யுனியன் நாடுகள் இதனைச் சிந்துக்குமா…?

(சாகரன்)
இவ்வளவு நடந்த பின்பும் அகதிகள் பிரச்சனை என்று மட்டும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் கவனத்தைச் செலுத்தி தமது நாட்டிற்குள் அகதிகளை வர விடாமல் எப்படித் தடுப்பது தவிர்பது என்ற வட்டத்திற்குள் மட்டும் சிந்திக்கின்றன. மாறாக இந்த அகதிகள் எவ்வாறு உருவானார்கள் என்பதை இவர்கள் சிந்திப்பதை விரும்பவில்லை. அப்படி சிந்தித்து போரை நிறுத்தாத வரைக்கும் அகதிகள் பிரச்சனை பெருக்கெடுத்து ஓடி அணையை உடைத்தெறியும். இதன் பின்பு யூனியன்கள் பாடங்கள் கற்பர். நான்கு வருடத்திற்கு முன்பு சிரிய மக்கள் வாழ்ந்த அமைதி வாழ்வை உள்ளுர் கலகக்காரர்களுக்கு ‘உதவி’கள் செய்து ஊக்குவித்து கலகத்தை ஆரம்பித்து வைத்தவர்கள் யார் என்பதை உலகம் அறியும். இதன் தொடர்சியாக மதத்தை தூக்கிப் பிடிக்கும் தீவிரவாதிகள் சிரியாவை பங்கு போடப் புறப்பட்டதும் புதிதாக அமெரிக்காவால் ஆரம்பிக்கப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் இவர்கள் யாவரையும் புறம் தள்ளி முன்னேற இந்தக் காட்டாற்றை தடுக்க முடியாமல் யாவரும் திணறி அல்லாவை வழிபடும் மக்களும் அவதிப்படும் நிலை ஏற்பட்டதையும் உலகம் அறியும். இன்று பன்முகத்தாக்குதலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் தரைவழியையும் தவிர்த்து கடல் மார்க்கமாக தப்பிக்க முயலும் சிரிய மக்கள் தமது உறவுகளை கடலுக்கு தீனியாக போடவேண்டிய துர்பாக்கியத்திலுள்ளது கொடுமையிலும் கொடுமை. இதிலும் தப்பியவர்கள் தஞ்சம் கேட்க யூனியன்கள் தாங்காது தத்தளிப்பது புதிய நிலமைகளை ஏற்படுத்துமா என்பது போரை நிறுத்தி அகதி வாழ்வைத் தடுக்கும் பொறிமுறையில் தங்கியுள்ளது.

கடாபியின் மறுபக்கம்……

1. லிபியாவில் மின்சார கட்டணம் கிடையாது, மின்சாரம் இலவசம்.
2. வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி கிடையாது.
3. வீடு மனை என்பது லிபியாவில் மனித உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது , லிபியாவில் வாழும் அனைத்து மக்களும் வீடுகள் பெறும் வரை தனக்கோ தனது பெற்றோருக்கோ வீடு கட்டமாட்டேன் என்று கடாபி சபதம் பூண்டிருந்ததால், அவரது பெற்றோர்கள் இறக்கும் போது அவர்கள் வீடுகள் இல்லாமல் கூடாரங்களிலேயே இறந்தனர் .
4.அந்த நாட்டில் மனம் முடிக்கும் ஒவ்வொரு புதுமணத் தம்பதியினர்களுக்கும் அந்நாட்டின் அரசு 60,000 தினார், அதாவது அமெரிக்க பணம் 50,000 டாலர் அதாவது இந்திய பணம் சுமார் 28,00,000 ரூபாய் பணத்தை இலவசமாக வழங்கியது.
5.லிபியாவில் கல்வி மற்றும் மருத்துவம் முற்றிலும் இலவசம், கடாபி அதிகாரத்தை கைப்பற்றும் பொழுது லிப்ய மக்களில் எழுத படிக்கத் தெரிந்தோர் வெறும் 25% மட்டுமே , ஆனால் அவர் ஆட்சிக்கு வந்ததன் பின் அது 83% உயர்ந்தது.

