நீடித்து நிலைக்கும் தட்டிவான் பயணம்!

 

உலகமயமாக்கலிலும் மாற்றமுறாது தொடரும் பருத்தித்துறை – கொடிகாமம் தட்டிவான் பயணம் காலமாற்றம் காணாதது. இயற்கை காற்று உடலை தழுவும். அதில் கலந்துவரும் புழுதி மண் வாசனை புத்துணர்ச்சி தரும். இந்த இயற்கை இன்பம் சொகுசு வாகன பயணத்தில் கிடைக்குமா? கோடைகாலத்து குளிரூட்டி எம் மண்ணின் பருவகால காற்று. மாரி காலத்தில் உடலை சூடேற்ற பயணிகளை நெருக்கி அடையும் நடத்துனர். தட்டிவானுக்கு ஏசி தேவை இல்லை. ஹீற்றர் போடும் அவசியம் இல்லை இயற்கையோடு வாழ்ந்து ஓசோன் படலத்தை பாதுகாக்கும் எம் பயணத்தை ஒரு தடவை ஊர் வந்து அனுபவி புலம் பெயர் தமிழா!

(Ram)

கொடிகாமம் பருத்தித்துறை வீதி ஏன் புனரமைக்கப்படவேண்டும்?

யாழ் தீபகற்பத்தின் பிரதான வீதிகளில் ஒன்றாக அமைந்துள்ளது கொடிகாமம் பருத்தித்துறை வீதி. AB31 எனத் தரப்படுத்தப்பட்டுள்ள இந்த வீதி வடமராட்சியின் மந்திகையிலிருந்து முள்ளிவெளி, வரணி ஊடாக கொடிகாமம் வரை நீள்கின்றது. வடமராட்சியில் இந்த வீதியின் தொடர்ச்சியாக – மந்திகையிலிருந்து பருத்தித்துறை வரை யாழ் – பருத்தித்துறை வீதியும் (AB20), தென்மராட்சியில் இந்த வீதியின் தொடர்ச்சியாக – கொடிகாமத்திலிருந்து கச்சாய் (B68) வீதியும் அமைந்துள்ளன. அதாவது முன்னர் யாழின் துறைமுகங்களாக விளங்கிய பருத்தித்துறை மற்றும் கச்சாய் துறைமுகங்களை இணைக்கின்றது இந்த வீதி.

(“கொடிகாமம் பருத்தித்துறை வீதி ஏன் புனரமைக்கப்படவேண்டும்?” தொடர்ந்து வாசிக்க…)

யாழில் பட்டையை கிளப்பும் பிழாச் சோறு

 

முக்கியமான விசேஷங்கள் மற்றும் பிக்னிக் போன்றவற்றில் பனை ஓலையை மடித்து அதில் உணவை இட்டு உண்பார்கள், நிஜமாலுமே (பனை) பிழாவில் உண்ணும் போது அதன் சுவையே தனி தான். அந்த சுவையை ருசித்தவர்களுக்கு கிடைக்கும் அனுபவம் என்றும் மறக்க முடியாததாகும்…!.ஒருகாலத்தில் ஆதிக்கசாதியினர் இவர்களால் தாழ்த்தப்பட்ட சாதியினர் என்று கூறப்படவர்களுக்கு தமது வீட்டுப்பாத்திரத்தில் உணவு வழங்கினால் ‘தீட்டு’ என்று கருதி அவர்களுக்கு இந்த ‘அட்சய’ பாத்திரத்தில்தான் சோறு கொடுத்தனர் என்ற வடுகள் நிறைந்த வரலாற்றையும் இந்த ‘பிழா’ அல்லது ‘தட்டுவம்’ கொண்டிருந்தது. தட்டுவதில் நீர் ஒழுகும் ஆனால் பிழாவில் நீர் ஒழுகாது. பிழாவில் அனேகமாக கள்ளு பரிமாறுவர். தண்ணீரைக் கிணற்றில் இருந்து அள்ளுவதற்கு வாளியிற்கு பதிலாக பனை ஓலையில் இழைத்துச் செய்யப்படுவது பட்டை இந்தப் பட்டையும், பிழாவும் எமது வாழ்வில் பின்னிப் பிணைந்த இனி பாத்திரங்கள்

(குடாநாட்டான்)

அதிசயம் ஆனால் உண்மை!

தற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறிவியல் அல்லது பகுத்தறிவு விதிகளுக்குப் பொருந்தாதவையாக அவை தோன்றினாலும் கூட நம் அறிவுக்கெட்டாத ஏதோ ஒரு ’விதி’ அந்த நிகழ்வுகளை சீரான முறையில் இயக்கி இருப்பது போல தோன்றும். அப்படிப்பட்ட சில ஆதாரபூர்வமான,ஆச்சர்யமளிக்கும், நிகழ்வுகள் சில, இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் விஷயத்தில் இருந்த மாபெரும் ஒற்றுமைகளைப் பார்ப்போம்.

(“அதிசயம் ஆனால் உண்மை!” தொடர்ந்து வாசிக்க…)

நாம் விதிக் குரங்குகள் கிழித்தெறியும் பஞ்சுத் தலையணையா?’

‘யாழ் நகரில் என் பையன்
கொழும்பில் என் பெண்டாட்டி
வன்னியில் என் தந்தை
தள்ளாத வயதினிலே தமிழ் நாட்டில் என் அம்மா
சுற்றம் பிறாம்போட்டில்
சகோதரியோ பிரான்ஸ் நாட்டில்
நானோ வழிதவறி அலாஸ்கா வந்தவிட்ட
ஒட்டகம்போல ஓஸ்லோவில்!
நம் குடும்பங்கள் என்ன?
காற்றில் விதிக் குரங்குகள்
கிழித்தெறியும் பஞ்சுத் தலையணையா?’

