இன்று (25) காலை 10 மணியளவில் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. காணாமல்போன சகலரையும் கண்டுபிடிக்குமாறு கோரியும் சகல தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இப்போராட்டத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Author: ஆசிரியர்
உண்மை காதலுக்கு என்றும். மரணமில்லை ..!
மனைவியை
தாயாக
நினைத்து பார்த்து கொள்ளும்
ஆண்களும்….!
கணவனை
பிள்ளையாக
நினைத்து பார்த்து கொள்ளும்
பெண்களும்…!
இருக்கும் வரை
உண்மை
காதலுக்கு என்றும்.
மரணமில்லை ..!
– குடாநாட்டான் –
தை பொங்கலும் புளுக்கினாம் குருவிகளும்!
சும்மா சொல்லக்கூடாது கண்டியளளே! அப்பாவி மக்களின்ட வயித்தில அடிச்சமாதிரி, புக்கையிலயும் அடிச்சாங்களே ஒரு அடி, ஒவ்வொரு சோத்துப் பருக்கையும் சுழண்டு சுழண்டு எகிறிப் பாய்ஞ்சுது. புக்கையிலை சக்கரை இல்லாட்டிலும் துட்டு இருக்கும் என்று கண்டுபிடிச்சு இந்த நூற்றாண்டின் பொருளாதார மாமேதைகள் பட்டத்தைத் தட்டிக்கொண்டவர்கள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC). அதுதான் போன முறை நான் சொன்ன தமிழர் சேர்கஸ் கொம்பனி!. வெங்கலக் கடைக்குள்ள யானை புகுந்த கதை கேள்விப்பட்டிருக்கிறோம். அது மாதிரித்தான் பொங்கலுக்குள் ரீசீசீ புகுந்தால் எப்பிடி இருக்கும் என்பதற்கு பிரான்சில் நடந்த பொங்கல் நல்ல உதாரணம்.
(“தை பொங்கலும் புளுக்கினாம் குருவிகளும்!” தொடர்ந்து வாசிக்க…)
அரசியல் தலைவர்களாலும், அரசாங்கத்தாலும் ஏமாற்றப்படும் மலையகத் தொழிலாளர்கள்!
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளம், காணி வீட்டுரிமை எனும் வாக்குறுதிகள் மறைந்து வரவு செலவு திட்டத்தில் எமது வரவு பற்றி எதிர்பார்த்திருந்த மலையக மக்களுக்கு வழமைப் போலவே ஏமாற்றம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. தனது தாத்தா காலத்திலிருந்து அமைச்சராக இருந்து மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தி வந்த மலையகத்தில் மிகப்பெரிய தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் மற்றும் UNP யின் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் (LJEWU), ஒன்றிணைந்த பெருந்தோட்ட தொழிற்சங்க நிலையம் என்பன முதலாளிமார் சங்கத்துடன் சேர்ந்து சம்பள உயர்வு பெற்றுக் கொள்வதில் எவ்விதமான ஆக்கபூர்வமான முன்னேற்றத்தையும் பெற்றதாக தெரியவில்லை.
(“அரசியல் தலைவர்களாலும், அரசாங்கத்தாலும் ஏமாற்றப்படும் மலையகத் தொழிலாளர்கள்!” தொடர்ந்து வாசிக்க…)
இனப்பிரச்சினைக்கு சமஷ்டி சிறந்த தீர்வாகும். தற்போதைய நிலையில் அது சாத்தியமில்லை – வரதராஜபெருமாள்,
அதிகாரப்பகிர்வு ஆணைக்குழு அவசியம் : வரதராஜபெருமாள் வலியுறுத்து
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு சமஷ்டி சிறந்த தீர்வாகும். தற்போதைய நிலையில் அது சாத்தியமில்லை. எதிர்காலத்தில் அதற்கு வழிவகுக்க கூடிய வகையில் புதிய அரசியலமைப்பானது அதிகாரப்பகிர்வைக்கொண்ட ஒற்றையாட்சிக்குட்பட்டதாக இருக்க வேண்டும். அதிகாரப்பகிர்வு ஆணைக்குழுவொன்று உருவாக்கப்படவேண்டியது அவசியமாகுமென வடகிழக்கின் முன்னாள் முதலமைச்சரான வரதராஜபெருமாள் விசும்பாயவிலுள்ள புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிவதற்காக அமைக்கப்பட்டுள்ள சிவல் குழுவின் தலைமைக்காரியாலயத்தில் நேற்றையதினம் 22 பக்கங்களடங்கிய தனது பரிந்துரைகளை சமர்ப்பித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விடுவிக்கப்பட்ட காணிகள் இன்று மக்களிடம் கையளிப்பு
அரசாங்கத்தின் துரித மீள்குடியேற்ற வேலைத்திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் காணிகளை உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று(22) நடைபெறவுள்ளது. வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகம் மற்றும் வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகம் ஆகிய பகுதிகளில் இராணுவத்தினரின் வசமிருந்த காணிகள் இனறைய தினம்(22) மக்களிடம் கையளிக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின்செயலாளர் வே. சிவஞானசோதி தெரிவித்தார்.
