யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அண்டிய வீதிகளில் கூட்டமாகப் பயணிப்போரை மறிக்கும் பொலிஸார், அவர்களை விசாரணை செய்கின்றனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்தில் கடந்த சனிக்கிழமை (16) இரு மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக அப்பகுதியில் பதற்றம் நிலவி, விடுதிகளிலிருந்த மாணவர்கள் வெளியேற்றப்பட்டதுடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் காலவரையின்றி மூடப்பட்டது. இந்நிலையில், பல்கலைக்கழகத்தை அண்டிய வீதிகளில் பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குழுவாக வீதியால் செல்பவர்களை மறித்து விசாரணை செய்யும் பொலிஸார், ஆள் அடையாளத்தையும், உரிய காரணங்களையும் நிரூபிக்கத் தவறுபவர்களை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்து உறுதிப்படுத்திய பின்னர் விடுவிக்கின்றனர்.
Category: செய்திகள்
‘பல்கலைக்கழகம் ஒரு தேசிய நிறுவனமாகும்’
“யுத்தம் முடிவடைந்தும் இன்னும் வடக்கு மக்களது நெஞ்சங்களில் அன்பு, கருணை, இரக்கம், ஐக்கியம் எழவில்லை. இன்னும் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்ற நிலையிலேயே உள்ளனர். இந்த மனோநிலையை அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்” என ஜாதிக ஹெல உறுமயவின் அமைப்பாளர் நிசாந்த வர்ணசிங்க தெரிவித்தார்.
(“‘பல்கலைக்கழகம் ஒரு தேசிய நிறுவனமாகும்’” தொடர்ந்து வாசிக்க…)
வவுனியாவில் சம்மந்தன் ‘துாக்கிலடப்பட்டார்’
வவுனியாவில் செருப்பு மாலை அணிவித்து சம்மந்தன் துாக்கிலடப்பட்டார் . தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் என்று கூறப்படும் இரா.சம்பந்தன், வவுனியாவுக்கு இன்று (16.07.2016) வருகை தந்திருந்த நிலையில், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘செருப்பு மாலை’ அணிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடக்கு கிழக்கு பாராளுமன்ற – மாகாணசபைகளின் உறுப்பினர்களை, வவுனியா 02ம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள ‘வன்னிஇன்’ விருந்தினர் விடுதியில் சம்பந்தன் இன்று சந்தித்திருந்தார்.
இந்தநிலையில் ‘வன்னிஇன்’ விருந்தினர் விடுதிக்கு முன்பாக மின்சார கம்பத்தில் சம்பந்தனின் உருவம் அச்சிடப்பட்ட பொம்மை காட்சிப்படுத்தப்பட்டு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. ‘தாண்டிக்குளத்துக்கு வாக்கெடுப்பு நடத்தும் உனக்கு, சர்வதேச விசாரணையா? உள்நாட்டு விசாரணையா? என்று தமிழ் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த தலைமைத்துவ தகுதி உண்டா? என்று கேள்வியெழுப்பி பதாகையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தால் நிகழ்த்தப்பட்ட ‘யுத்த குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள்’ தொடர்பாக இலங்கை அரசாங்கத்தால் ஏற்படுத்தப்படவுள்ளதாக கூறப்படும் உள்நாட்டுப் விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை இணைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்த மாட்டோம் என்று சம்பந்தன், ரிவிர சிங்கள ஊடகத்துக்கு கருத்து கூறிய பின்னர் அவர் வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்திருந்த நிலையில், இந்த எதிர்ப்பு மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் 68 ஆயிரம் மக்களை கொன்ற நாடு ஜனநாயக நாடா? – அருந்ததி ராய் ஆவேசம்!
டெல்லியில் காஷ்மீருக்கு சுதந்திரம் தான் ஒரே வழி என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மனித உரிமைப் போராளியும் புக்கர் பரிசு பெற்ற புகழ் பெற்ற எழுத்தாளருமான அருந்ததி ராய் உரையாற்றினார். அவர் உரையாற்றுவதற்கு முன்னதாக காஷ்மீரிகளின் மூத்த தலைவரான சையத் அலிஷா கிலானி மீது வெறியர்கள் சிலர் காலணி வீசி ரகளை செய்தனர். அதனை முன்னதாக குறிப்பிட்ட அருந்ததி ராய், என் மீது யாருக்கேனும் காலணியை எறிய வேண்டுமானால் இப்பொழுதே எறிந்து கொள்ளுங்கள் எனக் கூறியவாறு தனது உரையைத் தொடங்கினார். காஷ்மீரில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் இடத்தை இந்திய காலனி ஆதிக்கம் பிடித்துக் கொண்டது. காஷ்மீர், இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி அல்ல.
(“காஷ்மீரில் 68 ஆயிரம் மக்களை கொன்ற நாடு ஜனநாயக நாடா? – அருந்ததி ராய் ஆவேசம்!” தொடர்ந்து வாசிக்க…)
ஆரம்பப் போராளிகளில் ஒருவரான சங்கானைச் சந்திரமோகன் காலமாகிவிட்டார்
எங்களோடு தமிழ் இளைஞர் பேரவை , ஆரம்பகாலத் .தமிழ் ஈழ விடுதலை இயக்கம் [TLO…-Tamil Liberation Organisasion. ] ஆகியவற்றில் இயங்கிய ஆரம்பப் போராளிகளில் ஒருவரான சங்கானைச் சந்திரமோகன் காலமாகிவிட்டார் என்ற துயரச் செய்தியை இப்போதுதான் கேள்விப்பட்டு மிகவும் கவலை கொண்டேன்….
