டக்ளஸ் வடக்கின் முதலமைச்சர்! மஹிந்த ஜனாதிபதி! – கோத்தபாய!

டக்ளஸிடம் ஆயுதங்களை பறித்திருக்காவிட்டால் அவர் இன்று வடக்கின் முதலமைச்சராக இருந்திருப்பார் என்றும் மஹிந்த இன்றும் ஜனாதிபதியாக இருந்திருப்பார் என்றும் தெரிவித்துள்ளார் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச. சிலோன் ருடே க்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார். முன்னாள் அதிபர் எவ்வாறு தமிழ் மக்களின் வாக்குகளை இழந்தார் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் தமிழ் ஆயுதக்குழுக்களான ஈபிஆர்எல்எப், ரெலோ, புளொட் மற்றும் ஈபிடிபி யினரின் ஆயுதங்களைக் களைந்திருக்காவிட்டால் நாம் வட மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்றிருப்போம். நான் அவர்களின் ஆயுதங்களை மீள கையளிக்குமாறு வேண்டினேன். ஆனால் அதற்கான காலம் இன்னும் வரவில்லை என டக்ளஸ் , கருணா போன்றோர் மறுத்தார்கள்.

(“டக்ளஸ் வடக்கின் முதலமைச்சர்! மஹிந்த ஜனாதிபதி! – கோத்தபாய!” தொடர்ந்து வாசிக்க…)

புலிகள் விடயத்தில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஐ.நா வின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் இளவரசர் ஹூசைன் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பல்வேறு தரப்பினரையும் சந்தித்து வருகின்றார். இந்த வரிசையில் வட மாகாணத்திற்கு சென்ற அவர் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கும் சென்றார் என்பது சிறப்பம்சமாகும். அத்துடன் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களை சந்தித்தார். இதன்போது முன்னாள் பயங்கரவாதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க அரசிற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என விக்னேஸ்வரன் மனித உரிமைகள் ஆணையாளரை வேண்டியுள்ளார்.

(“புலிகள் விடயத்தில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்.” தொடர்ந்து வாசிக்க…)

தீர்வில் முஸ்லிம்களும் உள்வாங்கப்பட வேண்டும்

இனப்பிரச்சினை தீர்வில் இந்தியாவின் பங்களிப்பும் இருப்பதினால் எந்த இனமும் பாதிக்கப்படாத வகையில், குறிப்பாக முஸ்லிம்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்றை வழங்குவதற்கு இந்தியா உதவ வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சனியன்று வலியுறுத்தினார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளி விவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து கலந்துரையாடியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கான தீரவு மற்றும் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் மீண்டும் இணைந்து வாழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்க உதவ வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

(“தீர்வில் முஸ்லிம்களும் உள்வாங்கப்பட வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)

விடுதலை விரும்பிகளில் சாவாரி செய்யும் ஒட்டு குழுக்கள்!

தமிழீழ விடுதலை போராட்டவாரலாற்றில்,விசேடமாக ஆயுதபோராட்ட காலத்தில் பாவனைக்கு வந்துள்ள பல சொற்பதங்களில் ஒன்று ‘ஒட்டுக்குழுக்கள்’. இதை ஆங்கிலத்தில் Paramilitary எனகூறுவார்கள். இதனது வரவிலக்கணம் அல்லது அதன் பொருளை ஆராயுமிடத்து சில சங்கடமான விடயங்கள் வெளியாகின்றன. அவற்றை வடக்கு கிழக்கு வாழ் தமிழீழ மக்கள் நன்கு அறிந்திருப்பார்கள் என்பதில் எமக்கு ஐயமுமில்லை. ஆகையால் அதனது விளக்கத்தை மிகவும் சுருக்கமாக தருகிறேன். ஓட்டு குழுக்கள் – கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அடிப்படை தந்துவங்களுக்கு அப்பால் சுயகௌரவம் அற்று,சந்தர்ப்பவாத வாழ்க்கை நடந்துபவர்கள் என வரவிலக்கணம் சுட்டி காட்டுகிறது. இவர்கள் பணம், பதவி, ஆசை, காமம் ஆகியவற்றிற்கு அடிமையானர்வர்களென அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள்.

(“விடுதலை விரும்பிகளில் சாவாரி செய்யும் ஒட்டு குழுக்கள்!” தொடர்ந்து வாசிக்க…)

மாணவர்கள் மலசல கூடங்களை கழுவும் அவலம்!!!

 

யாழில் வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவுப் பகுதி வலயத்தின் பல பாடசாலைகளில் மாணவர்களை கொண்டு கையால் எந்தவித பாதுகாப்பு கை உறைகளும் போடாமல் மலசலகூடங்களை கழுவுவிக்கும் அவலம் நடைபெறுகிறது. யாழில் வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவுப் பகுதி வலயக்கல்விப் பணிப்பாளரின் பொறுப்பற்ற தலைமைத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது. சிறுவர் பாதுகாப்பில் இலங்கை அரசு அதிக கவனம் செலுத்தி வருகின்ற இக்கால கட்டத்தில் படித்த மேதைகள் அதிகமாக உள்ள வடமராட்சி பகுதிகளில் மாணவர்களை கொண்டு பாடசாலை கழிவறைகளை துப்பரவு செய்வது கவலைப்பட வேண்டிய செயல்.

