மாட்டுத் தொழுவம்

 

இத் தொழுவமானது கால்நடைகளை விஷேடமாக மாடுகளை மழை வெயில் போன்ற காலநிலைகளிருந்து பாதுகாப்பதற்காகவும் அவற்றிற்கான உணவுகளை வீணாக்காமல் பாவிப்பதற்குமாக எமது முன்னோர்களால் வடிவமைக்கப்பட்ட குடிலாகும். பனை ஓலையால் வேயப்பட்டு பனம் மட்டைகளால் அடித்தட்டு வடிவமைக்கப்பட்டும் உள்ளது. தற்போதைய சந்ததியினரில் பலருக்கு இது தெரியாமலும் உள்ளது. நவீன காலத்திற்கேற்ப சீற், தகரக் கொட்டகைகள் போடப்பட்டாலும் கால்நடைகளுக்கு சுவாத்தியமான இக்குடில்களே சிறந்ததாக உள்ளது. ஏன் எமக்குக் கூட இவ்வாறான இயற்கைப் பொருள் பாவனையே சிறப்பான வாழ்விற்கு இன்றியமையாததாகும்.

(ஊரெழு பார்த்தீபன்)

சோவியத் யூனியனின் பௌத்த மதக் குடியரசு தன்னு துவா! எங்கே இருக்கிறது?

 

ஆசியாக் கண்டத்தில், ரஷ்யா, மொங்கோலியா நாடுகளுக்கு நடுவில் உள்ளது. 1920 முதல் 1944 வரையில் சுதந்திரமான தனி நாடாக இருந்தது. துவா மொழி பேசும் சைபீரிய பூர்வகுடிகளை பெரும்பான்மையாகக் கொண்டது. அவர்கள் திபெத்திய- பௌத்த மதத்தை பின்பற்றுகிறார்கள்.

தன்னு மலைப் பிராந்தியத்தின் பழங்குடிகளான துவா மக்கள், ஒரு நாடோடி இனமாக வாழ்ந்தவர்கள். நீண்ட காலமாக, சீனா, மஞ்சு, ரஷ்யா ஆகிய சாம்ராஜ்யங்களால் மாறி மாறி ஆளப்பட்டு வந்தது. 1917 ரஷ்யப் புரட்சியை அடுத்து நடந்த உள்நாட்டுப் போரில், போல்ஷெவிக் செம் படைகள், சார் மன்னனுக்கு விசுவாசமான படைகளிடம் இருந்து அந்த நாட்டைக் கைப்பற்றின. லெனினின் நேரடி பணிப்பின் பெயரில், தன்னு துவா ஒரு சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தப் பட்டது. சோவியத்யூனியனும், மொங்கோலியாவும் ஒரு உடன்படிக்கையின் பிரகாரம் சுதந்திரத்தை அங்கீகரித்தன.

தன்னு துவா ஜனாதிபதி, பௌத்த மதத்திற்கு முக்கிய இடம் கொடுத்து, மொங்கோலியாவுடன் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்திக் கொண்டார். பௌத்த- துவா தேசியத்தை வளர்த்து வந்தார். அதனால் அதிருப்தியுற்ற துவா கம்யூனிஸ்டுகளின் இரகசிய அமைப்பொன்று, அதிரடிப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து நாட்டின் பெயர் “தன்னு துவா மக்கள் குடியரசு” என்று மாற்றப் பட்டது. நாடோடி சமூக அமைப்பு முடிவுக்கு வந்தது. கம்யூனிச கூட்டுறவுப் பண்ணைகள் உருவாக்கப் பட்டன.

இரண்டாம் உலகப் போரில், தன்னு துவா அரசு சோவியத் யூனியனுக்கு தன்னாலியன்ற சிறியளவு பங்களிப்பை செய்துள்ளது. யுத்தம் முடிவடைந்த பின்னர், தன்னு துவா ரஷ்யாவின் ஒரு பகுதியாகியது. 1992 வரையில், அது ரஷ்யாவுக்குள் அடங்கிய சுயாட்சிப் பிரதேசமாக இருந்தது. இன்று அது ரஷ்யாவின் ஒரு பகுதியாகவே தொடர்ந்தும் இருக்கிறது.

