முறிந்து பனை ரஜனியை நினைவு கூரவோம்

முறிந்து பனை ரஜனியை நினைவு கூரவோம். விஷணுபிரியாவும் எதையோ உணர்த்திவிட்டுத்தான் மறைந்துள்ளாரோ? ரஜினி திரணகமவின் ஒவ்வொரு வார்த்தையும் உண்மையாகின. விஷ்ணுப்பிரியா சொல்ல வந்தது, இந்த ஜனநாயக அரசின் அங்கங்கள் ஜனநாயக விரோத பாசிச சக்திகளால் ஆட்டுவிக்கப்படுகின்றன. சட்டம் தன் கடமையைச் செய்ய இயலாத நிலை. இந்திய மக்களே, நான் இந்த ஜனநாயக்க் குடியரசின் அடையாளம். எனது நிலையில் நமது சட்டம் சார் அரசு உள்ளது. என்பதை உணர்த்திய செயல். பெருமாள் முருகன் என்ற எழுத்தாளர் தன் தன் கொலையை தானே அறிவித்தார். அவரைக் காக்க வேண்டிய அதிகாரம் விஷ்ணுப்பிரியா. அவரும் தற்கொலை. இரண்டுமே திருச்செங்கோடு. இரண்டிற்குமே காரணம் சட்டம் அல்ல. சட்டத்தின் இயலாமை. இந்தியத் தாலிபான் ஆர்எஸ் எஸ் .நான் சொல்வதைப் புரிந்து கொள்ள மீண்டும் வாசிப்போம் முறிந்த பனை
(Kanniappan Elangovan)

ஒலுவில் கடற்கரையும் கீரைக்கடை அரசியலும்

கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டுமென்று சொல்வார்கள். ஓர் ஊரில் ஒரேயொரு கீரைக்கடை மட்டுமே இருந்தால் அவரே தனியுரிமை உள்ள வியாபாரியாக இருப்பார். விலையை ஏற்றி விற்றாலும் பழுதடைந்த கீரையையே கொண்டு வந்து தந்தாலும் யாரும் கேட்க முடியாது. ஆனால், அவரது கடைக்கு அருகில் இன்னுமொரு கீரை வியாபாரி கடையைப் போட்டுவிட்டால் நிலைமைகள் மாறிவிடும். போட்டி வியாபாரச் சூழல் என்பதால் குறைந்த விலையில் தரமான பொருட்களை விற்பதற்கு இருவரும் நான் முந்தி, நீ முந்தியென செயற்படுவார்கள். இதனால் வாடிக்கையாளர்களுக்கு நல்லது நடக்கும். ஒலுவில் பிரதேசம் பற்றி எல்லோருக்கும் தெரியும். அம்பாறை மாவட்டத்தின் கரையோரத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தை இரண்டு விடயங்களால் முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ர‡ப் அழகுபடுத்தினார். ஒன்று, தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றையது, ஒலுவில் துறைமுகம். இவற்றுள் ஒலுவில் துறைமுகம் பல சமூக, புவியியல் எதிர்விளைவுகளை தோற்றுவித்திருக்கின்றது. தலைவர் அஷ்ர‡ப் ஒலுவில் வெளிச்சவீட்டை திறந்து வைத்த போது, உண்மையில் விடயமறியா மக்கள் அதனை துறைமுகம் என்றே பேசிக் கொண்டனர். அதனைப் பார்ப்பதற்கு அயல்; ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் இரவுபகலாக வந்து சென்றது ஞாபகமிருக்கின்றது.

(“ஒலுவில் கடற்கரையும் கீரைக்கடை அரசியலும்” தொடர்ந்து வாசிக்க…)

ஜெனீவாவில் இந்தியாவின் நிலை என்ன?

