இலங்கையின் பொருளாதார மீட்சி யார் கையில்?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

நாட்டின் பொருளாதாரம் எப்படியாவது மீண்டுவிடும் என்று முழுமையாக நம்புவோர் இருக்கிறார்கள்; பகுதியாக நம்புவோரும் இருக்கிறார்கள். “வாய்ப்பில்லை ராஜா” என்று அடம்பிடிப்போரும் இருக்கிறார்கள். 

ஈரோஸ் பாலகுமார் ஒரு பச்சோந்தி வரலாறு

(By முரளி, முன்னாள் புலி உறுப்பினர்)

ஈரோஸ் அமைப்பு இராணுவபலம் மிக்கதல்ல. இராணுவ வழிமுறைகள் அவ்வளவாக கைவரப்பெற்றதுமல்ல. இடதுசாரி சித்தாந்தங்கள் உள்ளிட்ட சித்தாந்தங்களை கற்று அதுபற்றி விவாதித்துக் கொண்டிருந்த அமைப்பு. ஈரோஸ் பற்றி நகைச்சுவையாக சில விடயங்கள் சொல்வார்கள். ஒன்று, பேசியே தமிழீழம் பிடிக்கலாமென நினைத்தார்கள் என்பது. (அதாவது, விஜயகாந்த் பக்கம்பக்கமாக வசனம் பேசி எதிராளிகளை தெறிக்க விடுவதை போல). அதுபோல, ஒரு விடயத்தில் உறுதியாக இல்லாமல் நழுவிச்செல்வதை ‘ஈரோஸ்பாணி’ என்பார்கள். உறுதியாக இல்லாமல், பாம்பக்கு தலையும், மீனுக்கு வாலும் காட்டும் ஆட்களை இயக்கங்கள் பல இருந்தகாலத்திலேயே ‘ஆள் ஈரோஸ்காரன்’ என்று நகைச்சுவையாக கூறுவார்கள்.”

மோசமானவர்கள் எனக் கருதப்படுபவர்களுக்கு மக்கள் வாக்களிப்பது ஏன்?

(என். கே அஷோக்பரன்)

கடந்த பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் இரண்டாவது அதிகப்படியாக 316,544 விருப்பு வாக்குகள் பெற்று பாராளுமன்ற உறுப்பினராகியவர் பிரசன்ன ரணதுங்க. ‘நல்லாட்சி அரசாங்கம்’ அமைந்த 2015 பொதுத் தேர்தலில் கூட, கம்பஹா மாவட்டத்தில் அதிகப்படியான விருப்பு வாக்குகளாக 384,448 வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தவர் பிரசன்ன ரணதுங்க. அன்று கம்பஹா மாவட்டத்தில் ஆளும் கட்சியாக அமைந்த ஐக்கிய தேசிய கட்சி பட்டியலில் முதலிடம் பிடித்த ரஞ்சன் ராமநாயக்க பெற்றுக்கொண்ட விருப்பு வாக்குகள் 216,463 தான்! 

வழமைக்கு திரும்பிய தென்இலங்கை அரசியல்

(புருஜோத்தமன் தங்கமயில்)

மக்கள் போராட்டத்துக்குப் பயந்து, நாட்டை விட்டுத் தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, கடந்த வார இறுதியில் நாடு திரும்பி இருக்கிறார். அவரை, விமான நிலையத்தில் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களும் முக்கியஸ்தர்களும் வரவேற்றனர். 

அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது குறைப்பு; யார் விட்ட பிழை?

(புருஜோத்தமன் தங்கமயில்)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடந்த செவ்வாய்க்கிழமை (30) முன்வைத்த இடைக்கால வரவு -செலவுத் திட்டத்தில், அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது எல்லையை 60ஆக நிர்ணயிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அரச மற்றும் அரச சார் நிறுவனங்கள் பலவற்றில், ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது எல்லை 65ஆகக் காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில், இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில், 60 வயதைக் கடந்துவிட்ட அனைத்து அரச ஊழியர்களும், எதிர்வரும் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதியோடு, ஓய்வுபெற்றுச் செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

தடைகளைத் தாண்டிய பயணத்தை ஆரம்பிக்கலாமா?

தெரிவு செய்யப்பட்ட 305 பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த இறக்குமதித் தடை இந்த வாரம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்திருந்தமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டிருந்ததை காண முடிந்தது.

ஜூலை 9 உம் கற்கவேண்டிய வலிநிறைந்த பாடங்களும்

இலங்கையை பொறுத்தவரையில் கறைபடிந்த நாட்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. 2022 ஆம் ஆண்டில், இலங்கை வரலாற்றில் பேசப்பட்ட பல சம்பவங்கள் பசுமரத்தில் ஆணி அடித்தாற் போல் பதிவாகியுள்ளன.  

சிந்தனையில் மாற்றம் வேண்டும்

நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டிக்கொடுப்பதில், மாடாய் உழைத்து, ஓடாய்த் தேயும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையின் இன்னல்களைப் பார்க்குமிடத்து, இந்த நவீன காலத்தில் இப்படியொரு சமூகம் வாழ்ந்துகொண்டு இருக்கின்றதா என, பலரும் கேள்வி கேட்கத்தான் செய்கின்றனர்.

ஆட்சியைப் பிடிக்கும் மகுட வாசகம் ‘சிஸ்டம் சேஞ்ச்’

(என். கே அஷோக்பரன்)

‘சிஸ்டம் சேஞ்ச்’  (கட்டமைப்பு மாற்றம்) என்ற சொற்றொடர், சஜித் பிரேமதாஸ முதல் அநுர குமார திஸாநாயக்க வரை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும், உச்சரிக்கும் மந்திரமாக மாறியுள்ளது. 

சர்வதேச நாணய நிதியம்: தரித்திரத்தின் சரித்திரம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை, இன்னொருமுறை கையேந்துவது என்று முடிவாகி, நீண்ட காலமாகிவிட்டது. எப்போது அக்கடன் கிடைக்கும் என்பதே, இப்போதைய பிரச்சினை. ஊடகங்களும் பொருளியல் அறிஞர்களும் அரசியல் விமர்சகர்களும் எழுப்பும் கேள்வி அதுவே!