(Tharmalingam Kalaiyarasan)

குடிகளிலாக் கோயில்களும் குருட்டுத்தனங்களும்.

ஊருக்குப்போனாய் ஒன்றுமே சொல்லவில்லையே என்று அங்கலாய்ப்பவர்களுக்கு “என்னத்தைச் சொல்வது ?” என்பதைத் தவிர வேறு எதைச் சொல்லமுடியும். வாய்திறந்தால் வம்பை விலைக்குவாங்குவது உனக்கு இடப்பட்சாபம் என்று சின்ன வயதில் யாரோ சொன்னதும் ஞாபகத்திற்கு வந்துவிடுகிறது.

(“குடிகளிலாக் கோயில்களும் குருட்டுத்தனங்களும்.” தொடர்ந்து வாசிக்க…)

முதல்வர் அதிரடி! அச்சத்தில் அதிகாரிகள்!

வடமாகாண அலுவலகங்களில் நடைபெறும் மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் அமைச்சர்கள் கண்டுகொள்ளாதுள்ள போதும், முதலமைச்சர் தடாலடியாக நடவடிக்கைகள் சகிதம் களம் குதித்துள்ளார். அவ்வகையில் முறையற்ற வகையில் அலுலவலக வாகனங்களைப் பயன்படுத்துவது மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பில் தனது பார்வையை செலுத்தியுள்ளார். இதன் பிரகாரம் அலுவலக வாகனங்களை தனது குடும்ப தேவைகளிற்கு பயன்படுத்திய அமைச்சின் செயலாளரிற்கு பல இலட்சங்களில் தண்டம் அறவிடப்படவுள்ளதாக தெரியவருகின்றது. கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவர் உள்ளிட்ட பலரிற்கு இவ்வாறு குற்றப்பணம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

(“முதல்வர் அதிரடி! அச்சத்தில் அதிகாரிகள்!” தொடர்ந்து வாசிக்க…)

வினைதிறனை வெளிப்படுத்த முதல்வர் முடிவு!!!

வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் கௌரவ .சி.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் தமது சார்பாக. வட மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு பிரதேச செயலகப்பகுதிக்கு ஒவ்வொரு மாகாணசபை உறுப்பினரை நியமித்து உத்தரவிட்டுள்ளார். இவர்களே இனிமேல் அவர்களுக்கு வழங்கப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு உரிய அபிவிருத்தி ,ஏனைய துறைசார் பௌதீக வள தேவைகள் தொடர்பாக தமது செயற்பாடுகளை மாகாண சபை சார்பாக முன்னெடுப்பார்கள் எனவும், அவர்களால் தீர்க்க முடியாத பிரச்சனைகளை மட்டுமே தம்மிடம் நேரில் முறையிடுமாறும் தெரிவித்துள்ளார். இச் செயற்பாட்டின் மூலம் வடமாகாணத்திற்குட்பட்ட ஒவ்வொரு பிரதேசசெயலகங்களின் அபிவிருத்தி, ஏனைய துறை சார் செயற்பாடுகளை இனங்கண்டு அவற்றை இலகுவில் அணுகி வட மாகாண சபையால் செயற் படுத்த முடியும் என எதிர்பார்க்கபடுகின்றது..