(“கடாபியின் மறுபக்கம்……” தொடர்ந்து வாசிக்க…)

டக்ளஸ் கருணா எதிர்காலம் என்ன ? பகுதி 4

(மாதவன் சஞ்சயன்)

கருணா தன் குடும்பம் வாழும் வெளிநாட்டில் அவர்களுடன் இணைந்தாலும் நிம்மதியாக காலத்தை செலவிட புலத்து புலி பினாமிகள் விடாது. ஏதாவது குடைச்சல் கொடுத்து கொண்டே இருப்பர். டக்ளசின் நிலை அதை விட மோசம். எந்த குடும்பத்துடன் போவது என்பது முதலாவது பிரச்சனை. மேலும் அவருக்காக தேர்தல் காலங்களில் பறந்து வரும் பறவைகள் கூட அவரை கௌரவமாக காப்பாற்ற முடியாது. விடாது கறுப்பு என்பது போல சூளை மேடு வழக்கு அவரை மீண்டும் சென்னைக்கு அழைக்கலாம். அதனால் இருவரின் இருப்பும் இங்குதான். தம் இருப்புக்காக தேர்தல் காவடி தூக்கித்தான் ஆகவேண்டும். கருணா அதற்கான வழிகளை தேடிக்கொண்டிருக்க டக்ளஸ் தன் கட்சி இழப்புக்கான பழியை கட்சி உறுப்பினர்கள் மீது போட தொடங்கிவிட்டார். தொலைக்காட்சி பேட்டியில் மட்டுமல்ல அண்மையில் அவர் நடத்திய கிளிநொச்சி சந்திப்பிலும் உங்கள் உழைப்பு போதாது என பழி போட்டதால் மனம் நொந்துபோன பலர் முணு முணுத்தது ஜே வி பி இணையத்துக்கு தீனியாக “விலகுகிறார் சந்திரகுமார்” என செய்தி போட்டுள்ளது.

(“டக்ளஸ் கருணா எதிர்காலம் என்ன ? பகுதி 4” தொடர்ந்து வாசிக்க…)

சரவணபவன் எம்.பியும் அவரது உதயன் பத்திரிகையும்

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் ‘சப்றா பினான்ஸ்’ என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் இயங்கிய நிதி நிறுவனம் இந்த சரவணபவனுக்குச் சொந்தமானது. அந்த நிறுவனம் அதி கூடுதலான வட்டி தருகிறோம் என்று சொல்லி, யாழ்ப்பாண மக்களின் கோடிக்கணக்கான ரூபா பணத்தை தனது நிதி நிறுவனத்தில் வைப்புச் செய்யும்படி கவர்ச்சிகரமான பிரச்சாரத்தில் இறங்கியது. அதை நம்பிய யாழ் குடாநாட்டு மக்கள், தமது பிற்கால சீவியத்திற்காக வைத்திருந்த பணம், தமது பிள்ளைகளின் சீதனத்துக்காக வைத்திருந்த பணம் என எல்லாவற்றையும் சப்றா ஃபினான்ஸில் வைப்புச் செய்தனர்.

(“சரவணபவன் எம்.பியும் அவரது உதயன் பத்திரிகையும்” தொடர்ந்து வாசிக்க…)

டக்ளஸ் கருணா எதிர்காலம் என்ன ? பகுதி 3

(மாதவன் சஞ்சயன்)

