‘கடலட்டை’ போர்வையில் வடக்கில் நுழைந்த சீனா

இலங்கையின் வடக்கில், கடலட்டை பண்ணை நிறுவ எடுக்கப்பட்ட தீர்மானத்தை தமிழ்க்கட்சிகளின் பிரநிதிகள் பலரும் கடுமையாக எதிர்த்தனர். இதனூடாக சீனாவின் ஆதிக்கம் வடக்கில் நிலைக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகுமென எச்சரித்தனர்.

மலையக தலைமைகளே ‘காக்கா முட்டை’ விளையாடாதீர்கள்!

மக்கள் நலன்சார்ந்த சிந்தனை இல்லாத எந்தத் தலைவர்களும் வெகு சீக்கிரத்தில் தூக்கியெறிப்படுவார்கள் என்பதை அரசியல் தலைமைகள் ஒவ்வொரு நொடியும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும். 

போதையால் தள்ளாடும் தமிழ் இளைஞர் சமூகம்

(புருஜோத்தமன் தங்கமயில்)

வடக்கில், என்றைக்கும் இல்லாத அளவுக்கு போதைப்பொருள் பாவனை, கணிசமாக அதிகரித்திருப்பதாக வைத்தியத்துறையினரும் பாடசாலை சமூகத்தினரும் தெரிவிக்கின்றனர். இதனால், சமூகக் குற்றங்களும் இளவயதினரின் தொடர் மரணங்களும் பதிவாகி வருகின்றன. 

இலங்கை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறு – ஒரு மீள்பார்வை

  1. இவ்வருடம் ஜூலை 03ம் திகதியுடன் இலங்கையின் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு 65(2008) வயதாகின்றது. 1943 இலங்கையில் கம்யூனிஸ்ட் இயக்கம் ஜூலை 03ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு முன்னர் இலங்கையைச் சார்ந்த கம்யூனிஸ்ட்டுகள் 1935ல் ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது அரசியல் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சியில் அங்கம் வகித்தனர். இக்கட்சியின் பிரதான இலக்குகள் இரண்டாக இருந்தன. ஒன்று, அப்போது இலங்கையை தனது காலனித்துவப்பிடியில் வைத்திருந்த பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்திடமிருந்து நாட்டை விடுவித்து, இலங்கையை ஒரு சுதந்திர நாடாக்குவது. இரண்டாவது, சுதந்திர இலங்கையில் சோசலிச அரசொன்றை நிறுவுவது. இந்த இரண்டு நோக்கங்களையும் அடைவதற்காக, பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் அடக்குமுறைகளின் கீழ் லங்கா சமசமாஜக் கட்சி கடுமையாகப் போராடியது.

தேசிய சபையும் தமிழ், முஸ்லிம்களின் வகிபாகமும்

(மொஹமட் பாதுஷா)

இந்தியாவின் சினிமாத்துறை, அந்நாட்டின் அரசியலுக்கு பல நல்ல அரசியல்வாதிகளைக் கொடுத்துள்ளது. நமது நாட்டின் அரசியலானது, நல்ல நடிகர்களை உருவாக்கி இருக்கின்றது. ஆட்சியாளர்கள் உள்ளடங்கலாக, பெருந்தேசிய அரசியல்வாதிகள், சிறுபான்மை அரசியல்வாதிகள் என ஏகப்பட்டோர், இந்த நடிகர்கள் பட்டியலில் உள்ளடங்குகின்றனர். 

திலீபனை அவமானப்படுத்திய விடாக்கண்டன்களும் கொடாக்கண்டன்களும்

(புருஜோத்தமன் தங்கமயில்)

(தமிழ் மக்கள் மத்தியில் நிலவும் போலித் தேசியத்தை உரித்துக் காட்டுவதற்கு இந்த பதிவு)

வாக்கு அரசியலுக்காக எதையும் செய்யத் துணியும் பொறுக்கிக் கூட்டங்கள், இனம் ஒன்றின் விடுதலை அரசியலை ஆக்கிரமித்துவிட்டால், அந்த இனம் இலகுவாக அரசியல் நீக்கம் செய்யப்பட்டுவிடும். 

ராஜபக்‌ஷர்களின் ஆதரவுத்தளமும் அரசியல் எதிர்காலமும்

(என். கே அஷோக்பரன்)

கோட்டாபய ராஜபக்‌ஷவின் பதவி விலகலோடு, ராஜபக்‌ஷர்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள் என்று எவரேனும் எண்ணினால், அது தவறு. ராஜபக்‌ஷர்கள் என்போர், அடுத்த ‘பண்டாரநாயக்காக்கள்’. அவர்களை, குடும்ப அரசியல் என்ற அடையாளத்துக்குள் சுருங்கிப்பார்ப்பது தவறாகும்.

சம்பந்தனின் பதவி வெறியைத் தணிக்குமா தமிழரசின் குழு?

(புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை, அவர் வகித்து வரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுமாறு கோருவதற்காக, சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவை இலங்கை தமிழரசுக் கட்சி அமைத்திருக்கின்றது. 

இன்னொரு மக்கள் எழுச்சிக்கான சாத்தியமும் சவால்களும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இலங்கையின் இன்றைய நெருக்கடி நிலை மக்களை நிலைகுலைய வைத்துள்ளது. தீபாவளிக்குத் தீர்வு வரும் என்பது போல, ‘இலவுகாத்த கிளி’யாக, நிலைமை சீராகும் என்று இலங்கை மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். 

‘அறகலய’ எனும் அரசியல் ஆயுதம்

(என். கே அஷோக்பரன்)

சிங்களத்தில் ‘அறகலய’ என்றால், ‘போராட்டம்’ என்று பொருள். இந்தாண்டு இலங்கையில் இடம்பெற்ற ‘கோட்டா கோ ஹோம்’ போராட்டம் பெரும் மக்கள் எழுச்சியானது. இது, ‘அறகலய’ என்றே பொதுவில் இனங்காணப்படுகிறது.