தமிழீழத்தை கைவிடவுள்ளோம் – சிறிதரன்

தமிழீழம் என்ற பேச்சை எடுத்தால் புத்திஜீவிகள் பயப்பிடுகின்றார்கள். தமிழீழம் குறித்து இனியும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிவது தொடர்பாக கிளிநொச்சியிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,

(“தமிழீழத்தை கைவிடவுள்ளோம் – சிறிதரன்” தொடர்ந்து வாசிக்க…)

தொடரும் மர்ம மரணங்கள் ? குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் – டக்ளஸ் !

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குறுகிய காலகட்டத்துள் மூவர் மர்மமான முறையில் உயிர் நீத்துள்ளமை தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. எனவே, இச் சம்பவங்களின் பின்னணிகள் உடனடியாகக் கண்டறியப்பட்டு, குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சட்டம் மற்றும் ஒழுங்கு விவகார அமைச்சர் சாகல ரத்னாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், கடந்த 24ம் திகதி கிளிநொச்சி கோவிந்தன் கடைச் சந்திக்கருகில் 52 வயதுடைய முனியாண்டி குமாரராசா என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மறுநாள் 25ம் திகதி, கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் கிணறொன்றில் இருந்து 29 வயதுடைய பொன்னம்பலம் சிவகரன் எனும் இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

(“தொடரும் மர்ம மரணங்கள் ? குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் – டக்ளஸ் !” தொடர்ந்து வாசிக்க…)

தீர்வுத்திட்டத்தை முந்திக் கொடுப்பது யார்…?

நாரதர் தீர்வு மாங்கனியைக் கொண்டு வந்து அம்மை அப்பனாம் ரணில், மைத்திரியிடம் கொடுத்து இது தகுதியுள்ளவர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும் என்று கொடுக்க…

சரியான தீர்வுத் திட்டத்தைக் கொண்டு வருகின்றவர்களுக்கே ‘தீர்வு மாங்கனி’ என்று அம்மை அப்பன் மொழிந்திட்டனர்.

உடனே சம்பந்தர், ஏறுமயிலின் கரியரில் சுமந்திரனையும் ஏற்றிக் கொண்டு உலகத்தைச் சுத்தி வந்து தீர்வுத் திட்டம் காண இசுக்கோத்துலாந்துக்கு போய் விட்டார்.

ஆனால் விநாயகர் விக்னேஸ்வரனோ, யாழ்ப்பாணம் தான் எனக்கு உலகம், கிழக்கோ, வன்னியோ இல்லை என்று யாழ்ப்பாணத்திற்குள் சுத்தி உடனடியாக தீர்வுத்திட்டத்தைக் கொண்டு வந்து விட்டார்.

ஆனால் இப்போது அம்மையப்பனிடம் கொண்டு போய் காட்ட வேண்டுமே!

பிள்ளையார் முறிகண்டி தாண்டுமுன் சம்பந்தர் வந்திறங்கியிடுவாரோ என்று அவசரமாய் சம்பந்தி வீட்டுக்குப் போய் கொண்டிருக்கிறார்;.

இவர்கள் எல்லாம் வருமுன்னால் மாங்கனி அழுகி விடுமோ?
இரண்டு பேருக்குமே பிரிச்சுக் குடுக்கப் போய், கடைசியில் குரங்கு அப்பம் பிட்ட கதை போல ஆகி விடுமோ, என்னவோ?

(RC George)

இதற்கு எல்லாம் முதலில் வரதராஜயப்பெருமாள் கொடுத்துவிட்டாரே. விநாயகமூர்த்தியும் கொடுத்துவிட்டதாக செய்திகள் கூறுகின்றன. அம்மை அப்பனின் பிள்ளைகள் கொடுத்தால்தான் மாங்கனியா மற்றதெல்லாம் வேறு கனியா…? அல்லது சுற்றி கொடுத்தவற்றைதான் சுத்தலாம் என்று மற்றயவற்றை மறைத்து விட்டாரோ ரணில் .
(Siva Easwaramoorthy)

அரசியல் தீர்வுத் திட்ட முன்வரைபு பொதுமக்கள் முன்னிலையில்

தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத் திட்ட முன்வரைபு பொதுமக்கள் முன்னிலையில் வெளியிடும் நிகழ்வு, இன்று ஞாயிற்றுக்கிழமை (31-01-2016) யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது..காவிகளும் பாவாடைகளும் மட்டும் ஆசீர்வதிக்க கூப்பிட்ட தீர்வுப் பொதிக்குள் சிறுபான்மைமக்கள் யாவரும் உள்ளடக்கப்படவில்லை என்ற செய்தி இருக்கின்றது. இது வடக்கிற்கான சிறப்பாக யாழ்ப்பாணத்தின் கருதுகோள் அடிப்படையில் மட்டும் இருக்கும் என்பது தெரிகின்றது. (வரைவு நகல் என் கையில் நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தும் இதனை வாசிக்க முன்பு இந்த முடிவிற்கு நான் வந்திருக்கின்றேன்). ஆனாலும் புலிகளால் கட்டி வைக்கப்பட்ட இந்த கூட்டு இப்பவாவது ஏதோ எழுதித் தொலைத்திருக்கின்றது என்ற மகிழ்ச்சி என்னிடம் இல்லாமல் இல்லை. இந்நிலையில் ” நான் பதவியிலிருக்கும்வரை ஒற்றையாட்சியை ஒழிப்பதையோ அல்லது வடக்கு கிழக்கு மீண்டும் இணைக்கப்படுவதையோ ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.”என
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கூறியுள்ளார்.

