13 க்கு அப்பால் அதிகாரம் வழங்க சு.க அனுமதிக்காது

அரசியலமைப்பு திருத்தப்படுகிற போதும் அதனூடாக 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் அதிகாரத்தை பகிர்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஒரு போதும் இணங்காது என சுதந்திரக் கட்சி ஊடகப் பேச்சாளர் ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.அரசியலமைப்பு திருத்தத்தினூடாக நாட்டின் ஜக்கியத்திற்கு குந்தகம் ஏற்படுத்தவோ வடக்கு கிழக்கை இணைக்கவோ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழான சுதந்திர கட்சி அனுமதிக்காது எனவும் அவர் குறிப்பிட்டார்.

(“13 க்கு அப்பால் அதிகாரம் வழங்க சு.க அனுமதிக்காது” தொடர்ந்து வாசிக்க…)

ஒரே குரலில் பேசுதல் ! வினைத்திறன் மிக்க நிர்வாகம் ! முதல்வரிடம் கோரிக்கை !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒரே குரலில் பேசுதல், வினைத்திறன் மிக்க மாகாண நிர்வாகம் இதுவே எங்கள் எதிர்பார்ப்பு. என முதல்வரிடம் தெரிவித்தனர் வட மாகாணசபை உறுப்பினர்கள். வட மாகாணசபை ஆளும்தரப்பு உறுப்பினர்களுக்கும், வட மாகாணசபையின் முதலமைச்சர் கௌரவ.நீதியரசர் சி வி விக்னேஸ்வரன் அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று [11-01-2016] முற்பகல் 10:00 மணிமுதல் முதலமைச்சர் காரியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. வட மாகாணசபையின் ஆளும்தரப்பு உறுப்பினர்களின் கூட்டான வேண்டுகோளுக்கிணங்க முதலமைச்சர் அவர்கள் இந்த சந்திப்பிற்காக நேரம் ஒதுக்கித்தந்திருந்தார். மேற்படி சந்திப்பில் 18 ஆளும்தரப்பு உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

(“ஒரே குரலில் பேசுதல் ! வினைத்திறன் மிக்க நிர்வாகம் ! முதல்வரிடம் கோரிக்கை !” தொடர்ந்து வாசிக்க…)

நவீன சீதை புலம்பல் [கற்பனை கலந்த நிஜம்]

ஹே ராமா! உப்பரிகையில் நின்ற என்னை நீ நோக்க நானும் நோக்கியபோது நம்பினேன் சிவதனுசை உடைத்து என்னை மணம் முடித்து அயோத்தி அழைத்து சென்று வாழவைப்பாய் என. அனால் நடந்தது என்ன? நால்வகை படைகண்டு பாரெல்லாம் புகழ்பரப்பி தமிழ் ஈழம் மலரும் நாள் நெருங்குவதால் தேவை ஆளணி என பெற்றோர் சம்மதம் இன்றியே பலவந்தமாய் பிள்ளைகளை பிடித்து சென்று மாவிலாறில் நீரை தடுத்து மோதலை தொடங்கி நந்திகடலில் ஈழ தமிழரை முள்வேலிக்குள் சிக்கவைத்த பிரபாகரன் போலவே நீயும் என்னை மரவுரி தரித்து கானகம் ஏகச்செய்தாய்.

(“நவீன சீதை புலம்பல் [கற்பனை கலந்த நிஜம்]” தொடர்ந்து வாசிக்க…)

புது அரசியலமைப்பு; நாடு முழுதும் மக்கள் கருத்து

பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய அரசியலமைப்புத் தொடர்பில் நாடு முழுவதிலும் உள்ள மக்களின் கருத்துக்களை அறியும் பணி நாளை மறுதினம் (13)ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அரசியலமைப்புத் தொடர்பான கருத்துக்களை அறியும் நோக்கில் சட்டத்தரணி லால் விஜயநாயக்க தலைமையிலான குழுவொன்றை பிரதமர் நியமித்திருந்தார். இந்தக் குழுவினர் இன்று (11)கொழும்பில் கூடி ஆராயவுள்ளனர்.

(“புது அரசியலமைப்பு; நாடு முழுதும் மக்கள் கருத்து” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு முதல்வருக்கு அழுத்தம்!

தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளிநாட்டு இராஜதந்திர அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் விவகாரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடவும் கடும்போக்குடைய தமிழ் அரசியல்வாதிகளை உள்ளடக்கிய தமிழ் மக்கள் பேரவையை உருவாக்கியுள்ள விடயத்திலேயே முதலமைச்சர் விக்னேஸ்வரன் இராஜதந்திர அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளார். தமிழ் மக்கள் பேரவை தொடர்பாகவும், தமிழ் மக்களின் விவகாரம் தொடர்பாக பேரவை எடுத்துள்ள நிலைப்பாடு குறித்தும், சிறிலங்காவில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் மகிழ்ச்சியடையவில்லை என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

(“வடக்கு முதல்வருக்கு அழுத்தம்!” தொடர்ந்து வாசிக்க…)

ஊடக அறிக்கை – தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி

மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு
மேதகு ஜனாதிபதி அவர்களுக்கு,
அரசியல் கைதிகளின் விடுதலை
எதிர்வரும் 16ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருக்கும் தைப்பொங்கல் விழாவில் தாங்கள் கலந்து கொள்ளவிருப்பதாக எடுத்த முடிவு இன ஒற்றுமையை விரும்புகின்றவர்களுக்கு நல்லதொரு செய்தியாக அமைந்துள்ளது. இது தங்களால் விடப்படும் நல்லதொரு சமிக்ஞையாகும். மேலும் எமது நாட்டில் விளங்கும் பல்வேறு மதஙகளால் கொண்டாடப்படும் சமய நிகழ்ச்சிகளில் ஒவ்வொன்றை தேர்ந்தெடுத்து அவற்றை தேசிய விழாவாக அனைவரும் அனுஸ்டிக்க அல்லது கௌரவிக்கக்கூடிய வகையில் பிரகடனப்படுத்தப்பட வேண்டுமென நான் தங்களை கேட்டுக்கொள்கிறேன்.

(“ஊடக அறிக்கை – தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி” தொடர்ந்து வாசிக்க…)

கறுப்பு கொடி எதிர்ப்பு தீர்வை தருமா? வெறுப்பை வளர்க்குமா?

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளனர். அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் போது அவர்களுக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என்று வட மாகாணசபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார். வடக்கில் உள்ள தமிழர்களின் பல பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படவில்லை என்பதை ஆட்சேபித்தே கறுப்புக்கொடி போராட்டம் நடத்தப்படவுள்ளதாக சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

(“கறுப்பு கொடி எதிர்ப்பு தீர்வை தருமா? வெறுப்பை வளர்க்குமா?” தொடர்ந்து வாசிக்க…)

அரசியலமைப்புப் பேரவை: நாடாளுமன்றை நசுக்கும் செயல் – JVP

நாடாளுமன்றத்தை, அரசியலமைப்புப் பேரவையாக மாற்றும் தீர்மானமானது, நிலையியல் கட்டளைகளை மீறுகின்ற செயலாகுமென, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) நேற்று குற்றஞ்சாட்டியுள்ளது. நாடாளுமன்றத்தை நசுக்கி, ஓர் அரசியலமைப்பைக் கொண்டுவர அரசாங்கம் முயல்கின்றது என, அக்கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, குற்றம் சாட்டினார். தனது கட்சி, இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கையை வெளியிடும் என அவர் கூறினார்.

(“அரசியலமைப்புப் பேரவை: நாடாளுமன்றை நசுக்கும் செயல் – JVP” தொடர்ந்து வாசிக்க…)

நீண்டகாலம் நிலைத்திருக்கும் அரசியல் தீர்வுக்கு ஐ. நா ஒத்துழைக்கத் தயார்

நீண்டகாலம் நிலைத்திருக்கக் கூடிய அரசியல் தீர்வு காணும் முயற்சிகள், மீள்குடியேற்றம் மற்றும் காணிகள் விடுவிப்பு போன்ற அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க ஐக்கிய நாடுகள் சபை தயாராக இருப்பதாக இலங்கைக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி சுபினை நத்தி உறுதியளித்தார். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று(08) நடைபெற்ற பிரதான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியிருந்தார். ஏனைய சர்வதேச நாடுகளுடன் இணைந்து ஐ.நா இலங்கைக்கு உதவி வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

(“நீண்டகாலம் நிலைத்திருக்கும் அரசியல் தீர்வுக்கு ஐ. நா ஒத்துழைக்கத் தயார்” தொடர்ந்து வாசிக்க…)

கருணாவினால் அல்ல !

 

“அமைதியான புரட்சியை சாத்தியமற்றதாக ஆக்குபவர்கள், வன்முறையான புரட்சியை தவிர்க்கமுடியாததாக ஆக்குகிறார்கள் ” ( ஜான். எப் .கென்னடி )

இலங்கை தமிழ் அரசியலில் தமிழ் மக்கள் பேரவை எனும் அமைப்பின் உருவாக்கம்,அதன் அங்கத்தவர்கள்,நோக்கம் குறித்த சர்ச்சைகள் சூடு பிடித்துள்ளன. அதுவும் இலங்கை அரசும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அதிகாரப் பரவலாக்கம் குறித்து சமிக்ஞைகளை காட்டியுள்ள நேரத்தில், தமிழ் மக்களின்“ஏகபோக “ பிரதிநிதிகள் எனப்படும் தமிழர் கூட்டமைப்பு ஒரு புதிய சவாலை எதிர்கொண்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.

(“கருணாவினால் அல்ல !” தொடர்ந்து வாசிக்க…)