வரலாற்றை அறிந்திருப்பது இன உறவின் அடித்தளம்

(மொஹமட் பாதுஷா)

கிழக்கில் தமிழ் மக்கள் செறிவாக வாழும் பிரதேசம் ஒன்றில் முஸ்லிம் போடியார் ஒருவருக்குச் சொந்தமான வயல் நிலத்தை தமிழர் ஒருவர் முறைகேடாக ஆக்கிரமிக்க முற்பட்டிருக்கின்றார். அப்போது அருகிலுள்ள வயலின் உரிமையாளரான தமிழர் அவரை விரட்டியிருக்கின்றார்.

விட்டுக்கொடுப்பு இல்லாது தீர்வில்லை

(எம்.எஸ்.எம். ஐயூப்)

ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் அமைச்சரவைக் கூட்ட முடிவுகளைத் தெரிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு பெரும்பாலும் அப்போதைய இராஜாங்க அமைச்சராக (தகவல் அமைச்சராக) இருந்த ஆனந்த திஸ்ஸ டி அல்விஸின் தலைமையிலேயே நடைபெற்றறது.

நன்றியுடன் விடை கொடுப்போம்…. மன உறுதியுடன் முன்னேறுவோம்……

(சாகரன்)

வருடம் ஒன்று விடை பெறுகின்றது….. வருடம் மற்றொன்று வரவேற்கின்றது. நம்பிக்கையுடன் மன உறுதியுடன் ஐக்கியப் பட்டு புதிய ஆண்டை வரவேற்போம்….. எதிர் கொள்வோம்…. வெற்றி பெறுவோம்…. அனைவருக்கும் புது வருட நல்வாழ்த்துகள்

இலங்கையின் பொருளாதார நோயை சமாளிக்கும் ரணில் அரசபொருளியல் (Ranil Politinomics) இறுதிப் பகுதி


(அ. வரதராஜா பெருமாள்)


வட்டிவீதங்களின் அதிகரிப்பில் அரசின் இரட்டை இலக்குகள்

  1. பண்டங்களின் அதீத விலை அதிகரிப்பு ஏற்படுகிற போது பணம் கையிருப்பில் இருந்தாலும் அல்லது வங்கிகளில் வைப்புகளாக இருந்தாலும் அல்லது வேறு வகைகளில் நீண்டகால அடிப்படையில் அரசினதோ அல்லது அரசு சார் நிறுவனங்களினதோ அல்லது பெரும் தொழில் நிறுவனங்களினதோ, கடன் பத்திரங்கள், உறுதிப் பத்திரங்கள் மற்றும் பிணை முறிகளில் முதலீடு செய்திருந்தாலும் அந்தப் பணங்களின் மெய்யான பெறுமதி வீழ்ச்சியடையும் என்பது புரிந்து கொள்ளப்படக் கூடிய ஒன்றே. உயர்ந்த வருமானம் பெறுவோரும், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர் பெற்றோரும் மற்றும் பணக்காரர்களுமே வங்கிகளில் தமது பணத்தை பெருந்தொகையில் வைப்புக்களாக வைத்திருப்பர். அதேபோல, பெரும் பணக்காரர்களும் பெரும் தொழில் நிறுவனங்களுமே அரசு சார் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வர்.
    இவ்வாறாக வைப்பு செய்யப்பட்டிருந்த அல்லது முதலீடு செய்யப்பட்டிருந்த அனைத்தினதும் மெய்யான பணப் பெறுமதி வீழ்ச்சியடைந்திருக்கிறது.
    இதனால் உயர் மத்திய தர வர்க்கத்தினரதும் பெரும் பணக்காரர்களினதும் கோபத்துக்கும் வெறுப்புக்கும் ஆட்சியாளர்கள் உள்ளானது இயல்பானதே. அறகலயவுக்கு அந்த வகையினர் தற்காலிகமாகவேனும் ஆதரவு அளித்ததற்கு இதுவும் ஒரு காரணமே.
    அரசின் பிழையான கொள்கைகளாலும் பாதகமான செயல்களாலும் சாதாரண பாமர மக்கள் எவ்வளவுதான் பாதிக்கப்பட்டாலும், அதனால் அவர்கள் ஆட்சியாளர்கள் மீது எவ்வளவுதான் வெறுப்பும் ஆத்திரமும் கொண்டாலும் அதனை அட்சியாளர்கள் பெரிதாக பொருட்படுத்துவதில்லை.
    2
    அதனை ஆட்சியாளர்கள் தமது பிரச்சார யந்திரங்களைக் கொண்டு திசை மாற்றி விடுவார்கள் அல்லது தமது அதிகார யந்திரங்களைக் கொண்டு பரந்துபட்ட பொதுமக்களின் ஆத்திரமும் வெறுப்பும் விரக்தியும் ஓர் அரசியல் எழுச்சியாக கிளர்ந்து விடாமல் அடக்கி விடுவார்கள் – ஒடுக்கி விடுவார்கள்: சட்டம், அமைதி மற்றும் பாதுகாப்பு என்ற பெயரில் அவற்றிற்கான நியாயங்களையும் தமது செல்வாக்குக்கு உட்பட்ட ஊடகங்களினூடாக கட்டியெழுப்பி விடுவார்கள்.