(“விடுவிக்கப்பட்ட காணிகள் இன்று மக்களிடம் கையளிப்பு” தொடர்ந்து வாசிக்க…)
‘அச்சுவேலியில் ஏற்பட்டது நிலஅதிர்வு எனக்கூறமுடியாது’
அச்சுவேலி நவக்கிரி பகுதியில் நிலத்தில் ஏற்பட்ட விரிசலானது, பாறைகளில் ஏற்பட்ட அதிர்வுகள் மற்றும் விரிசல்கள் காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என யாழ் பல்கலைக்கழக புவியியல்துறை பேராசிரியர். ஏஸ்.ரீ.வீ. இராஜேஸ்வரன், தமிழ்மிரருக்கு ஞாயிற்றுக்கிழமை (24) தெரிவித்தார். அச்சுவேலி, நவக்கிரியில் தருமசிறி என்பவரின் வீட்டுச் சுவரில் சனிக்கிழமை (23) அதிகாலை பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன், வீட்டிலிருந்து தோட்டத்தரவைகள் வரையில் நிலத்திலும் விரிசல்கள் ஏற்பட்டன.
(“‘அச்சுவேலியில் ஏற்பட்டது நிலஅதிர்வு எனக்கூறமுடியாது’” தொடர்ந்து வாசிக்க…)
சம்பந்தனின் சாணக்கியம்
வடக்கில் பெரும் பரபரப்புக்கு மத்தியில் ஸ்தாபிக்கப்பட்ட ‘தமிழ் மக்கள் பேரவை’ என்ற அமைப்பு இப்போது சலனமின்றி ஓய்ந்து போய்க் கிடக்கிறது. எத்தகைய விறுவிறுப்புடன் தமிழ் மக்கள் பேரவை உருவாகியதோ அத்தகைய வேகத்துடனேயே அது உறங்கிப் போய் விட்டது போல தற்போது தோன்றுகிறது.
இரண்டாம் உலக போரில் பங்கேற்ற இலங்கை தமிழரின் 100வது பிறந்தநாள்
இலங்கையின் வடக்கில் உடுவில் கிராமத்தை சேர்ந்த கேப்டன் செல்லையா கனகசபாபதி இரண்டாம் உலக போர் நடைபெற்ற காலத்தில் பிரிட்டிஷ் அரச விமானப்படையில் கடமையாற்றியுள்ளார். திருகோணமலையில் உள்ள அவரது சொந்த ஹொட்டலில் அவர் தனது 100 வது பிறந்த நாளை கொண்டாடினார். கனடாவின் டொரேண்டோவில் வசித்து பார்த்திபன் மனோகரன் என்பவர் அண்மையில் திருகோணமலைக்கு விஜயம் செய்திருந்த போது கேப்டன் பதியை பேட்டி கண்டார். பிரிட்டிஷ் அரச விமானப்படையில் பணியாற்றிய முதல் இலங்கை தமிழர் உட்பட அவர் மேற்கொண்ட சகாகசங்கள், தனது வாழ்க்கையில் மைல் கற்களாக அமைந்தவை பற்றி அவர் இந்த பேட்டியில் கூறியுள்ளார்.
(“இரண்டாம் உலக போரில் பங்கேற்ற இலங்கை தமிழரின் 100வது பிறந்தநாள்” தொடர்ந்து வாசிக்க…)
ஈழ விடுதலைப் போராட்டமும் பாலஸ்தீன மக்கள் போராட்டமும்
(சாகரன்)
ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு சர்தேச அளவில் ஆயுதப் பயிற்சி(லெபனான் பயிற்சி எனக் கூறுவர்) வழங்கியதில் பாலஸ்தீன மக்களிடையே உள்ள விடுதலை அமைப்பின் இடதுசாரிச் செயற்பாடாளர்கள் PLFP அமைப்பினரே முதன்மை பெறுகின்றனர். பாலஸ்தீன விடுதலை அமைப்பின் ஒரு குடை அமைப்பின் கீழ் இவ் அமைப்பு இருந்திருந்தாலும் தனது சித்தாத்தின் அடிப்படையில் ஐக்கிய முன்னணிக்குள் தமது கருத்துக்களுக்கான உள்ளக அமைப்புப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தியே வந்திருக்கின்றனர். சகோதரப் படுகொலை பாரியளவில் நடைபெறாத விடுதலைப் போராட்டத்தை கொண்டிருந்த இந்த மக்களின் போரட்டப்பாதையில் ஹமாஸ் சில தடவைகள் சகோதரப் படுகொலையில் ஈடுபட்ட காலங்களிலும் இதனைத் தவிர்ப்பதில் இந்த PLFP கணிசமான வெற்றிகளை கண்டே வந்திருக்கின்றது.
(“ஈழ விடுதலைப் போராட்டமும் பாலஸ்தீன மக்கள் போராட்டமும்” தொடர்ந்து வாசிக்க…)