(“மாணவர்கள் மலசல கூடங்களை கழுவும் அவலம்!!!” தொடர்ந்து வாசிக்க…)

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மீள்குடியேற்ற மக்களை சந்தித்தார்

யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் ராட் அல் ஹீஸைன் வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து மருதனார்மடம் சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்தில் வாழும் மக்களை நேரில் சென்று சந்தித்தார். கடந்த 25 வருடங்களாக சொந்த இடத்தை விட்டு இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் அகதி வாழ்வு வாழும் மக்களையே அவர் நேரில் சென்று கலந்துரையாடினார். அங்கு மக்களிடம் அவர் கருத்துத் தெரிவிக்ககையில்,மீள்குடியமர்வு தொடர்பாக ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் வலியுறுத்தியுள்ளளேன் எனவும், எனது அடுத்த கட்ட விஜயத்தில் நான் உங்களை சொந்த இடத்தில் சந்தி்ப்பேன் என தான் நம்புவதாகவும் மனித உரிமைகள் ஆணையாளர் முகாம் மக்களிடம் தெரிவித்தார்.

திமிங்கிலங்கள் கரையொதுங்குவதில் துலங்கும் மர்மங்கள்!

தென்னிந்தியாவின் தூத்துக்குடி மாவட்டத்தின் சில கரையோரப் பிரதேசங்களில் இவ்வருடம் (2016) ஜனவரி மாதத்தின் நடுப் பகுதியில் சுமார் 300 திமிங்கிலங்கள் கரையொதுங்கியதும், அவற்றில் பெரும்பாலானவை உயரிழிந்ததும் மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரித்தை ஏற்படுத்தின. கடல் வாழ் உயிரினமான திமிங்கிலத்திற்கு என்ன நேர்ந்தது என்று பரவலாகப் பார்க்கப்பட்டதோடு இவ்வாறு உயிரிழந்த திமிங்கிலங்களின் உடல் பாக மாதிரிகள் பிரித்தெடுக்கப்பட்டு ஆய்வுகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளன.

(“திமிங்கிலங்கள் கரையொதுங்குவதில் துலங்கும் மர்மங்கள்!” தொடர்ந்து வாசிக்க…)

அறப்படிச்ச பல்லிகளையும் கூழ் பானைக்குள் விழவைக்கும் வடமாகாணம்! வரப் போகும் ஆளுநரின் நிலை என்ன?

வடக்கு மாகாணத்துக்குரிய புதிய ஆளுநராக, ஓரளவு தமிழ் மொழி பேசும் திறனுள்ள இடதுசாரி அரசியலில் பற்றுள்ள, மேல் மாகாணத்தின் முதலமைச்சராகவும் மத்தியில் சிறு விளைபொருள் ஏற்றுமதி மேம்படுத்தல் அமைச்சராகவும் விளங்கிய ரெஜினோல்ட் குரே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விரைவில் நியமிக்கப்படவுள்ளார். ரெஜினோல்ட் குரே ஒரு மூத்த அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் களுத்துறை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினராகி. சிறு விளைபொருள் ஏற்றுமதி மேம்படுத்தல் அமைச்சராக இருந்தார்.

(“அறப்படிச்ச பல்லிகளையும் கூழ் பானைக்குள் விழவைக்கும் வடமாகாணம்! வரப் போகும் ஆளுநரின் நிலை என்ன?” தொடர்ந்து வாசிக்க…)

புலம்பெயர் தமிழர்கள் நாடு திரும்ப கூடிய அரசியல் தீர்வு அவசியம் – சுமந்திரன்

இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழுகின்ற ஈழத் தமிழர்கள் மீண்டும் நாட்டிற்கு திரும்பக் கூடிய வகையிலான அரசியல் தீர்வையே எதிர்பார்த்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்காவிற்கு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் உடனான சந்திப்பில் இந்த விடயத்தை தாம் வலியுறுத்தியதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். இந்த சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இந்திய வெளிவுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ்ஜுடன் சுமுகமான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

(“புலம்பெயர் தமிழர்கள் நாடு திரும்ப கூடிய அரசியல் தீர்வு அவசியம் – சுமந்திரன்” தொடர்ந்து வாசிக்க…)

முன்னணி மற்றும் ஈபிஆர்எல்எவ் வேண்டாம் – மாவை…!

தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து தமிழரசுக்கட்சி செயற்படுவதானால் தற்போது அதில் அங்கம் வகித்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈபிஆர்எல்எவ் கட்சி என்பவை வெளியேற்றப்பட வேண்டுமென நிபந்தனை விதித்துள்ளார் மாவை சேனாதிராசா. தமிழ் மக்கள்பேரவையின் இணைத்தலைவர் உள்ளிட்ட ஏற்பாட்டுக்குழுவொன்று தமது உத்தேச அரசியல் தீர்வு திட்ட வரைபு பற்றி மாவை.சேனாதிராசாவை சந்தித்து விளக்கியுள்ளது. யாழ்.நகரின் மார்டின் வீதியிலுள்ள தமிழரசுக்கட்சி தலைமை காரியாலத்தில் இச்சந்திப்பு நடந்துள்ளது. அப்போது பேச்சுக்களில் பங்கெடுத்த மாவை தான் தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து செயற்பட பூரண விருப்பம் மற்றும் ஆர்வம் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

(“முன்னணி மற்றும் ஈபிஆர்எல்எவ் வேண்டாம் – மாவை…!” தொடர்ந்து வாசிக்க…)