(தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
சுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கையின் பொருளாதாரத்தை அனைவருக்கானதாகக் கட்டியெழுப்ப ஐக்கிய தேசியக் கட்சியால் இயலவில்லை. ஆட்சியில் இருந்தோரின் உயர்வர்க்க நலன்கள் இலங்கையர் அனைவருக்குமான ஒரு பொருளாதாரக் கொள்கையை உருவாக்க இடம் தரவில்லை. சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில் நிலைபெற்ற சமூகநலன்களைத் தொடர வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு இருந்தது.