அதிர்ந்து அதிகம் பேசாத நுட்பமான புத்திகொண்ட இவர் தனது அதிபுத்திசாலித்தனத்தால் மிகவும் குறைந்த வயதிலேயே, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் [TLO ] ஐந்து பேர் கொண்ட தலைமைக் குழுவில் ஒருவராக இடம் பெற்றார். [முத்துக்குமார சுவாமி, புஷ்பராஜா ,வரதராஜப்பெருமாள், தங்கமகேந்திரன் ஆகியோர் ஏனைய நால்வருமாவர்.]
(“ஆரம்பப் போராளிகளில் ஒருவரான சங்கானைச் சந்திரமோகன் காலமாகிவிட்டார்” தொடர்ந்து வாசிக்க…)
கேட்டது என்ன? நீங்கள் கொண்டு வந்தது என்ன?’
வட்டுவாகலில் சரணடைந்தோர் விவரத்துக்குப் பதிலாக புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்டவர்களின் விவரங்களைக் கொண்டு வந்த முல்லைத்தீவு 58ஆம் படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சாணக்க குணவர்த்தனவை, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம்.ஷம்சுதீன் கோபமடைந்து ஏசினார். இறுதி யுத்தத்தில் காணாமற்போன அனந்தி சசிதரனின் கணவர் எழிலன் (சின்னத்துரை சசிதரன்) உள்ளிட்ட 05 பேரின் உறவினர்கள் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு, இன்று வியாழக்கிழமை (14) முல்லைத்தீவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
(“கேட்டது என்ன? நீங்கள் கொண்டு வந்தது என்ன?’” தொடர்ந்து வாசிக்க…)
உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க’சி.விக்கு தகுதியில்லை’
‘உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எந்தவொரு தகுதியும் இல்லை. அதற்கான சந்தர்ப்பங்களும் மாகாண சபை அதிகாரத்தில் இல்லை’ என ஆளுங்கட்சி உறுப்பினர் ஆயுப் அஸ்மின் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்றது. அதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வடமாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அது தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் இருவர், இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த மற்றுமோர் ஓய்வுபெற்ற அலுவலர் ஆகியோரைக் கொண்ட குழுவொன்றை அமைத்து விசாரணை நடத்தவும், அந்த அறிக்கையின் பிரகாரம் நிதி நிர்வாக நடவடிக்கைகள் முன்மொழியப்படும் என்பது தொடர்பில் பிரேரணையொன்றை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சார்பில் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, சபையில் நேற்றுக் கொண்டு வந்தார்.
(“உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க’சி.விக்கு தகுதியில்லை’” தொடர்ந்து வாசிக்க…)
யுத்தத்தின் போது, இராணுவத்தினருக்கு தமிழர்கள் இலக்கு அல்ல
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, புலிகள் அமைப்பினரால் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான மனிதாபிமானப் போரையே படையினர் மேற்கொண்டிருந்தனர். தவிர, பொதுமக்களைக் கொன்றுதான் வெற்றிபெற வேண்டுமென்ற கொள்கையைப் படையினர் கொண்டிருக்கவில்லை என்று அரசாங்கம், நேற்று அறிவித்தது.
(“யுத்தத்தின் போது, இராணுவத்தினருக்கு தமிழர்கள் இலக்கு அல்ல” தொடர்ந்து வாசிக்க…)
நாமல், முஸம்மில் ஒரே சிறை பிரிவில்
பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால், நேற்றுத் திங்கட்கிழமை (11) முற்பகல் கைது செய்யப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, வெலிக்கடை சிறைச்சாலையில் ஈ பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அதே ஈ பிரிவில், தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அத்துடன், குறித்த பிரிவில் சுமார் 20 பேர்வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் அனைவருக்கும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
70 மில்லியன் ரூபாயினை தவறாகப் பயன்படுத்தினார் மற்றும் பணச் சலவையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில், பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால், நேற்றுத் திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டார். தனது மகனான நாமல் ராஜபக்ஷவை முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து நேற்று திங்கட்கிழமை (11) இரவு பார்வையிட்டார்.
வவுனியாவில் நடைபெறவுள்ள, “புளொட்டின்” 27ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள்.. (அறிவித்தல்)
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினம் எதிர்வரும் 13ம்திகதி புதன்கிழமை முதல் எதிர்வரும் 16ம் திகதி சனிக்கிழமை வரையில் அனுஸ்டிக்கப்படவுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் உயிர்நீத்த தினமான ஜூலை 13ம்திகதி முதல் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் உயிர்நீத்த தினமான ஜூலை 16ம்திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக “புளொட்” அமைப்பு பிரகடனப்படுத்தி வருடாந்தம் அனுஷ்டித்து வருகின்றது. 27ஆவது வீரமக்கள் தினத்தின் ஆரம்ப நிகழ்வுகளாக எதிர்வரும் 13ஆம் திகதி வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள புளொட் செயலதிபர் அமரர் உமாமகேஸ்வரன் அவர்களின் இல்லத்தில் மௌன அஞ்சலியும், மலரஞ்சலியும் செலுத்தப்படவுள்ளது. இதில் புளொட் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். வீரமக்கள் தினத்தின் இறுதிநாளான 16ம்திகதி அன்று செயலதிபர் உமாமகேஸ்வரன் இல்லத்தில் மலரஞ்சலி மற்றும் மௌன அஞ்சலி செலுத்தப்படுவதுடன் அஞ்சலிக் கூட்டமும் இடம்பெறவுள்ளது.
தகவல்.. “புளொட்” ஊடகப்பிரிவு.