மஹிந்தவின் புதிய முன்னணிக்கு தினேஷே தலைவர்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் உருவாக்கப்படவுள்ள புதிய முன்னணிக்கு, மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்தி முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன, தலைவராக நியமிக்கப்படுதற்கான சாத்தியம் நிலவுவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

(“மஹிந்தவின் புதிய முன்னணிக்கு தினேஷே தலைவர்?” தொடர்ந்து வாசிக்க…)

யோஷித்த ராஜபக்ஷ கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித்த ராஜபக்ஷ, நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். விசாரணைகளுக்காக கடற்படை தலைமையகத்துக்கு இன்று காலை 10.30 மணியளவில் அவர் சென்றிருந்தார். விசாரணைகளை அடுத்து, நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ள யோஷித்த ராஜபக்ஷ, கடுவலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.மஹிந்த சற்று முன்னர் வந்தடைந்தார். அவர் ஆஜர்படுத்தப்பட்டு ஒரு மணித்தியாலம் ஆகிறது. இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, கடுவலை நீதவான் நீதிமன்றத்துக்கு சற்று முன்னர் வந்தடைந்தார்.

யாழ் ஒருங்கிணைப்பு குழு கட்டத்தை ஈ.பி.டி.பி புறக்கணிப்பா ?

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கடந்த 13 மாதங்களுக்கு பின்னர் இன்று ஆரம்பமாகியுள்ளது. யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் காலை 9.30 மணிக்கு கூட்டம் ஆரம்பமாகி வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்று வருகின்றது.

(“யாழ் ஒருங்கிணைப்பு குழு கட்டத்தை ஈ.பி.டி.பி புறக்கணிப்பா ?” தொடர்ந்து வாசிக்க…)

முதல்வருக்கு உறுப்பினர்களின் ஆட்சேபனை கடிதம்!

இன்று [30-01-2016] அவசரமாக கூடிய வடமாகாண தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள், முதல்வருக்கு தமது ஆட்சேபனை கடிதத்தை அனுப்பிவைத்துள்ளனர். அக்கடிதம் பின்வருமாறு.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே!

“அரசியல் தீர்வு திட்டம்” தொடர்பிலான வடக்கு மாகாணசபை ஆளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களின் கூட்டான நிலைப்பாடு:

கடந்த 20-01-2016 அன்று மாண்பிமிகு முதலமைச்சர், கௌரவ பேரவைத்தலைவர், கௌரவ அமைச்சர்கள், கௌரவ உறுப்பினர்கள் [வடக்கு மாகாணசபை ஆளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு] உடனான விசேட சந்திப்பின்போது மூன்றுவிடயங்கள் குறித்து பேசப்பட்டது.

(“முதல்வருக்கு உறுப்பினர்களின் ஆட்சேபனை கடிதம்!” தொடர்ந்து வாசிக்க…)

தமிழர்கள் இருவரே கருத்துக் கூறியுள்ளனர்

புதிய அரசியலமைப்புக்கு, மக்களின் கருத்துகளை அறிவதற்காகக் கொழும்பில் இடம்பெற்ற முதற்கட்ட அமர்வில், தமிழர்கள் இருவர் மாத்திரமே கருத்துரைத்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு, பெரும்பான்மையின மக்களே அதிக ஆர்வத்துடன் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர் என்றும், கொழும்பில் இடம்பெற்ற அமர்வில், தமிழ்மொழி பேசுவோர், ஆர்வம் காட்டவில்லை என்றும் அத்தகவல்கள் தெரிவித்தன. வடக்கு – கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகிய இருவருமே கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர் என்று அறியமுடிகின்றது.

தமிழிலும் தேசிய கீதம் – மைத்திரி, ரணிலே முடிவு

பெப்ரவரி 4ஆம் திகதி இடம்பெறவுள்ள பிரதான சுதந்திரதின வைபவத்தில், தமிழிலும் சிங்களத்திலும் தேசிய கீதத்தைப் பாடுவது குறித்த முடிவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் எடுப்பர் என, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன, தெரிவித்தார். தேசியக் கீதத்தை தமிழிலும் இசைக்க வேண்டும் என நானும் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயகாரவும் மஹிந்தவின் ஆட்சிகாலத்திலிலேயே வலியுறுத்தி வந்தோம். இந்த ஆட்சியின் போதும் நான், வலியுறுத்தினேன்.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் தேசிய கீதம், விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பல ஆலோசனைகளை முன்வைத்தோம். அதில் முதலாவதாக, இலங்கையின் 68ஆவது சுதந்திர தினமான பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி, தேசிய கீதத்தை தமிழிலும் சிங்களத்திலும் இசைக்க வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தோம்.

இதனை, ஜனாதிபதியும் பிரதமரும் பரிசீலித்து அதற்கான அனுமதியை வழங்கினர். அதற்கு அமைச்சரவையும் அங்கிகாரம் வழங்கியுள்ளது என்றார். முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயகாரவும் மஹிந்தவின் ஆட்சிகாலத்திலிலேயே வலியுறுத்தி வந்தோம். இந்த ஆட்சியின் போதும் நான், வலியுறுத்தினேன்.

ஆட்சி மாற்றத்தின் பின்னர், தேசிய கீத விவகாரம் தொடர்பில், நாடாளுமன்றத்தில் பல ஆலோசனைகளை முன்வைத்தோம். அதில் முதலாவதாக, இலங்கையின் 68ஆவது சுதந்திர தினமான பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி, தேசிய கீதத்தைத் தமிழிலும் சிங்களத்திலும் இசைக்க வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தோம்.

இதனை, ஜனாதிபதியும் பிரதமரும் பரிசீலித்து அதற்கான அனுமதியை வழங்கவுள்ளனர். இது தொடர்பில், அமைச்சரவையில், கருத்தொற்றுமை கிடைத்திருக்கவில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.