வழமையாக பறக்கும் ரஷ்ய விமானத்திற்கு துருக்கி மறுப்பு

ரஷ்யாவின் வழக்கமான இராணுவ கண்காணிப்பு விமானம் ஒன்றுக்கு தனது வான்பகுதியால் பறப்பதற்கு அனுமதி வழங்க துருக்கு மறுத்துள்ளது. இது ஒரு அபாயகரமான செயல்முறை என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. சிரிய எல்லையில் வைத்து கடந்த நவம்பர் 24 ஆம் திகதி ரஷ்ய போர் விமானம் ஒன்றை துருக்கி சுட்டுவீழ்த்தியது தொடக்கம் இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் நிலவுகிறது. கடந்த 1992 ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றின்படி இரு நாடுகளின் கண்காணிப்பு விமானங்களுக்கு வான் பகுதியை திறந்துவிட ஒப்புக்கொண்டிருந்தபோதும் துருக்கி ஊடாக ரஷ்ய விமானம் பறப்பதையே அது நிராகரித்துள்ளது. உடன்பாடு எட்டபடவில்லை என்றும் விமானம் பயணிக்க முடியாது என்றும் துருக்கி வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. துருக்கி, ரஷ்யாவுக்கு இடையிலான உடன்பாடு கடந்த 2006 ஆம் ஆண்டு அமுலுக்கு வந்ததோடு அது தொடக்கம் ஆண்டுதோறும் சராசரியாக ரஷ்யாவின் இரு கண்காணிப்பு விமானங்கள் துருக்கி வானூடாக பறந்தன.

கண்களில் உறுதியுடன் உணர்வுபூர்வமாக சம்பந்தன்

இலங்கை அரசியல் வரலாற்றில் 67 வருடங்களின் பின்னர் முதற்தடவையாக நேற்று சுதந்திர தின தேசிய நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. மஹிந்த அணி மற்றும் பௌத்த அடிப்படைவாத அமைப்புக்களின் பலத்த எதிர்ப்புக்கும் மத்தியில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டிருப்பது சிறுபான்மை மக்கள் மத்தியில் ஒரு புத்துணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் உறுதியான நடவடிக்ைகயால் தேசிய சுதந்திர தினத்தில் தமிழிலும் தேசியகீதம் இசைக்கப்பட்டிருக்கிறது இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் அவர்களின் இந்தத் தீர்மானத்துக்கு அடிப்படைவாதிகள் பலர் எதிர்ப்புத் தெரிவித்தபோதும் நேற்றைய சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டமை தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(“கண்களில் உறுதியுடன் உணர்வுபூர்வமாக சம்பந்தன்” தொடர்ந்து வாசிக்க…)

எங்களிடம் நீங்கள் அரசியல் கற்கும் நிலை!

முஸ்லிங்கள் தமிழ் அரசியல் வாதிகளிடமிருந்து அரசியலைக் கற்றவர்கள் இதனை நான் மறுக்க வில்லை நிலைமைமாறி தற்போது முஸ்லிங்களிடமிருந்து தமிழர்கள்அரசியல் கற்கவேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. காரணம் வீர வசனங்களைப் பேசுவதனால் எதனையும் சாதிக்க முடியாது. தற்போது முஸ்லிம் கிராமங்கள் அபிவிருத்தியில் பாரிய முன்னேற்றமடைந்துள்ளது. காரணம் ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கத்துடன் கைகோர்த்து பல அமைச்சுப்பதவியினை பொறுப்பேற்று பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும் சந்தர்ப்பத்தில் தமிழ் அரசியல் வாதிகளில் சிலர் வீர வசனங்களை உரைக்கின்றனர். இதனால் கிடைப்பது ஒன்றுமே இல்லை, வெறுமனே தனித்து நின்று சிறுபான்மை இனத்தவர் எதனையும் பெற முடியாது. இவ்வாறு தெரிவித்தார் கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமிர்அலி.

(“எங்களிடம் நீங்கள் அரசியல் கற்கும் நிலை!” தொடர்ந்து வாசிக்க…)

மெல்லென பாயும்நீர் கல்லும் உருகப்பாயும்!