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தருணம் ஒன்றிலேயே இடம்பெற்றிருக்கிறது. ஒரு பக்கத்தில் ஐ.நா விசாரணை அறிக்கை கையளிக்கப்பட்டுள்ள சூழல், இன்னொரு பக்கத்தில், ஜெனீவாவில் அந்த அறிக்கை தொடர்பான விவாதங்கள் நடக்கவுள்ள சூழல், மற்றொரு புறத்தில் இந்த அறிக்கையின் தொடர்ச்சியாக இலங்கை தொடர்பான அடுத்தகட்ட நகர்வு என்ன என்று சர்வதேச சமூகம் தீர்மானிக்கவுள்ள சூழல். இந்தப் பின்னணியில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் புதுடெல்லிப் பயணத்தின் போது, இந்த விவகாரம் குறித்து இந்தியத் தரப்புடனான பேச்சுக்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

(“ஜெனீவாவில் இந்தியாவின் நிலை என்ன?” தொடர்ந்து வாசிக்க…)

முகப்பு புத்தகத்தில் கருத்துப் பரிமாற்றம்…… அனந்தியே ஒரு போர் குற்றவாளி….

நல்லாட்சித் தத்துவம் எனக் கூறிக்கொண்டு சமாதானப் புறாவாக வலம்வருகின்ற முன்னாள் ஜனாதிபதி சந்தி ரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் போர்க் குற்றவாளி தான் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். அனந்தியே ஒரு போர் குற்றவாளி…. – Ratnasingham Annesley
புலிகளுக்கும் ஏனைய விடுதலை அமைப்புக்களுக்கும் இடையே உள்ள பாரிய வேறுபாடு புலிகள் பொது மக்களையும் மாற்றுக் கருத்தாளர்கள் மாற்று விடுதலை விடுதலை அமைப்பினரை தமது இயக்கத்தின் கொள்கையாக பிரகடனப்படுத்தி செயற்படுத்தினர். ஸ்தாபன மயப்படுத்தியே செய்தனர். மற்றைய இயக்கத்தினர் இவற்றை தமது நடைமுறைத்தவறுகளுடூ செய்திருக்கின்றனர்.

(“முகப்பு புத்தகத்தில் கருத்துப் பரிமாற்றம்…… அனந்தியே ஒரு போர் குற்றவாளி….” தொடர்ந்து வாசிக்க…)

90 களின் பின்னர் யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை

உங்கள் வாழ்வில் நீங்கள் உண்ட ஆகச்சிறந்த உணவு எது என்று எப்போதாவது யோசித்துப்பார்த்து இருக்கின்றீர்களா? அந்த உணவை ஆக்கிய முகத்தை உங்களால் நினைவுக்குக் கொண்டுவரக்கூடியதாக உள்ளதா? எப்போதாவது அந்த உணவை ஆக்கியவர்களைத் தேடிச்சென்று பாராட்டுத் தெரிவித்தது உண்டா? பொதுவாக எல்லாருக்கும் எப்போதும் வீட்டுச் சாப்பாடோ, அம்மாக்கள் தயாரித்த உணவுகளோ, மனைவியர் கைப்பக்குவமோ, அரிதான சிலருக்கு தந்தையரின், கணவன்மார்களின், நண்பர்களின் கைப்பக்குவமோ அல்லது வேறும் ஏதோ ஒரு உறவு தயாரித்த உணவுகளோ பிரியமானதாக இருக்கும். இன்னும் சிலருக்கு அதைவிடுத்து நாம் உணவுண்ட சாப்பாட்டுக்கடைகளின், தேநீர்க்கடைகளின், உணவு வண்டிகளின், இனிமையான பொழுதுகளை மீளநினைவூட்டும் குளிர்பானச்சாலைகளோ கூட இந்தக் கேள்விகளுக்குப் பதில்சொல்வதாக அமையக்கூடும்.

(“90 களின் பின்னர் யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை” தொடர்ந்து வாசிக்க…)

வாரம் ஒரு ஆய்வாளர் பகுப்பாய்வு 3: DBS. ஜெயராஜ்.