இலங்கையின் பொருளாதார நோயை சமாளிக்கும் ரணில் அரசபொருளியல் (Ranil Politinomics) பகுதி – 6


(அ. வரதராஜா பெருமாள்)


வங்கி வட்டி வீதங்கள் அதிகரித்தன விலை வீழ்ச்சி ஏற்படவில்லை

  1. கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து நிலையான வைப்புகளுக்கு வழங்கப்படும் வட்டி வீதங்களையும், வழங்கும் கடன்களுக்கு அறவிடும் வட்டி வீதங்களையும் வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு அதிகரித்துள்ளன. அதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மத்திய வங்கியினூடாக ஊக்குவித்துள்ளது. மத்திய வங்கி வர்த்தக வங்கிகளுக்குக் கொடுக்கும் கடனுக்கு வழங்கும் வட்டி வீதத்தை 15 தசம் (புள்ளி) .5 சதவீதமாக்கி, வர்த்தக வங்கிகள் மத்திய வங்கியில் வைக்கும் வைப்புக்கு வட்டியாக 14 தசம் .5 சதவீதமுமென ஆக்கியுள்ளது. அதேவேளை, அரச வர்த்தக வங்கிகள் வெளியார் மேற் கொள்ளும் நிலையான வைப்புகளுக்கு வழங்கும் வட்டி வீதத்தை 16 சதவீதம் தொடக்கம் 24 சதவீதம் வரை அறிவித்துள்ளன.

குட்டையை குழப்புவாரா பசில்?

(எம்.எஸ்.எம் ஐயூப்)

அமெரிக்காவுக்குச் சென்றிருந்த முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ, ஞாயிற்றுக்கிழமை (20) நாடு திரும்பிய போது அவரை வரவேற்க, கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றிருந்த கூட்டத்தைப் பார்க்கும் போது, 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர், மஹிந்த ராஜபக்‌ஷவைப் பார்க்க, மக்கள் சாரிசாரியாக திஸ்ஸமகாராமையிலுள்ள ‘கால்டன்’ என்று பெயரிடப்பட்டுள்ள அவரது இல்லத்துக்குச் சென்றமை நினைவுக்கு வருகிறது.

இலங்கையின் பொருளாதாரநோயைசமாளிக்கும் ரணில் அரசபொருளியல் (Ranil Politinomics) பகுதி – 5

(அ. வரதராஜா பெருமாள்)

உலகவிலைஉயர்வாலேயே ஏற்றுமதிவருமானஅதிகரிப்பு

  1. கடந்தசிலமாதங்களாகஏற்றுமதிவருமானங்கள் அதிகரித்திருப்பதாகஅரசஅறிக்கைகள் அடிக்கடிதெரிவிக்கின்றன. இதனுடையஅர்த்தம் ஏற்றுமதிசெய்யப்படும் பொருட்கள் தொகைரீதியில் குறிப்பிடத்தக்கஅளவுக்குஅதிகரித்திருக்கின்றனஎன்பதல்ல. ரஸ்ய –உக்ரைன் யுத்தத்தின் காரணமாகவும் அதனையொட்டி ரஸ்யாவின் சர்வதேசவர்த்தகத்துக்குஎதிராகஅமெரிக்கவிதித்துள்ளபொருளாதாரதடையினாலும் பொதுவாகவேஉலகசந்தையில் பொருட்களின் விலைகள் உயர்ந்திருக்கின்றன. இலங்கையின் ஏற்றுமதிகள் பெரும்பாலும் அமெரிக்கா,ஐரோப்பியநாடுகள்,பிரித்தானியாமற்றும் கனடாஆகியநாடுகளுக்கேசெல்கிறது. இந்தநாடுகள் அனைத்திலும் ஏறத்தாழஅனைத்துவகைப் பொருட்களினதும் விலைகள் அதிகரித்துள்ளன. இந்தநிலையில் இலங்கைஏற்றுமதிசெய்யும் பொருட்களினதுவிலைகளும் கணிசமாகஅதிகரித்திருக்கின்றன.

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு


(சாகரன்)

ரூபாயில் உழைத்து ரூபாயில் செலவு செய்து வாழ்ந்த காலம் ஒன்று இருந்தது… டாலரில் உழைத்து ரூபாயில் செலவு செய்தது என்று இன்னொரு காலம் இருந்து ரூபாயில் உழைத்து டாலரில் செலவு செய்வதாக மாறி இருப்பது இன்றைய காலம். இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலமையை இவ்வாறுதான் சொல்லத் தோன்றுகின்றது.

இலங்கையின் பொருளாதார நோயை சமாளிக்கும் ரணில் அரசபொருளியல் (Ranil Politinomics)பகுதி – 4


(அ. வரதராஜா பெருமாள்)


அரசு சார்ந்தோர்க்கு தாராளங்கள் மக்கள் முதுகில் ஏற்றும் சுமைகள்

12. தாராளவாத பொருளாதாரக் கொள்கையானது, உற்பத்திகளும், விற்பனைகளும், ஏற்றுமதிகளும் இறக்குமதிகளும், விநியோகங்களும் கொள்வனவுகளும் முழுக்க முழுக்க சந்தை செயற்பாடுகளால் நடைபெற வேண்டுமே தவிர அரசின் செயற்பாடுகளோ தலையீடுகளோ அதில் இருக்கக் கூடாது என்கிறது. இதனை சொல்லித்தான் 1977ல் ஜே.ஆர். ஜெயவர்த்தனா திறந்த பொருளாதாரக் கொள்கையை இலங்கையில் நடைமுறைப்படுத்தினார்.

ஒரு பழங்கதை சொல்கிறேன் கேளுங்கள்…..

(Rathan Chandrasekar)

சென்னை. கோடம்பாக்கம். ஜக்கரியா காலனி.

பெண்களும் ஆண்களுமாக இலங்கைப் போராளிக் குழுவினர் சிலர் அங்கு வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியிருந்தார்கள்.

நெடிய வலுவான வசீகரமான தோழர் ஒருவர்தான், அவர்களின் தலைவர் என்று அறியப்பட்டார்.