சர்ச்சைக்குரிய விடயமொன்று நீண்ட கால தவிர்ப்பு, இழுபறி, விமர்சனம், கண்டனத்துக்கு அப்பால், இலங்கையின் 68 வது சுதந்திரதின வைபவத்தில் அரங்கேறியுள்ளது. நாட்டின் தேசிய மொழிகளான சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில், நீண்டகாலமாக தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டுமே பாடப்பட்டு வந்த நிலையில், இம்முறை தமிழிலும் பாடப்பட்டமை சம்மந்தரின் முதுமையா? அல்லது மைத்திரியின் அனுபவமா? அல்லது இரண்டுமா?. காரணம் முதுமை, அனுபவம் இரண்டுமே அழிவை தடுக்கும். ஆக்கத்தை ஊக்கிவிக்கும். பொறுமையை இயலாமை என எதிரி எண்ணிவிடக்கூடாது என்பதை, ஆங்கிலேயருக்கு உணர்த்தியவர் அண்ணல் காந்தி. ஹிம்சைக்கு எதிராக அவர் வரித்துக்கொண்ட அகிம்சை கொள்கை, ஆரம்பத்தில் அழிவுகளை தந்த போதும் இறுதியல் இந்தியாவுக்கு விடுதலை பெற்று கொடுத்தது.

(“மெல்லென பாயும்நீர் கல்லும் உருகப்பாயும்!” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கையின் சுதந்திர(ம்) தினம்

(சாகரன்)

இலங்கையின் சுதந்திர தினம் இன்று. (பிரித்தானிய) காலணியாதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட தினம் இன்று. இத் தினத்தையே நாம் சுதந்திர தினமாக கொண்டாடுகின்றோம். எமக்கு சுதந்திரம் கிடைத்து 68 வருடங்கள் ஆகின்றன என்ற கணக்குகள் வேறு எம்மிடம் உள்ளன. இந்தியாவின் தேசிய எழுச்சி பிரித்தானிய காலணியாதிக்கவாதிகளுக்கு எதிராக அகிம்சை வழியிலும், ஆயுதப் போராட்ட வடிவத்திலும் பரந்துபட்ட மக்களை இணைத்து நடாத்தப்பட்ட போராட்டம். இந்த போராட்டத்தின் உந்துதல் இலங்கையிலும் இருந்தது. பிரித்தானியர்கள் நவ காலணித்துவ சுரண்டல் முறமைக்கு தம்மை மாற்றிக் கொண்டு இந்தியாவை விட்டு வெளியேறும் போது இலங்கையையும் விட்டு வெளியேறினர். மற்றையபடி இலங்கை தனது சுதந்திரத்திற்காக இந்தியா அளவிற்கு போராடவில்லை. இதன் அர்த்தம் இலங்கையின் சுதந்திரத்திற்காக பங்களிப்பு செய்தவர்களின் தியாகங்கள் குறைந்தவை என்பதல்ல. இலங்கை சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையில் வாழும் சிறுபான்மையினர் தாம் இரண்டாம் தர பிரஜைகளாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்ற உணர்வலைகளுக்கு உள்ளாகின்றனர். இதனால் பிரித்தானியரிடம் இருந்து கிடைத்த இலங்கையின் சுதந்திரம் தமக்கான சுதந்திரம் என்று இவர்களால் உணரப்படாமல் தள்ளிப்போனது. இதுவே இன்று வரை சுதந்திர தினம் சிறுபான்மை மக்களால் கொண்டாடப்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணம்.

(“இலங்கையின் சுதந்திர(ம்) தினம்” தொடர்ந்து வாசிக்க…)

க.அருளம்பலம்(ஆசிரியர்) அவர்களின் 29வது வருட நினைவு நாள்

 

கணபதிப்பிள்ளை-அருளம்பலம் அவர்கள் மட்டக்களப்பின் தெற்கே பெரியகல்லாறு எனும் இடத்தில் 29.08.1930 இல் பிறந்தார்.
சிறந்த தழிழ் ஆசிரியரான இவர். இலங்கையின் பல இடங்களில் ஆசியரிராகப் பணியாற்றியுள்ளார். குறிப்பாக மிகவும் பின்தங்கிய இடங்களைத் தேர்வு செய்து தனது பணியை ஆற்றினார். பின்தங்கிய பகுதிகளைத்தேர்வு செய்து அவர்களுக்கு சேவை செய்வதில் அலாதி பிரியம் அவரிடம் காணப்பட்டது.அதில் ஒரு ஆத்ம திருப்தி இருப்பதாக என்னிடம் எனது தந்தை கூறி இருக்கிறார்.தற்போது நானும் அதை உணர்கிறேன்.