1999 ம் ஆண்டுDBS Jeyaraj உடன் நான் (நட்சத்திரன் செவ்விந்தியன்) பேசிய நீண்ட தொலைபேசி உரையாடலில் DBS Jeyaraj மனந்திறந்து
பேசினார். புலிகளின் அனைத்துலக பொறுப்பாளராக
லண்டனில் இருந்த கேணல் கிட்டுவிடம் அனுமதிபெற்றே தான்
ராஜீவ் காந்தி கொலைகாரன் ஒற்றைகண் சிவராசன் பற்றிய
Profile விபரங்களை Frontline(The Hindu)இலும் Lanka Guardian இலும் எழுதினார் என்பதை ஒப்புகொண்டதோடு அந்த சனவரியில் கிட்டு
கொல்லப்பட்டபின் திலகர் அனைத்துலக பொறுப்பெடுத்த
பின்னர் பெப்ரவரி காதலர் தினத்திலேயே திலகரின் மிரட்டல்களுக்கு பிறகே தான் தாக்கப்பட்டதை ஒப்புவித்தார்.

(“வாரம் ஒரு ஆய்வாளர் பகுப்பாய்வு 3: DBS. ஜெயராஜ்.” தொடர்ந்து வாசிக்க…)

யுனியன் நாடுகள் இதனைச் சிந்துக்குமா…?

(சாகரன்)
இவ்வளவு நடந்த பின்பும் அகதிகள் பிரச்சனை என்று மட்டும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் கவனத்தைச் செலுத்தி தமது நாட்டிற்குள் அகதிகளை வர விடாமல் எப்படித் தடுப்பது தவிர்பது என்ற வட்டத்திற்குள் மட்டும் சிந்திக்கின்றன. மாறாக இந்த அகதிகள் எவ்வாறு உருவானார்கள் என்பதை இவர்கள் சிந்திப்பதை விரும்பவில்லை. அப்படி சிந்தித்து போரை நிறுத்தாத வரைக்கும் அகதிகள் பிரச்சனை பெருக்கெடுத்து ஓடி அணையை உடைத்தெறியும். இதன் பின்பு யூனியன்கள் பாடங்கள் கற்பர். நான்கு வருடத்திற்கு முன்பு சிரிய மக்கள் வாழ்ந்த அமைதி வாழ்வை உள்ளுர் கலகக்காரர்களுக்கு ‘உதவி’கள் செய்து ஊக்குவித்து கலகத்தை ஆரம்பித்து வைத்தவர்கள் யார் என்பதை உலகம் அறியும். இதன் தொடர்சியாக மதத்தை தூக்கிப் பிடிக்கும் தீவிரவாதிகள் சிரியாவை பங்கு போடப் புறப்பட்டதும் புதிதாக அமெரிக்காவால் ஆரம்பிக்கப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் இவர்கள் யாவரையும் புறம் தள்ளி முன்னேற இந்தக் காட்டாற்றை தடுக்க முடியாமல் யாவரும் திணறி அல்லாவை வழிபடும் மக்களும் அவதிப்படும் நிலை ஏற்பட்டதையும் உலகம் அறியும். இன்று பன்முகத்தாக்குதலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் தரைவழியையும் தவிர்த்து கடல் மார்க்கமாக தப்பிக்க முயலும் சிரிய மக்கள் தமது உறவுகளை கடலுக்கு தீனியாக போடவேண்டிய துர்பாக்கியத்திலுள்ளது கொடுமையிலும் கொடுமை. இதிலும் தப்பியவர்கள் தஞ்சம் கேட்க யூனியன்கள் தாங்காது தத்தளிப்பது புதிய நிலமைகளை ஏற்படுத்துமா என்பது போரை நிறுத்தி அகதி வாழ்வைத் தடுக்கும் பொறிமுறையில் தங்கியுள்ளது.

