பட்ஜெட்டில் முதன்முதலாய் துண்டுவிழுந்தது

(தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

சுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கையின் பொருளாதாரத்தை அனைவருக்கானதாகக் கட்டியெழுப்ப ஐக்கிய தேசியக் கட்சியால் இயலவில்லை. ஆட்சியில் இருந்தோரின் உயர்வர்க்க நலன்கள் இலங்கையர் அனைவருக்குமான ஒரு பொருளாதாரக் கொள்கையை உருவாக்க இடம் தரவில்லை. சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில் நிலைபெற்ற சமூகநலன்களைத் தொடர வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு இருந்தது.

அல்-ஜசீராவில் ரணிலுக்கு வந்த வினை

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கடந்த காலத்தில் பல ஜனாதிபதிகளால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுக்கள், ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்கள் (கமிட்டிகள்) ஆகியவை நாட்டு மக்களையும் உலகத்தையும் ஏமாற்றுவதற்கு நியமிக்கப்பட்டவை என்ற கருத்து மக்கள் மத்தியில் வேரூன்றியுள்ளது. அக்கருத்து தவறென்று கூறவும் முடியாது.

பிரபாகரன் செய்த மாபெரும் தவறு…

(Noorullah Noor)

யாழ்பாணத்தில் வசித்து வந்த பூர்வகுடியான தமிழ் பேசும் இஸ்லாமியர்களை இரக்கமற்று இரண்டே மணி நேரத்தில் வெளியேற்றியது….அதுவும் அவர்களின் உடமைகள் பணம் என அனைத்தையும் விட்டுவிட்டு வெறும்200பணம் மட்டுமே எடுத்துச்செல்ல அனுமதித்த கொடுமை…

இந்த அம்பலப்படுத்தல் இலங்கை கறைபடிந்த வரலாற்றிற்கானது…..

(தோழர் ஜேம்ஸ்)

(தமிழாக்கம் செய்யபட்ட அல்ஜஸீரா இன் ஒளித் தொகுப்பு இது. இதன் ஆங்கில மூலப் பதிவை இந்தப் பதிவின் இறுதியில் காணலாம்)

Links

‘தாஜா’ பண்ணும் வேலையில் கட்சித்தலைமை

பாதாள உலகக் குழுக்களின் கொலை வெறியாட்டங்கள், பாதாளக் குழுக்கள், குற்றங்கள், சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டுள்ள முப்படைகள், அரிசித் தட்டுப்பாடு, தேங்காய்களின்  விலையேற்றம், ‘புது மாப்பிள்ளைகள்’ போல, அமைச்சர்கள் சிலர் செய்யும் அலப்பறைகள், அனுபவமற்ற பேச்சுக்கள், செயற்பாடுகள் என நாட்டு மக்களிடையில் கடும் எதிர்ப்புக்களையும் விமர்சனங்களையும் சந்தித்துவரும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போது தனது அமைச்சர்கள், எம்.பிக்களினால் கட்சிக்குள்ளும் ‘புதிய நெருக்கடி’ ஒன்றை எதிர்கொண்டுள்ளது. 

ஜனாதிபதி அனுர இன் பாதுகாப்பு

(தோழர் ஜேம்ஸ்)

இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் அது ஆட்சி மாற்றமாக ஆரம்பித்து அரசியல் மாற்றமாக உருவெடுத்து வருவதாக உணரப்படுகின்றது
இந்த அரசியல் மாற்றம் உள்ளுரிலும் சர்வதேச அளவிலும் விரும்பப் படாத நிலமைகளையும் சிலர் மத்தியில் ஏற்படுத்தியும் இருக்கின்றது.

திராய்க்கேணி படுகொலைகள்

‘ஜிகாத்’ ஊர்காவல் படையினர் ஆயுதம் தாங்கிய புலிகளை எதிர் கொள்ள இயலாத முஸ்லிம் ஊர்காவல் படையினர், சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து அப்பாவி தமிழ் மக்களை படுகொலை செய்ய ஆரம்பித்தனர்.

பொருளாதார நெருக்கடியும் முடிவுறாத் துயரமும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

புத்தாண்டு பிறந்தாலும், அதனை சராசரி இலங்கையர்கள் கொண்டாடும் மனநிலையில் இல்லை. பொருளாதார நெருக்கடி, மக்கள் எழுச்சி, ஏமாற்றம், புதிய ஜனாதிபதி, அதீத பெரும்பான்மையுடனான பாராளுமன்றம் என மூன்று ஆண்டுகளில் ஏராளமானவற்றை இலங்கையர்கள் பார்த்து விட்டார்கள். இன்னமும் இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளவில்லை. போகிறபோக்கில் இப்போது அதிலிருந்து மீள்வதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே சொல்லத் தோன்றுகிறது.

தமிழ்த் தேசிய அரசியலின் எதிர்நிலைப்பாடு

(லக்ஸ்மன் )

வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களின் தமிழ்த் தேசிய அரசியல் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) – தேசிய மக்கள் சக்தியின் மாற்றம் எனும் அலையில் அடிபட்டுப் போனதைப் பற்றி இன்னமும் சிந்திக்காத தமிழ்த் தேசிய அரசியல் கட்சியினர் இப்போதும் தமது வெறுப்புணர்வுகளையும், வெப்புசாரங்களையும் கோப தாபங்களையும், இறுமாப்புகளையும், வெட்டுக்குத்துக்களையுமே வெளிப்படுத்திவருகின்றனர். இது தமிழர்களின் அபிலாசை நிறைவேற்றத்துக்கு எதிரான நிலைமையையே மேலும் வலுப்படுத்தும் என்பதனை மறந்தும் விடுகிறார்கள்.