்கள் இவ்வைரஸின் தாக்கத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

(“சீகா வைரஸ்: விஞ்ஞான விபரீதம்” தொடர்ந்து வாசிக்க…)

நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம்… கடலில் சரிந்த வீடுகள்!

நியூசிலாந்தின் கிறைஸ்சர்ச் நகரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் மலைகளில் கட்டப்பட்டிருந்த வீடுகள் கடலுக்குள் சரிந்து விழுந்தன. நியூசிலாந்தின் தெற்குப் பகுதி தீவுநகரான கிறைஸ்ட் சர்ச் நகரில் இருந்து கிழக்கே சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில், பூமியின் அடியில் 15 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து சுமார் 40 முறை நில அதிர்வுகளும் ஏற்பட்டதால் மலைகளில் கட்டப்பட்டிருந்த வீடுகள் கடலுக்குள் சரிந்து விழுந்தது. உயிர்பலி, பொருட்சேதம் குறித்த உடனடி தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.

ஓராண்டு ஆட்சி நிறைவு… மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கெஜ்ரிவால்

ஓராண்டு ஆட்சி நிறைவையொட்டி பொதுமக்கள் செலுத்தாமல் இருந்த ரூ.2,855 கோடி குடிநீர் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அதிரடியாக அறிவித்து உள்ளார். டெல்லி மாநிலத்தின் முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி பதவி ஏற்றார். அவரது அரசு பொறுப்பேற்று நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, டெல்லி மக்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் டெலிபோனில் உரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, மக்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

(“ஓராண்டு ஆட்சி நிறைவு… மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கெஜ்ரிவால்” தொடர்ந்து வாசிக்க…)