கடாபியின் மறுபக்கம்……

1. லிபியாவில் மின்சார கட்டணம் கிடையாது, மின்சாரம் இலவசம்.
2. வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி கிடையாது.
3. வீடு மனை என்பது லிபியாவில் மனித உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது , லிபியாவில் வாழும் அனைத்து மக்களும் வீடுகள் பெறும் வரை தனக்கோ தனது பெற்றோருக்கோ வீடு கட்டமாட்டேன் என்று கடாபி சபதம் பூண்டிருந்ததால், அவரது பெற்றோர்கள் இறக்கும் போது அவர்கள் வீடுகள் இல்லாமல் கூடாரங்களிலேயே இறந்தனர் .
4.அந்த நாட்டில் மனம் முடிக்கும் ஒவ்வொரு புதுமணத் தம்பதியினர்களுக்கும் அந்நாட்டின் அரசு 60,000 தினார், அதாவது அமெரிக்க பணம் 50,000 டாலர் அதாவது இந்திய பணம் சுமார் 28,00,000 ரூபாய் பணத்தை இலவசமாக வழங்கியது.
5.லிபியாவில் கல்வி மற்றும் மருத்துவம் முற்றிலும் இலவசம், கடாபி அதிகாரத்தை கைப்பற்றும் பொழுது லிப்ய மக்களில் எழுத படிக்கத் தெரிந்தோர் வெறும் 25% மட்டுமே , ஆனால் அவர் ஆட்சிக்கு வந்ததன் பின் அது 83% உயர்ந்தது.

(“கடாபியின் மறுபக்கம்……” தொடர்ந்து வாசிக்க…)

சரவணபவன் எம்.பியும் அவரது உதயன் பத்திரிகையும்

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் ‘சப்றா பினான்ஸ்’ என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் இயங்கிய நிதி நிறுவனம் இந்த சரவணபவனுக்குச் சொந்தமானது. அந்த நிறுவனம் அதி கூடுதலான வட்டி தருகிறோம் என்று சொல்லி, யாழ்ப்பாண மக்களின் கோடிக்கணக்கான ரூபா பணத்தை தனது நிதி நிறுவனத்தில் வைப்புச் செய்யும்படி கவர்ச்சிகரமான பிரச்சாரத்தில் இறங்கியது. அதை நம்பிய யாழ் குடாநாட்டு மக்கள், தமது பிற்கால சீவியத்திற்காக வைத்திருந்த பணம், தமது பிள்ளைகளின் சீதனத்துக்காக வைத்திருந்த பணம் என எல்லாவற்றையும் சப்றா ஃபினான்ஸில் வைப்புச் செய்தனர்.

(“சரவணபவன் எம்.பியும் அவரது உதயன் பத்திரிகையும்” தொடர்ந்து வாசிக்க…)

திப்புசுல்தான் ஆங்கிலேயருக்கு எதிராக நடத்திய மகத்தான தியாகம்

(Jothimani Sennimalai)

வரலாற்றில் திப்புசுல்தான் ஆங்கிலேயருக்கு எதிராக நடத்திய மகத்தான தியாகமும் ,வீரமும் நிறைந்த சுதந்திரப் போராட்டத்திற்கு இணையான சரித்திரம் உலக வரலாற்றிலேயெ வேறெங்கும் இல்லை . அவர் குழந்தைகளைக் கூட கொடிய ஆங்கிலஅரசிடம் பணயம் வைக்க நேரிட்டது. அந்த மைசூர்புலி கடைசிவரை களத்தில் ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்தது . அதுமட்டுல்ல தீரன்சின்னமலை, வேலுநாச்சியார், கட்டபொம்மன் போன்ற மாவீரர்களுக்கு போர்ப்பயிற்சி அளித்தார் திப்பு. வட இந்தியாவில் நிலைமையை கட்டுக்குள் வைத்திருந்த ஆங்கிலேயர்களுக்கு தென் இந்தியா ஒரு கெட்ட கனவாக மாற திப்பு ஒரு காரணமாக இருந்தார். அதே போல நவீன இந்தியாவில் ஆயுதம் ஏந்தாத காந்தி. இந்திய சுதந்திர வரலாற்றில் இருவருக்கும் தனித்த இடமுண்டு .

(“திப்புசுல்தான் ஆங்கிலேயருக்கு எதிராக நடத்திய மகத்தான தியாகம்” தொடர்ந்து வாசிக்க…)