டக்ளஸ் கருணா இடையே பல ஒற்றுமைகள் காணப்பட்டாலும் அவர்கள் ஒன்றாக இணைந்து செயல்ப்பட முடியவில்லை. காரணம் டக்ளசின் குணாம்சம். யாருடன் இணைந்தாலும் நான் தான் தலைவன் என்ற போக்கு. கூட்டமைப்பில் தான் இருந்திருந்தால் நான் தான் தலைமை ஏற்றிருப்பேன் என அடிக்கடி பீத்திக்கொள்வார். தன்னை சுற்றி ஒரு கூட்டத்தை வைத்து சுப்ரபாதம் கேட்டு சுகம் காண்பவர். பிரேமதாச முதல் மகிந்தவரையும் இன்று மைத்திரியுடனும் அவர்களின் மகுடிக்கு ஏற்றவாறு நடந்து கொள்பவர். கருணா போராளி மட்டுமல்ல பல களங்களை கண்டவர், முன்னின்று நடத்தியவர். எனது ஜயசிக்குறு வெற்றிக்கு இவர்தான் காரணம் என பத்திரிகையாளர் மாநாட்டில் பிரபாகரனால் பாராட்டப்பட்டவர். இன்று தான் இருக்கும் கட்சியையே சிங்கள பேரினவாத கட்சி என பேட்டி கொடுக்கும் தைரியம் கொண்டவர். கிழக்கின் அபிவிருத்தியில் இயக்கத்தில் இருந்த போதும் பின் அரசில் இணைந்த போதும் அக்கறைப்பட்டவர். இயக்ககாலத்தில் ஆயித்தியமலையில் அவர் அமைத்த அரிசி ஆலை வன்னிப் புலியை வியக்கவைத்தது.

(“டக்ளஸ் கருணா எதிர்காலம் என்ன ? பகுதி 3” தொடர்ந்து வாசிக்க…)

அரசியல் சதுரங்கத்தின் ஓர் அங்கமா?

(எம்.எஸ்.எம்.ஐயூப்)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எட்டாவது நாடாளுமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டமை உரிமை வழங்கலாகக் கொள்வதா, தென் பகுதி அரசியலில் புதிதாகக் காணப்படும் நல்லிணக்கத்தின் அடையாளமாகக் கொள்வதா அல்லது தென் பகுதி அரசியலில் இடம்பெற்று வரும் அரசியல் சதுரங்கத்தின் ஓர் அம்சமா என்பது இப்போதைக்குத் தெளிவாகவில்லை. ஆயினும், கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தமிழ் மக்கள் விடயத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பார்க்கும் போது இது நல்லிணக்கத்தின் அடையாளமாகவும் கொள்ளலாம்.

(“அரசியல் சதுரங்கத்தின் ஓர் அங்கமா?” தொடர்ந்து வாசிக்க…)

திப்புசுல்தான் ஆங்கிலேயருக்கு எதிராக நடத்திய மகத்தான தியாகம்

(Jothimani Sennimalai)

வரலாற்றில் திப்புசுல்தான் ஆங்கிலேயருக்கு எதிராக நடத்திய மகத்தான தியாகமும் ,வீரமும் நிறைந்த சுதந்திரப் போராட்டத்திற்கு இணையான சரித்திரம் உலக வரலாற்றிலேயெ வேறெங்கும் இல்லை . அவர் குழந்தைகளைக் கூட கொடிய ஆங்கிலஅரசிடம் பணயம் வைக்க நேரிட்டது. அந்த மைசூர்புலி கடைசிவரை களத்தில் ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்தது . அதுமட்டுல்ல தீரன்சின்னமலை, வேலுநாச்சியார், கட்டபொம்மன் போன்ற மாவீரர்களுக்கு போர்ப்பயிற்சி அளித்தார் திப்பு. வட இந்தியாவில் நிலைமையை கட்டுக்குள் வைத்திருந்த ஆங்கிலேயர்களுக்கு தென் இந்தியா ஒரு கெட்ட கனவாக மாற திப்பு ஒரு காரணமாக இருந்தார். அதே போல நவீன இந்தியாவில் ஆயுதம் ஏந்தாத காந்தி. இந்திய சுதந்திர வரலாற்றில் இருவருக்கும் தனித்த இடமுண்டு .