(வ.ஐ.ச.ஜெயபாலன்)

தற்கொலைக்கு தூண்டியது எது? – 3 மாணவிகளின் உருக்கமான கடிதம்!

விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள எஸ்.வி.எஸ்.யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்த வந்த மோனிஷா, சரண்யா, பிரியங்கா என்ற மூன்று மாணவிகள், கல்லூரிக்கு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மாணவிகளின் மரணம். மூன்று மாணவிகளும் தற்கொலைக்கு முன் எழுதியுள்ள கடிதம் தற்போது சிக்கியுள்ளது. இந்த கடிதத்தில், அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், காலேஜில நாங்க படிச்சத விட வேலை பார்த்ததுதான் அதிகம் என்றும் தங்கள் மனவேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.

(“தற்கொலைக்கு தூண்டியது எது? – 3 மாணவிகளின் உருக்கமான கடிதம்!” தொடர்ந்து வாசிக்க…)

அவுஸ்திரேலியாவை குடியரசாக்க முயற்சி

அவுஸ்திரேலியாவை ஒரு குடியரசா க்குவதற்கு பெரும்பாலும் அந்நாட்டின் அனைத்து மாநில மற்றும் பிராந்திய தலைவர்களும் ஆதரவாக கைச்சாத்திட்டுள்ளனர். எலிசபெத் மகாராணியை நாட்டின் தலைவர் பொறுப்பிலிருந்து மாற்ற, அரசியல் சாசனத்தில் மாறுதல் கொண்டுவர வேண்டும் எனக் கோரும் மனுவொன்றை அவுஸ்திரேலியக் குடியரசு இயக்கம் முன்னெடுத்துள்ளது.

(“அவுஸ்திரேலியாவை குடியரசாக்க முயற்சி” தொடர்ந்து வாசிக்க…)

அறிக்கைப்போர் நடத்தும் அமைப்புகளின் மெத்தனம் குறித்து எதிர்கட்சி தலைவர் விசனம்!

தமிழ் மக்களின் உரிமை சம்மந்தமாகவும், அவர்களுக்கு எவ்வாறான தீர்வு தேவை என்பது பற்றியும் ஆளுக்கொரு அமைப்பை உருவாக்கி, அறிக்கை விடுவதும், கொடிபிடித்து கோசமிடுவதும் என விளம்பரம்தேடும் பலர், அண்மையில் பிரதமரால் அமைக்கப்பட்ட தீர்வுதிட்டம் சம்மந்தமான இருபதுபேர் கொண்ட மக்கள் கருத்தை அறியும் குழு முன்தோன்றி, தமது ஆலோசனைகளை வழங்க முன்வரவில்லை என்ற தன் விசனத்தை, வட மாகாண சபை எதிர்கட்சி தலைவர் திரு சின்னத்துரை தவராசா தெரிவித்துள்ளார்.

(“அறிக்கைப்போர் நடத்தும் அமைப்புகளின் மெத்தனம் குறித்து எதிர்கட்சி தலைவர் விசனம்!” தொடர்ந்து வாசிக்க…)

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!

வசதியாகத்தான் இருக்கிறது மகனே!…நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம்!

பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ வெளியேறிய போது, முன்பு நானும் இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு என் முதுகுக்குப் பின்னால் நீ கதற கதற என் கண்ணீரை மறைத்தபடி நான் புறப்பட்ட காட்சி ஞாபகத்தில் எழுகிறது!

முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட, அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்!

இதுவரையில் ஒருமுறையேனும் என் முகம் பார்க்க நீ வராமல் போனாலும், என் பராமரிப்பிற்கான மாதத் தொகையை மறக்காமல் அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சியடைகிறது!

நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில் உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும், படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததன் எதிர்வினையே இதுவென்று இப்போது அறிகிறேன்!

இளம் வயதினில் நீ சிறுகச் சிறுக சேமித்த அனுபவத்தை, என் முதுமைப் பருவத்தில் மொத்தமாக எனக்கே செலவு செய்கிறாய் ஆயினும்… உனக்கும் எனக்கும் ஒரு சிறு வேறுபாடு!

நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு…வாழ்க்கை இதுதானென்று!
நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு…உறவுகள் இதுதானென்று!

(குடாநாட்டான்)

வேளாண்மை விஞ்ஞானம் படைத்தவர்கள் தமிழர்கள் கவிஞர் வைரமுத்து

முல்லைத்தீவில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் உழவர் பெருவிழா கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராகக் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டார். கவிஞர் வைரமுத்து பேசியதாவது, இந்தத் தியாகத் திரு மண்ணில் நான் உணர்ச்சிமயமாக இருக்கிறேன். என் பேச்சு நிறைவடைவதற்குள் இருதயமே உடைந்துவிடாதே, என் கண்ணே கலங்கிவிடாதே என்று எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன். ஆசியாவிலேயே அதிகம் கல்வி கற்ற இனம் இலங்கைத் தமிழினம். தமிழினத்தின் முகவரியை உலகம் எங்கும் எழுதியவர்கள் இலங்கைத் தமிழர்கள். ஆனால் இன்று எல்லாவற்றையும் இழந்து நிற்கிறீர்கள் உங்கள் நம்பிக்கையைத் தவிர. அந்த நம்பிக்கையை ஊட்டத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன்.

(“வேளாண்மை விஞ்ஞானம் படைத்தவர்கள் தமிழர்கள் கவிஞர் வைரமுத்து” தொடர்ந்து வாசிக்க…)