என்னதான் நடக்கப் போகுது…..? என்னதான் நடக்க வேண்டும்…..?

(சாகரன்)

நாடுகளில் சட்டச் சிக்கல் என்று பதவியில் இருந்து இறக்க முடியாது என்பதற்கு எல்லாம் தீர்ப்பாக அமைவது மக்களின் விடாப்பிடியான போராட்டங்களே. வரலாறு இதனை எழுதித்தான் வந்திருக்கின்றது. இன்று இலங்கையும் அதனை நோக்கித்தான் நகர்ந்து கொண்டிருக்கின்றது.

நோயைக் குணப்படுத்துவதா? அறிகுறியை மறைப்பதா?

(என்.கே. அஷோக்பரன்)

சர்வதேச நாணய நிதியத்தின் உத்தியோகத்தர் குழாமொன்று ஜூன் 20 முதல் 30 வரை, பத்து நாள்கள், இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மற்றும் இலங்கைக்கான விரிவான பொருளாதார சீர்திருத்த திட்டம் ஆகியன பற்றி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமரும் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க, திறைசேரியின் செயலாளர் கே.எம். மஹிந்த சிறிவர்தன, அரசாங்க மற்றும் மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தனியார் துறை பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புகள், சர்வதேச நாணய நிதியத்தின் அபிவிருத்தி பங்காளிகள் ஆகியோரைச் சந்தித்து, பேச்சுவார்த்தைகளை நடத்திவிட்டுத் திரும்பி இருக்கிறார்கள்.

வளங்களைத் தொலைக்கும் தேசமும் நிலங்களைத் தொலைக்கும் மக்களும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இலங்கையின் சக்தி நெருக்கடி எழுப்பியுள்ள கேள்விகள் பல. மின்சாரம், எரிபொருள், எரிவாயு என்பவற்றைப் பெற்றுக்கொள்ளுவதில் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் சொல்லி மாளாதாவை.

பிடில் வாசிக்கும் நவீன நீரோக்கள்

(மொஹமட் பாதுஷா)

உரோம் நகரம் பற்றி எரிந்த போது, நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தார் என்று சொல்வார்கள். அதுபோல, இலங்கை மக்கள் பெரும் அவலத்தைச் சந்தித்துள்ள இக்காலப் பகுதியில், ஆட்சியாளர்கள் மட்டுமன்றி, பொறுப்பு வாய்ந்த எல்லாத் தரப்புகளும், கிட்டத்தட்ட பிடில் வாசிக்கும் நவீனகால நீரோக்கள் போலவே செயற்படுகின்றன.

இலங்கையின் மின்சக்தியை கபளீகரம் செய்யும் இந்தியா

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இலங்கையர்களின் இன்றைய நெருக்கடி, அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றவியலாத ஓர் அரசாங்கமும் அதை வீட்டுக்கு அனுப்பவியலாத மக்களும் பேச்சு மன்றமாய் பாராளுமன்றமும் திகழ்கின்ற ஒரு நாட்டில், எதிர்பார்ப்பதற்கு அதிகமில்லைத் தான்!

பொய் பொய் பொய்

(என்.கே.அஷோக்பரன்)
இந்தா இன்றைக்கு எரிபொருள் கப்பல் வருகிறது. இல்லை, ஒரு சின்ன சிக்கல், ஒருநாள் கழித்துத்தான் எரிபொருள் கப்பல் வரும். இல்லை கப்பல் அடுத்த இரண்டு நாட்களுக்கு வராது. இப்படி வராத கப்பல், இன்றைக்கு வருகிறது, நாளைக்கு வருகிறது என்று ஆயிரம் பொய்க்கதைகளை சொல்லி தனக்கிருந்த கொஞ்ச மரியாதையையும் கெடுத்துக்கொண்டிருக்கிறார் இலங்கையின் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர.

மக்கள் போராட்டம் வெல்லட்டும்

உறவுகளே கீழுள்ள இணைப்பை சொடுக்கி தங்கள் ஆதரவை தெரிவியுங்கள். முக்கியமான அரசியல் கோரிக்கையிற்கான போராட்டம் இது

https://forms.gle/vqp3Np16cGEGZhFh6

நீண்ட காத்திருப்பு: சீரழியும் நாட்டின் கதை

(புருஜோத்தமன் தங்கமயில்)

எரிபொருளை ஏற்றி வந்த வாகனத்தை தேங்காய் உடைத்து வரவேற்ற காட்சியொன்று வடமராட்சிப் பகுதியில், கடந்த சில நாள்களுக்கு முன்னர் பதிவானது. அதுபோல, எரிபொருள் தாங்கி வாகனத்தில் இருந்து, சட்டத்துக்கு புறம்பாக வைத்தியர் ஒருவர், வெற்றுக் கான்களில் பெற்றோலை பெற்று, தன்னுடைய வாகனத்தில் எடுத்துச் செல்லும் காட்சியும் ஊடகங்களில் செய்தியானது.

நீதி பலவாயின் நாட்டை நிமிர்ந்தெழச் செய்வது கடினமாகும்

நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் எதற்கு, அதைச் சாப்பிடமுடியுமா எனப் பலரும் கேள்வி எழுப்புகின்றனர் என, பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) உரையாற்றிய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ, ஸ்திரமான ஆட்சியொன்று இருக்கிறதா, ஜனநாயகம் பேணப்படுகிறதா? என சர்வதேசமும் சர்வதேச நிறுவனங்களும் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர் என பதிலளித்தார்.