(“திப்புசுல்தான் ஆங்கிலேயருக்கு எதிராக நடத்திய மகத்தான தியாகம்” தொடர்ந்து வாசிக்க…)

என்னிடமிருந்த ஒரு மூடநம்பிக்கை…

(Comrade Kumaresan Asak)

அறிவியலில் நாட்டம் உள்ளவன் நான். அதன் அடிப்படையில், பொதுவாக முன்னேற்றங்கள் மட்டுமே நிகழ்ந்துகொண்டிருப்பதாக நம்பி வந்திருக்கிறேன். சமூக அறிவியலிலும் மிகுந்த ஈடுபாடு உள்ளவன் நான். அந்த அடிப்படையில் சமுதாயம் வளர்ச்சசியடைந்துகொண்டே இருக்கிறது என்ற நம்பிக்கையும் எனக்கு இருந்து வந்திருக்கிறது, முந்தாநாள் இருந்தது போல் நேற்றைய சமுதாயம் பின்னடைந்த நிலையில் இல்லை, நேற்றைய சமுதாயத்தை விட இன்றைய சமுதாயம் மேலும் முன்னேறியிருக்கிறது என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது உண்டு.

(“என்னிடமிருந்த ஒரு மூடநம்பிக்கை…” தொடர்ந்து வாசிக்க…)

வாரம் ஒரு ஆய்வாளர் பகுப்பாய்வு 01. ஒரு இடையீடு. தராகி சிவராம்.

90 களில் பதின்மவயதில் புலி நாட்டாமை
செய்த ஊரைவிட்டு ஒடி கொழும்பு போனேன்.
சரிநிகர் அலுவலகத்தில் கவிஞர் சேரன்
உதவியலாளரால் ஒரு பின்னேரம் கொள்ளுப்பிட்டி காலி
வீதியில் சிங்கள கடையில் பிளென்ரீ குடித்தேன் தராகி
சிவராமோடு. இந்தியாவில் ல் இருந்தபோது
மும்பாய் தாண்டி தான் போகவில்லை என்று
ஆதங்கப்பட்டார். நான் குடியிருந்த ரத்மலானலயில
சிவராம் குடியிருந்ததால் அடுத்த சனிக்கிழம
அவர் வீடு போனன். அதுவொரு கனாக்காலம்
எனக்கு 16 வயசு. ராதுகா பதிப்பக ரசிய நாவல்
தமிழ் மொழிபெயர்ப்புகள வாசிச்சுட்டு
ஒரு பிசாசு மாதிரி வொட்காவும் பீரும் மணக்க
கிடைக்காத என்று அலைந்த காலம். தராக்கி
ஒரு காப்போத்தல் பிறாண்டி உடைத்தார். கேட்டார்
நமக்கு கள்ளுதானே குடிக்கலாம்னு அவையடக்கமாக
சொன்னேன். மருந்துக்கும் எனக்கு மது தந்தாரில்ல. பொரிச்ச
கார்ஜில்ஸ் சோஸேஜ் மட்டும் தந்தார். வெறியில திராணியிருந்தா
இளவரசி டயனாவைவை திராணியிருந்தா யாரும்
மடக்கலாம்ணார்.(அந்த நாட்களில ஒரு குதிரகாரன் தான் இளவரசியின் பாய்பிறண்ட்)
(“வாரம் ஒரு ஆய்வாளர் பகுப்பாய்வு 01. ஒரு இடையீடு. தராகி சிவராம்.” தொடர்ந்து வாசிக்க…)

இணக்க அரசியலில் மைத்திரி – டக்ளஸ் பிணக்கு என்ன?

தேசிய அரசாங்கத்தில் நியமனம் பெற்று உள்ள இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்குகின்ற தோரணையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பூடகமாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் புத்திமதி கூறி உள்ளார். ஜனாதிபதி பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஸ தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக விளங்குகின்றார், இவரிடம் இருந்து பாடம் படிக்க வேண்டிய தேவை இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு உள்ளது, முன்பு அமைச்சரவை அமைச்சராக இருந்து விட்டு இப்போது இராஜாங்க அல்லது பிரதி அமைச்சர்களாக இருப்பது எப்படி? என்று அடம் பிடிப்பவர்கள் மஹிந்த ராஜபக்ஸவிடம் இருந்து படிக்க வேண்டும் என்று இவர்கள் மத்தியில் உரையாற்றியபோது ஜனாதிபதி தெரிவித்து உள்ளார்.

(“இணக்க அரசியலில் மைத்திரி – டக்ளஸ் பிணக்கு என்ன?” தொடர்ந்து வாசிக்க…)