ஜனாதிபதி தேர்தலுக்கான ரணிலின் முதலீடு

(புருஜோத்தமன் தங்கமயில்)

இலங்கை இனியும் வங்குரோத்து அடைந்த நாடல்ல என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கிறார். சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து ஏழு பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற்றுக்கொள்ளவதற்கான அனுமதி, திங்கட்கிழமை (20) கிடைத்திருக்கின்ற நிலையில், ரணில் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கையை காப்பாற்றுமா?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

இலங்கைக்கு நான்கு வருடங்களுக்கு 2.9 பில்லியன் டொலர் கடன் கொடுப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் கடந்த வருடம் செப்டெம்பர் முதலாம் திகதி செய்து கொள்ளப்பட்ட அதிகாரிகள் மட்ட இணக்கப்பாட்டுக்கு, அந்நிதியத்தின் நிறைவேற்றுச் சபை திங்கட்கிழமை (20) ஒப்புதல் வழங்கியுள்ளது. 

லெபனானாக மாறுகிறதா இலங்கை

(ச.சேகர்)

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவுவது அனைவரும் அறிந்த விடயம். 2022 ஆம் ஆண்டு என்பது நாட்டின் வரலாற்றில் மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடி நிலவிய ஆண்டாக அமைந்திருந்ததுடன், பொது மக்கள் பெரும் துயரங்களை அனுபவித்திருந்தனர். மக்களின் பொறுமை எல்லை கடந்ததன் விளைவாக, நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இராஜினாமா செய்ததோடு, அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி கோடாபய ராஜபக்ச பதவியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார்.

ரூபாய் ஏன் திடீரென மேலே பாய்ந்தது?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

இது ஆச்சரியம் தான்! ஆனால் உண்மை. நாடு சாதாரண நிலையில் இருந்த கடந்த பல தசாப்தங்களாக, ஐக்கிய அமெரிக்க டொலரோடு ஒப்பீட்டளவில் இலங்கையின் ரூபாயின் பெறுமதி குறைந்த வண்ணமே இருந்தது. ஆனால், இலங்கை வங்குரோத்து அடைந்ததாக நாட்டின் தலைவர்களே அறிவித்ததன் பின்னர், ரூபாயின் பெறுமதி கடந்த சில நாள்களாக தொடர்ச்சியாக அதிகரித்தது.

வடக்கு ‘கடல் அன்னை’ மீதான அச்சுறுத்தலைத் தடுப்பது தலையாய கடமை

(புருஜோத்தமன் தங்கமயில்)

வடக்கு கடற்பரப்பில், இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிப்பது தொடர்பிலான நடவடிக்கைகளில் கடற்றொழில் அமைச்சு ஈடுபட்டு இருக்கின்றது. 

IMF உடன்படிக்கைக்கு இலங்கையை ஆதரித்த முதல் நாடு இந்தியா

சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்தக்கட்ட கூட்டம் மார் மாதம் 20ஆம் திகதியன்று நடத்தப்படவுள்ளது. அந்தக்கூட்டத்தின் போது, இலங்கைக்கு சாதகமான பதில் கிடைக்குமென பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது. சர்வ​தேச நாணய நிதியத்தினால் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் பலவற்றை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதால் சாதாகமான சமிக்ஞை கிடைத்துள்ளது.

பிரபாகரனின் கடைசி மணிநேரங்கள்… என்னதான் நடந்தது? ஏன் மே 17 திகதி வரை காத்திருந்தனர்? Project Beacon, Operation Beacon பற்றி ஏன் பேசுகின்றார்கள் இல்லை?

By த ஜெயபாலன்March 6, 2023

“பேச்சு வாரத்தைக்கு வாருங்கள். அதனை விட வேறு வழியேதும் இல்லை” எனறார் விசாக தர்மதாஸ. இவருடைய மகன் இராணுவத்தில் இருந்தவர் கிளிநொச்சியில் நடைபெற்ற யுத்தத்தின் போது காணாமல் போயிருந்தார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களினதும் யுத்தத்தின் போது காணாமல் போன படைவீரர்களைப் பெற்றவர்களதும் அமைப்பின் ஸ்தாபகரான விசாகா தர்மதாஸாவை நான் லண்டனில் சந்தித்து நேர்காணல் ஒன்றை மேற்கொண்டிருந்தேன். இந்த நேர்காணலை தமிழர் தகவல் நடுவத்தின் காலம்சென்ற பொறுப்பாளர் வைரமுத்து வரதகுமார் ஏற்பாடு செய்துதந்திருந்தார். வரதகுமார் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கு மிக வேண்டப்பட்டவர். பிரபாகரனின் மிக நெருங்கிய வட்டத்தில் ஒருவர். எதிர்பாராத விதமாக இந்நேர்காணல் புலிகளின் ஆயுதங்கள் மௌனிப்பதற்கு ஓராண்டு முன்பாக 2008 மே 18 இல் நடைபெற்றது. பிரித்தானியாவில் சறே பகுதியில் விசாகா தர்மதாஸ தங்கியிருந்த வீட்டில் தான் இந்நேர்காணல் பதிவு செய்யப்பட்டது.

பொருளாதார மீட்சிக்கு இனப்பிரச்சினைக்கான தீர்வின் முக்கியத்துவம்

(என்.கே அஷோக்பரன்)

சுதந்திர இலங்கை என்பது, இனமுர ண்பாட்டோடுதான் பிறந்தது என்றால் அது பிழையல்ல; சர்வசன வாக்குரிமை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, வாக்காளரில் பெரும்பான்மையைக் கவர, இனரீதியான அரசியல் வசதியானது என்று கருதிய அரசியல்வாதிகளின் எண்ணத்திலிருந்து, இன மத தேசியவாதம், அரசியல் மையநீரோட்டத்தில் மெல்ல மெல்ல கலக்கத் தொடங்கியது. 

பிரபாகரனை உயிர்ப்பித்தல் எனும் பித்தலாட்டம்

(புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு இருப்பதாக, உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்திருக்கிறார். 

இந்திய அரசு தமிழ் மக்களினதும் எதிரி!

இன்னுமொரு உக்ரைனை திருமலையில் உருவாக்க அத்திவாரம்!!

மசூதிகளையும் தேவாலயங்களையும் அழிக்க இலங்கையில் ராமாயண யாத்திரைக்கு முயற்சி!!!

இந்திய அரசை நம்பியதினால் தமிழர்களுக்கு முதலில் ஏற்பட்டது அழிவு இரண்டாவது ஏற்பட்டது பேரழிவு இனி ஏற்பட இருப்பது மீள முடியாத பேரழிவு. இலங்கையில் தமிழ் – சிங்கள மக்களிடையே இருந்த முரண்பாட்டை தீர்த்து வைக்கத் திறமையற்ற, படித்த ஆனால் மூன்றாம் தர சிங்கள, தமிழ் அரசியல் தலைமைகள், தங்கள் வாக்கு வங்கிகளை நிரப்ப போட்டி போட்டு, இனவாதத் தீயை வளர்த்தன. இவர்கள் இலங்கையை அந்நிய சக்திகளிடம் கையளித்து, கடந்த 75 ஆண்டுகளாக நாட்டைச் சீரழித்து வருகின்றனர். அதன் உச்சமாக தற்போது இலங்கையின் இயற்கைத்துறைமுகமான திருகோணமலை எதிர்கால யுத்தத்தின் மையப்புள்ளியாக மாற்றப்பட்டு வருகின்றது. அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் 30 பேர்வரை இரு இரு விசேட விமானங்களில் பெப்ரவரி 14 அன்று இலங்கை வந்து பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளனர்.