நல்ல கிராமங்கள் உருவாகட்டும்…

ஒருகாலத்தில் யாழ்ப்பாணத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் வளர்ச்சியும், சனசமூக நிலையங்களின் செயற்பாடுகளும் சிறப்பாக இருந்தன. விளையாட்டு, கல்வி, சுகாதாரம், சமூக ஒருங்கிணைப்பு, சமத்துவ நோக்கு என ஒரு ஆரோக்கியமான சமூகமாக யாழ்ப்பாணம் இருந்தது… இன்று நோய்களும் பெருகி தனியார் வைத்திய நிலையங்களும், தனியார் கல்விநிலயங்களும் நிரம்பிய பிரதேசமாக “வளர்ச்சி” யடைந்துள்ளது…

(“நல்ல கிராமங்கள் உருவாகட்டும்…” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை அகதிகள் இன்று நாடு திரும்ப ஏற்பாடு

யுத்த காலத்தில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்த 43 இலங்கை அகதிகள் இன்று விமானம் மூலம் நாடு திரும்புகின்றனர். திருச்சி, சென்னை மற்றும் மதுரை ஆகிய விமான நிலையங்களிலிருந்து மூன்று விமானங்களில் இவர்கள் நாடு திரும்பவுள்ளனர். 2016ஆம் ஆண்டில் மாத்திரம் இதுவரை 61 பேர் இவ்வாறு நாடு திரும்பியிருக்கும் நிலையில், இன்று நாடு திரும்பும் 43 பேரில் 24 ஆண்களும், 19 பெண்களும் அடங்குவதுடன், இவர்கள் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மன்றும் மன்னார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார்.

(“இலங்கை அகதிகள் இன்று நாடு திரும்ப ஏற்பாடு” தொடர்ந்து வாசிக்க…)

மத்திய கிழக்கில் சீனா: புதிய அரங்காடியின் வருகை

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

அரங்காடிகளின் வருகை, அர்த்தம் பொதிந்தது. வருகையின் காலமும் களமும் அவர்களதும் அரங்கினதும் முக்கியத்தை உணர்த்த வல்லன. அரங்கில் நுழையும் எல்லோருமே அரங்காடிகள்தான் எனினும் சிலரின் வரவு பிறரினதை விட முக்கியமானது. மத்திய கிழக்கு நிலைமைகளை அமைதியாக அவதானித்திருந்த சீனா, இப்போது மத்திய கிழக்கு அலுவல்களிற் செல்வாக்குடைய சக்தியாகியிருப்பது தற்செயலல்ல. எனினும், ஏலவே சிக்கலடைந்த சிரிய நெருக்கடியிற் சீனாவின் ஆர்வம் வியப்பூட்டியுள்ளது. சீனாவைப் பொறுத்த வரை, ஒரு வணிகக் கூட்டாளியாகச் சிரியாவின் முக்கியத்துவம் குறைவு. கடந்தாண்டின் இறுதி நாட்களில் சிரிய வெளியுறவு அமைச்சரின் சீன விஜயம் மிகப் பேசப்பட்டது. அதையடுத்த சிரிய எதிர்க் கட்சிக் கூட்டணியினரின் சீன விஜயம், சிரியா பற்றிச் சீனாவின் வெளிப்படையான அக்கறையை எடுத்துக் காட்டியது. இவ்விரு விஜயங்களும் சிரிய நெருக்கடிக்குத் தீர்வு தேடும் சீன முனைப்பைக் குறிகாட்டின.

(“மத்திய கிழக்கில் சீனா: புதிய அரங்காடியின் வருகை” தொடர்ந்து வாசிக்க…)

முயல் – ஆமை ஓட்டம்! முடிவு?

நாம் அடையவேண்டிய இலக்கை நோக்கி நிதானமாக தொடர்ந்து சென்றால், முடிவு எமக்கு சாதகமாகும். அதேவேளை வேகமாக செயல்படுவதாய் இறுமாப்பாக புறப்பட்டு, நிலமை எமக்கு சாதகமாக இருப்பதாக தப்புக்கணக்கு போட்டால், காரியம் கைநழுவி போகும் நிலை ஏற்படலாம். இதனைத்தான் அண்மையில் யாழில் தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள், ஒரு முக்கியமான சந்திப்பை தமிழ் அரசு கட்சி தலைமையகத்தில் திரு மாவை சேனாதிராசா உடன் நடத்தியது கோடிட்டுகாட்டுகிறது.

(“முயல் – ஆமை ஓட்டம்! முடிவு?” தொடர்ந்து வாசிக்க…)