(“க.அருளம்பலம்(ஆசிரியர்) அவர்களின் 29வது வருட நினைவு நாள்” தொடர்ந்து வாசிக்க…)

புதிய அரசியலமைப்பு எவ்வாறு அமைய வேண்டும்

புதிய அரசியலமைப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பான யோசனைகளை முன்வைப்பதற்காக ‘சமூக சீராக்கல் இயக்கம்’ ஏற்பாடு செய்துள்ள கலந்துரையாடல் 86/17 டன்பார் விதியில் அமைந்துள்ள லைசியம் எக்கடமி மண்டபத்தில் (விஜித்தா திரை அரங்கிற்கு அருகாமையில்) எதிர்வரும் 06.02.2016 (சனிக்கிழமை) அன்று மு.ப. 10.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. யோசனைகள் அடங்கிய உத்தேச வரைவு சமப்பிக்கப்பட்டு கலந்துரையாடல் நடைபெறும். சட்ட வல்லுனர்களையும் சமூக, அரசியல் ஆர்வலர்களையும் ‘சமூக சீராக்கல் இயக்கம்’ அன்புடன் அழைக்கிறது.

தொடர்புகளுக்கு: 077 – 5265304 (கமல்), 071 – 6275459 (விஜய்)

சி.வி. தலைமையில் அரசியலமைப்பு முன்மொழிவு குழு

வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில், வட மகாணசபை உறுப்பினர்கள் 19 பேரைக் கொண்ட அரசியலமைப்பு குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். இதன் மூலம், வட மகாணத்தில் வசிக்கும் பொதுமக்கள், சிவில் அமைப்புகள் மற்றும் ஏனைய அமைப்புகளின் யோசனைகனை பெற்று, அதன் மூலம் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்காக இணைத்துக் கொள்ளும் பொருட்டான முன்மொழிவுகளை உருவாக்கி, மாகாணசபையின் அனுமதியைப் பெற்று, அரசியலமைப்பு சபையிடம் கையளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். வட மாகாண சபையின் 44 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (26) யாழ்ப்பாணம், கைதடியிலுள்ள மாகாண சபை கட்டடத்தில் இடம்பெற்றபோது, இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

கே.பி.யிடம் தொடர்ந்தும் வாக்குமூலம் பதிவு

புலிகளின் நடவடிக்கையில், கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் தொடர்பு பற்றிய விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் நேற்று புதன்கிழமை (03) சமர்ப்பித்தார். சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜயந்த ஜயசூரியவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நாவன்னவும், கே.பி.யிடமிருந்து இப்போதும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுவருவதாக நீதிமன்றில் தெரிவித்தனர்.

(“கே.பி.யிடம் தொடர்ந்தும் வாக்குமூலம் பதிவு” தொடர்ந்து வாசிக்க…)

சுதந்திர தினக் கொண்டாட்டம் ! கூட்டமைப்பு பங்கேற்பு ! மஹிந்த புறக்கணிப்பு !

இலங்கையின் 68ஆவது சுதந்திர தினக் கொண்டாடம் இன்று வியாழக்கிழமை காலிமுகத்திடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஆளும் கட்சி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர். இன்று காலை காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ள சுதந்திர தின அணிவகுப்பில் 4,025 இராணுவம், 984 கடற்படை, 1,216 விமானப்படைச் சிப்பாய்களும், 887 பொலிஸார், 674 சிவில் பாதுகாப்புப் படையினர், 7 மாணவப் படையணியின் அதிகாரிகள் உட்பட 438 மாணவ படையணியினரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

(“சுதந்திர தினக் கொண்டாட்டம் ! கூட்டமைப்பு பங்கேற்பு ! மஹிந்த புறக்கணிப்பு !” தொடர்ந்து வாசிக்க…)