புலம்பெயர்ந்து வாழும் நம்நாட்டுக் கவிஞர் ஒருவரின் பேட்டியை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு என்று வெளிநாடுகள் கொடுக்கும் உதவிகளை இலங்கை அரசு துஷ்பிரயோகம் செய்துவிடும் என்பதால், உதவிகள் எவையும் வழங்கப்படக் கூடாது என்று சொல்லியிருக்கிறார் அவர்.
அதிர்ச்சியாக இருக்கிறது. புலம்பெயர்ந்த தேசங்களில் வளமான பொருளாதார வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு, இங்குள்ளவர்களுக்கு எந்த உதவிகளும் செய்ய வேண்டாம் என்று வெளிநாடுகளுக்குச் சொல்வதில் எந்தக் குற்றவுணர்ச்சியும் கவிஞருக்கு எழவில்லை. இங்குள்ள தமிழர்களுக்காகக் கவலைப்பட்டு, அரசியல்ரீதியாக ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கான பிரதிநிதித்துவக் கருத்தைத் தான் சொல்வதாகவே அவர் கருதிக்கொள்கிறார். அவ்வாறு சொல்ல முடியும் என்றும் அவர் நினைக்கிறார்.
(“யார் யாரிடமெல்லாம் மாட்டிக் கொண்டிருக்கிறோம்!” தொடர்ந்து வாசிக்க…)